சந்திராயன் – 3 எடுத்த நிலவின் காணொளி: இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!
Aug 21, 2025, 09:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சந்திராயன் – 3 எடுத்த நிலவின் காணொளி: இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!

Web Desk by Web Desk
Aug 8, 2023, 11:32 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திராயன் – 3 விண்கலம், நிலவின் மேற்பரப்பைக் காணொளியாக எடுத்து அனுப்பி இருக்கிறது. இது இஸ்ரோ விஞ்ஞானிகளிடம்  மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் -2 விண்கலம், நிலாவில் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. எனினும், மனம் தளராத இஸ்ரோ விஞ்ஞானிகள் 4 ஆண்டுகள் இடைவிடாத தொடர் முயற்சிக்குப் பிறகு, சந்திராயன் -3 விண்கலத்தை உருவாக்கி கடந்த மாதம் 14-ம் தேதி நிலவின் தென் துருவத்துக்கு அனுப்பினர்.

இந்த விண்கலம் தனது 23 நாட்கள் பயணத்துக்குப் பிறகு, கடந்த 5-ம் தேதி இரவு 7 மணியளவில் வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது. தற்போது, நிலவின் சுற்று வட்டப் பாதையில் பயணித்து வரும் சந்திராயன் -3 விண்கலம், நிலவின் சுற்று வட்டப் பாதைக்குள் நுழைந்த காணொளியை இஸ்ரோ கட்டுபாட்டு அறைக்கு அனுப்பி இருக்கிறது. இந்தக் காணொளியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் வெளியிட்டிருக்கிறார்கள்.

அந்த காணொளி பதிவை Retweet செய்து சிங்கப்பூர் தூதர் சைமன் வாங் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் “சந்திரயான்-3 நிலவு நெருங்கும் கட்டத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். என்ன ஒரு சிறந்த புகைப்படம்! ” என்று தெரிவித்தார்.

Big congratulations to the Chandrayaan-3 moon insertion phase. What a great pic ! HC Wong https://t.co/ogeExbXq6r

— Singapore in India (@SGinIndia) August 7, 2023

நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் சுற்றி வரும் சந்திரயான் -3 விண்கலம், அதிகபட்சம் 18,072 கிலோ மீட்டர், குறைந்தபட்சம் 114 கிலோ மீட்டர் என்ற அளவில் நிலவின் சுற்றுப்பாதையில் சுற்றி வந்தது. இதனுடைய உயரத்தை குறைக்கும் சவாலான பணியில் பெங்களூரில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு அதனுடைய உயரத்தை குறைத்து உள்ளனர்.

இதனால், விண்கலம் திட்டமிட்டபடி வரும் 23-ம் தேதி நிலவின் மேற்பரப்பில் மென்மையான முறையில் தரையிறக்கம் செய்ய முயற்சி செய்யப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

Tags: chandrayaan 3 updatechandrayaan 3 launchchandrayaan 3 latest newschandrayaan 3 newschandrayaan 3 moon missionisro moon mission chandrayaan 3chandrayaan 3 launch liveChandrayan 3Chandrayaan 3
ShareTweetSendShare
Previous Post

செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விடிய விடிய விசாரணை!

Next Post

இந்திய தொலைத்தொடர்புத் துறையில் ஒரு புரட்சி – ஜிசாட் -24

Related News

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலவசம் – சுற்றுலா பயணிகளை ஈர்க்க தாய்லாந்து நடவடிக்கை!

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies