தமிழகத்தில் பாரத மாதா சிலை வைக்கவே உரிமை இல்லாத நிலை உள்ளது - பாஜக தொண்டர்கள் கண்டனம்
Jan 14, 2026, 04:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் பாரத மாதா சிலை வைக்கவே உரிமை இல்லாத நிலை உள்ளது – பாஜக தொண்டர்கள் கண்டனம்

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 8, 2023, 07:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தேனி, புதுக்கோட்டை, திருச்சி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, விருதுநகர், தர்மபுரி, நாமக்கல், விழுப்புரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 10 பாஜக அலுவலகங்களைக் கடந்த மார்ச் 10ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி நட்டா அவர்கள் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த பாஜக புதிய அலுவலகத்தில் கூடுதல் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், . அலுவலக வளாகத்தில் கருங்கல்லால் ஆன பாரத மாதா சிலையை நிறுவும் பணிகள் நடைபெற்று வந்தன.

வருகின்ற ஆகஸ்ட் 9,10,11 ஆகிய தேதிகளில் மூன்று நாட்களில் விருதுநகரில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை “என் மண், என் மக்கள்” பாத யாத்திரையும் நடைபெற உள்ளது.

இதையடுத்து, விருதுநகர் வட்டாசியர் மற்றும் கோட்டாச்சியர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் காவல்துறையினருடன் வந்து அனுமதி பெறாமல் பாரத மாதா சிலையை வைத்துள்ளீர்கள்.

எனவே உடனடியாக பாரத மாதா சிலையை அகற்ற வேண்டும் என்றனர். எங்கள் பட்டா நிலத்தில் தான் உள்ளது, சிலையை அகற்ற முடியாது என்று பாஜகவினர் வாக்குவாத்ததில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பாஜக மாநில செயலாளரும் கன்னியாகுமரி பெருங்கோட்ட பொறுப்பாளருமான பொன்.பாலகணபதி சம்பவ இடத்துக்கு வந்து அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் சிலையை மூடி வைப்பது என்றும், நாளை முறைப்படி அனுமதி கேட்பது என்றும் முடிவெடுக்கப்பட்டு சிலை துணியால் மூடப்பட்டது.

விருதுநகர் வட்டாசியர் மற்றும் கோட்டாச்சியர் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் காவல்துறையினர் உள்ளிட்ட அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் இரவு 12 மணிக்கு மேல் விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த பாஜக புதிய அலுவலகத்தில் பாஜக அலுவலக வாசலில் உள்ள இரும்புக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த காவல்துறையினர், நவீன இயந்திரம் கொண்டு சுமை தூக்கும் தொழிலாளர்களைக் மூலம் பாரத மாதா சிலையை அப்புறப்படுத்தி வாகனத்தில் ஏற்றி வட்டாச்சியர் அலுவலகம் கொண்டு சென்றனர்.

இது குறித்து பாஜக தொண்டர்கள், அண்ணாமலை நடைபயணத்தை தடுக்க திமுக தூண்டுதலின் பேரில் இவ்வாறு வருவாய் துறையும், காவல் துறையும் செயல்படுவதாக தெரிவித்தனர்.

மேலும் தங்கள் தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்” நடைப் பயணத்தை எந்த தீய சக்தியாலும் தடுக்க முடியாது. இந்த அத்துமீறலுக்கெல்லாம் காவல்துறை பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும், தமிழகத்தில் பாரத மாதா சிலை வைக்கவே உரிமை இல்லாத நிலை இந்த ஊழல் திமுக ஆட்சியில் உள்ளது என்று கூறினார்கள்.

Tags: bjppoliceViruthunagar BJPBJP OfficeViruthunagar BJP OfficeViruthunagar police
ShareTweetSendShare
Previous Post

அரை இறுதியில் வெற்றி… இறுதிப் போட்டியில் சிக்ஸர்: பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி!

Next Post

சென்னை ஆர்எஸ்எஸ் தியாகிகள் தினம் இன்று..

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies