தமிழகத்தில் பாரத மாதா சிலை வைக்கவே உரிமை இல்லாத நிலை உள்ளது - பாஜக தொண்டர்கள் கண்டனம்
Oct 5, 2025, 11:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் பாரத மாதா சிலை வைக்கவே உரிமை இல்லாத நிலை உள்ளது – பாஜக தொண்டர்கள் கண்டனம்

Web Desk by Web Desk
Aug 8, 2023, 07:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தேனி, புதுக்கோட்டை, திருச்சி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, விருதுநகர், தர்மபுரி, நாமக்கல், விழுப்புரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 10 பாஜக அலுவலகங்களைக் கடந்த மார்ச் 10ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி நட்டா அவர்கள் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த பாஜக புதிய அலுவலகத்தில் கூடுதல் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், . அலுவலக வளாகத்தில் கருங்கல்லால் ஆன பாரத மாதா சிலையை நிறுவும் பணிகள் நடைபெற்று வந்தன.

வருகின்ற ஆகஸ்ட் 9,10,11 ஆகிய தேதிகளில் மூன்று நாட்களில் விருதுநகரில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை “என் மண், என் மக்கள்” பாத யாத்திரையும் நடைபெற உள்ளது.

இதையடுத்து, விருதுநகர் வட்டாசியர் மற்றும் கோட்டாச்சியர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் காவல்துறையினருடன் வந்து அனுமதி பெறாமல் பாரத மாதா சிலையை வைத்துள்ளீர்கள்.

எனவே உடனடியாக பாரத மாதா சிலையை அகற்ற வேண்டும் என்றனர். எங்கள் பட்டா நிலத்தில் தான் உள்ளது, சிலையை அகற்ற முடியாது என்று பாஜகவினர் வாக்குவாத்ததில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பாஜக மாநில செயலாளரும் கன்னியாகுமரி பெருங்கோட்ட பொறுப்பாளருமான பொன்.பாலகணபதி சம்பவ இடத்துக்கு வந்து அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் சிலையை மூடி வைப்பது என்றும், நாளை முறைப்படி அனுமதி கேட்பது என்றும் முடிவெடுக்கப்பட்டு சிலை துணியால் மூடப்பட்டது.

விருதுநகர் வட்டாசியர் மற்றும் கோட்டாச்சியர் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் காவல்துறையினர் உள்ளிட்ட அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் இரவு 12 மணிக்கு மேல் விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த பாஜக புதிய அலுவலகத்தில் பாஜக அலுவலக வாசலில் உள்ள இரும்புக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த காவல்துறையினர், நவீன இயந்திரம் கொண்டு சுமை தூக்கும் தொழிலாளர்களைக் மூலம் பாரத மாதா சிலையை அப்புறப்படுத்தி வாகனத்தில் ஏற்றி வட்டாச்சியர் அலுவலகம் கொண்டு சென்றனர்.

இது குறித்து பாஜக தொண்டர்கள், அண்ணாமலை நடைபயணத்தை தடுக்க திமுக தூண்டுதலின் பேரில் இவ்வாறு வருவாய் துறையும், காவல் துறையும் செயல்படுவதாக தெரிவித்தனர்.

மேலும் தங்கள் தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்” நடைப் பயணத்தை எந்த தீய சக்தியாலும் தடுக்க முடியாது. இந்த அத்துமீறலுக்கெல்லாம் காவல்துறை பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும், தமிழகத்தில் பாரத மாதா சிலை வைக்கவே உரிமை இல்லாத நிலை இந்த ஊழல் திமுக ஆட்சியில் உள்ளது என்று கூறினார்கள்.

Tags: bjppoliceViruthunagar BJPBJP OfficeViruthunagar BJP OfficeViruthunagar police
ShareTweetSendShare
Previous Post

அரை இறுதியில் வெற்றி… இறுதிப் போட்டியில் சிக்ஸர்: பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி!

Next Post

சென்னை ஆர்எஸ்எஸ் தியாகிகள் தினம் இன்று..

Related News

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை – பயணிகள் அச்சம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

அரசு கேபிளில் தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கும் இடம் வழங்காத பாசிச திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!

திருமுல்லைவாயல் அருகே கஞ்சா போதையில் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!

சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – குடோனிலும் தீ பரவியதால் பதற்றம்!

தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு – இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் பாயந்தது வழக்கு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies