தமிழகத்தில் பாரத மாதா சிலை வைக்கவே உரிமை இல்லாத நிலை உள்ளது - பாஜக தொண்டர்கள் கண்டனம்
Aug 16, 2025, 09:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் பாரத மாதா சிலை வைக்கவே உரிமை இல்லாத நிலை உள்ளது – பாஜக தொண்டர்கள் கண்டனம்

Web Desk by Web Desk
Aug 8, 2023, 07:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தேனி, புதுக்கோட்டை, திருச்சி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, விருதுநகர், தர்மபுரி, நாமக்கல், விழுப்புரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 10 பாஜக அலுவலகங்களைக் கடந்த மார்ச் 10ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி நட்டா அவர்கள் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த பாஜக புதிய அலுவலகத்தில் கூடுதல் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், . அலுவலக வளாகத்தில் கருங்கல்லால் ஆன பாரத மாதா சிலையை நிறுவும் பணிகள் நடைபெற்று வந்தன.

வருகின்ற ஆகஸ்ட் 9,10,11 ஆகிய தேதிகளில் மூன்று நாட்களில் விருதுநகரில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை “என் மண், என் மக்கள்” பாத யாத்திரையும் நடைபெற உள்ளது.

இதையடுத்து, விருதுநகர் வட்டாசியர் மற்றும் கோட்டாச்சியர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் காவல்துறையினருடன் வந்து அனுமதி பெறாமல் பாரத மாதா சிலையை வைத்துள்ளீர்கள்.

எனவே உடனடியாக பாரத மாதா சிலையை அகற்ற வேண்டும் என்றனர். எங்கள் பட்டா நிலத்தில் தான் உள்ளது, சிலையை அகற்ற முடியாது என்று பாஜகவினர் வாக்குவாத்ததில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பாஜக மாநில செயலாளரும் கன்னியாகுமரி பெருங்கோட்ட பொறுப்பாளருமான பொன்.பாலகணபதி சம்பவ இடத்துக்கு வந்து அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் சிலையை மூடி வைப்பது என்றும், நாளை முறைப்படி அனுமதி கேட்பது என்றும் முடிவெடுக்கப்பட்டு சிலை துணியால் மூடப்பட்டது.

விருதுநகர் வட்டாசியர் மற்றும் கோட்டாச்சியர் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் காவல்துறையினர் உள்ளிட்ட அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் இரவு 12 மணிக்கு மேல் விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த பாஜக புதிய அலுவலகத்தில் பாஜக அலுவலக வாசலில் உள்ள இரும்புக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த காவல்துறையினர், நவீன இயந்திரம் கொண்டு சுமை தூக்கும் தொழிலாளர்களைக் மூலம் பாரத மாதா சிலையை அப்புறப்படுத்தி வாகனத்தில் ஏற்றி வட்டாச்சியர் அலுவலகம் கொண்டு சென்றனர்.

இது குறித்து பாஜக தொண்டர்கள், அண்ணாமலை நடைபயணத்தை தடுக்க திமுக தூண்டுதலின் பேரில் இவ்வாறு வருவாய் துறையும், காவல் துறையும் செயல்படுவதாக தெரிவித்தனர்.

மேலும் தங்கள் தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்” நடைப் பயணத்தை எந்த தீய சக்தியாலும் தடுக்க முடியாது. இந்த அத்துமீறலுக்கெல்லாம் காவல்துறை பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும், தமிழகத்தில் பாரத மாதா சிலை வைக்கவே உரிமை இல்லாத நிலை இந்த ஊழல் திமுக ஆட்சியில் உள்ளது என்று கூறினார்கள்.

Tags: bjppoliceViruthunagar BJPBJP OfficeViruthunagar BJP OfficeViruthunagar police
ShareTweetSendShare
Previous Post

அரை இறுதியில் வெற்றி… இறுதிப் போட்டியில் சிக்ஸர்: பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி!

Next Post

சென்னை ஆர்எஸ்எஸ் தியாகிகள் தினம் இன்று..

Related News

புதிய மைல் கல்லை எட்டிய NASA – ISRO கூட்டு முயற்சி : NISAR ஆண்டனா சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்!

வான்வழி அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியா… ! : ‘GAME CHANGER’ ஆக களமிறக்கப்படும் R-37 VYMPEL ஏவுகணை?

தோல்வியில் முடிந்த அலாஸ்கா சந்திப்பு : இந்தியாவுக்கு மேலும் வரியா? நடக்கப்போவது என்ன?

அழிவை நோக்கி பயணிக்கும் மனித குலம்…? : எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அதிர்ச்சி முடிவு!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

அலாஸ்கா சந்திப்பில் வெற்றி யாருக்கு? – அங்கீகாரம் பெற்ற புதின் – திகைத்து நின்ற ட்ரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

CHAT GPT பரிந்துரையால் தீவிர நோயாளியான முதியவர் : அரியவகை 19-ம் நூற்றாண்டின் நோயால் பாதிப்பு!

அசத்தும் தொழில் நிறுவனம் : துணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்!

42 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இல.கணேசன் உடல் தகனம்!

கோவை : இஸ்கானில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு அலங்காரம்!

தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

ஆந்திரா : பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த நபர் கைது!

செப்டம்பர் 1ம் தேதி முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை உயர்வு!

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருதை தனக்கு தானே அறிவித்துக் கொண்டிருக்கிறார் ஆசிம் முனீர்!

நாமக்கல் : பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் மக்கள் அச்சம்!

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை : இந்தியா வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies