தமிழகத்தில் பாரத மாதா சிலை வைக்கவே உரிமை இல்லாத நிலை உள்ளது - பாஜக தொண்டர்கள் கண்டனம்
Jul 31, 2026, 02:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் பாரத மாதா சிலை வைக்கவே உரிமை இல்லாத நிலை உள்ளது – பாஜக தொண்டர்கள் கண்டனம்

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 8, 2023, 07:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தேனி, புதுக்கோட்டை, திருச்சி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, விருதுநகர், தர்மபுரி, நாமக்கல், விழுப்புரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 10 பாஜக அலுவலகங்களைக் கடந்த மார்ச் 10ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி நட்டா அவர்கள் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த பாஜக புதிய அலுவலகத்தில் கூடுதல் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், . அலுவலக வளாகத்தில் கருங்கல்லால் ஆன பாரத மாதா சிலையை நிறுவும் பணிகள் நடைபெற்று வந்தன.

வருகின்ற ஆகஸ்ட் 9,10,11 ஆகிய தேதிகளில் மூன்று நாட்களில் விருதுநகரில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை “என் மண், என் மக்கள்” பாத யாத்திரையும் நடைபெற உள்ளது.

இதையடுத்து, விருதுநகர் வட்டாசியர் மற்றும் கோட்டாச்சியர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் காவல்துறையினருடன் வந்து அனுமதி பெறாமல் பாரத மாதா சிலையை வைத்துள்ளீர்கள்.

எனவே உடனடியாக பாரத மாதா சிலையை அகற்ற வேண்டும் என்றனர். எங்கள் பட்டா நிலத்தில் தான் உள்ளது, சிலையை அகற்ற முடியாது என்று பாஜகவினர் வாக்குவாத்ததில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பாஜக மாநில செயலாளரும் கன்னியாகுமரி பெருங்கோட்ட பொறுப்பாளருமான பொன்.பாலகணபதி சம்பவ இடத்துக்கு வந்து அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் சிலையை மூடி வைப்பது என்றும், நாளை முறைப்படி அனுமதி கேட்பது என்றும் முடிவெடுக்கப்பட்டு சிலை துணியால் மூடப்பட்டது.

விருதுநகர் வட்டாசியர் மற்றும் கோட்டாச்சியர் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் காவல்துறையினர் உள்ளிட்ட அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் இரவு 12 மணிக்கு மேல் விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த பாஜக புதிய அலுவலகத்தில் பாஜக அலுவலக வாசலில் உள்ள இரும்புக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த காவல்துறையினர், நவீன இயந்திரம் கொண்டு சுமை தூக்கும் தொழிலாளர்களைக் மூலம் பாரத மாதா சிலையை அப்புறப்படுத்தி வாகனத்தில் ஏற்றி வட்டாச்சியர் அலுவலகம் கொண்டு சென்றனர்.

இது குறித்து பாஜக தொண்டர்கள், அண்ணாமலை நடைபயணத்தை தடுக்க திமுக தூண்டுதலின் பேரில் இவ்வாறு வருவாய் துறையும், காவல் துறையும் செயல்படுவதாக தெரிவித்தனர்.

மேலும் தங்கள் தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்” நடைப் பயணத்தை எந்த தீய சக்தியாலும் தடுக்க முடியாது. இந்த அத்துமீறலுக்கெல்லாம் காவல்துறை பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும், தமிழகத்தில் பாரத மாதா சிலை வைக்கவே உரிமை இல்லாத நிலை இந்த ஊழல் திமுக ஆட்சியில் உள்ளது என்று கூறினார்கள்.

Tags: bjppoliceViruthunagar BJPBJP OfficeViruthunagar BJP OfficeViruthunagar police
ShareTweetSendShare
Previous Post

அரை இறுதியில் வெற்றி… இறுதிப் போட்டியில் சிக்ஸர்: பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி!

Next Post

சென்னை ஆர்எஸ்எஸ் தியாகிகள் தினம் இன்று..

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies