நீங்கள் இந்தியாவே அல்ல: காங்கிரஸ் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்: ராகுலுக்கு ஸ்மிருதி இரானி பதிலடி!
Jul 3, 2025, 08:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீங்கள் இந்தியாவே அல்ல: காங்கிரஸ் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்: ராகுலுக்கு ஸ்மிருதி இரானி பதிலடி!

Web Desk by Web Desk
Aug 9, 2023, 03:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது பேசிய ராகுல் காந்தி, மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்த நிலையில், நீங்கள் இந்தியாவே அல்ல, காங்கிரஸ் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலடி கொடுத்திருக்கிறார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான 2-வது நாளான இன்றும் விவாதம் நடந்து வருகிறது.

தீர்மானத்தின் மீதான விவாதத்தில் இன்று காலை பேசிய ராகுல் காந்தி, “நான் அதானி பற்றி பேசமாட்டேன். ஆகவே, பா.ஜ.க. நண்பர்கள் பயப்பட வேண்டாம். நான் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிப்பூர் சென்றிருந்தேன். ஆனால், பிரதமர் மோடி இதுவரை செல்லவில்லை. அப்படியானால், மணிப்பூரை நாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் கருதவில்லையா? என்று பேசினார்.

ராகுல் காந்தி பேசிக்கொண்டிருக்கும்போதே, மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ எழுந்து குறுக்கிட்டு ராகுல் காந்தி தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராகுலுக்கு எதிராக குரல் கொடுத்தனர். பதிலுக்கு காங்கிரஸ் உறுப்பினர்களும் கோஷமிட, அவையில் கடும் அமளி ஏற்பட்டது.

இதன் பிறகு பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, “மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பேசும் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறை குறித்தும், பில்வாரா பலாத்காரம் குறித்தும் பேச மறுப்பது ஏன்? அதேபோல, காஷ்மீரில் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த கிரிஜா திக்கு கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்தும் ராகுல் பேசாதது ஏன்?

மணிப்பூர் பிளவுபட்டு விட்டதாக ராகுல் காந்தி கூறியிருக்கிறார். மணிப்பூர் பிளவுபடவில்லை. அது இந்தியாவின் ஒரு பகுதி. அதை இந்தியாவிடமிருந்து ஒருபோதும் பிரித்து விட முடியாது. மணிப்பூரைக் காட்டிலும் காஷ்மீரில் நடந்த இனப்படுகொலை மிகவும் கொடூரமானது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகுதான் பெண்கள் காஷ்மீரில் பாதுகாப்பாக இருக்கிறார்கள். 1990-களில் காஷ்மீர் பண்டிட்கள் எதிர்கொண்ட கொடுமைகளுக்கு நீதிகேட்டு அவர்கள் இன்னும் காத்திருக்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, நீங்கள் இந்தியாவே அல்ல. காரணம், இந்தியா என்பது ஊழல் அல்ல. இந்தியா என்பது உயர் விழுமியங்களைக் கொண்டது. வாரிசு அரசியலைக் கொண்டது அல்ல. ஊழல் பற்றி பேசும்போது, உங்கள் கூட்டணியில் இருக்கும் தி.மு.க.வை சற்று யோசித்துப் பாருங்கள். ஊழலும், வாரிசு அரசியலும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். ஆகவே, காங்கிரஸ் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும்” என்று ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் ஸ்மிருதி இரானி.

Tags: bjpSmriti IraniMinister Smriti IraniSmriti Irani vs Rahul GandhiModimanipur
ShareTweetSendShare
Previous Post

சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவில் இன்று நடை திறப்பு .

Next Post

இந்தியாவின் 76-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்கும் அமெரிக்க எம்.பி.க்கள்…

Related News

அஜித் குமார் விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை என திமுக அரசு கூறுவதை யார் நம்புவார்கள்? – பாஜக கேள்வி

சேலையூர் இளைஞர் கொலை வழக்கு – 6 பேர் கைது!

ராசிபுரம் அருகே பணிச்சுமை காரணமாக பெண் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மாரடைப்பால் மரணம்!

விருதுநகர் மாவட்டத்தில் 1052 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்காவுக்கு ஒப்புதல் – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

பட்டாசு ஆலை வெடி விபத்தில் கூடுதல் நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் – எஸ்பி மிரட்டடியதாக குற்றச்சாட்டு!

ரிதன்யா தற்கொலை விவகாரம் – தாய் உண்ணாவிரதம்!

Load More

அண்மைச் செய்திகள்

நெல்லையில் சீருடை அணியாத காவலர்களால் தாக்கப்பட்ட சிறுவன் – பாஜக எம்எல்ஏ நேரில் ஆறுதல்!

சென்னையில் மழைநீர் வடிகாலில் தீக்காயங்களுடன் விழுந்து கிடந்த இருவர் மீட்பு – வியாபாரிக்கு குவியும் பாராட்டு!

உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்த தவெக தலைவர் விஜய், டாக்டர் கிருஷ்ணசாமி!

2000 கோடி மதிப்பிலான நேஷனல் ஹெரால்டு பங்குகளை 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய சோனியா, ராகுல் – அமலாக்கத்துறை வாதம்!

இந்தியா, கானா இடையே சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும் – பிரதமர் மோடி

பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம்!

அரசு முறை பயணமாக கானா சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

நஞ்சான நிலத்தடி நீர் : 30 ஆண்டுகளாக அகற்றப்படாத குரோமிய கழிவுகள்!

உச்சம் தொட்ட ஏற்றுமதி : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

இந்தியாவின் ஆகாஷ்தீர் : புத்திசாலி அசுரன்- வாங்க துடிக்கும் பிரேசில்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies