இந்தியாவின் ஆகாஷ்தீர் : புத்திசாலி அசுரன்- வாங்க துடிக்கும் பிரேசில்!
Sep 12, 2026, 01:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவின் ஆகாஷ்தீர் : புத்திசாலி அசுரன்- வாங்க துடிக்கும் பிரேசில்!

Murugesan M by Murugesan M
Jul 3, 2025, 02:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூரில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்ட ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பை வாங்குவதற்குப் பிரேசில் விருப்பம் தெரிவித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. பதிலுக்குப் பாகிஸ்தான் இந்தியாவின் ராணுவத்தளங்கள் மற்றும் முக்கிய நகரங்களை குறிவைத்து 100க்கும் மேற்பட்ட ட்ரோன்களையும் ஏவுகணைகளையும்   ஏவியது. ஆனால்,அவை எல்லாவற்றையும்  நடுவானிலேயே இடைமறித்து இந்தியா சுட்டு வீழ்த்தியது.

செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பான ஆகாஷ்தீர், நிகழ் நேரத்தில் செயல்பட்டு, ஒவ்வொரு அச்சுறுத்தலையும் துல்லியத்துடன் கண்காணித்து, பகுப்பாய்வு செய்து, மிகச் சரியாகத் தாக்கி அழித்தது.

ஆகாஷ்தீர், மற்ற போர் விமானங்களைப் போல் சத்தமிடவில்லை. மற்ற ஏவுகணைகளைப் போல ஒளியை ஏற்படுத்தவில்லை. ஆனாலும் இருண்ட வானில் விழிப்புடன் நிற்கும் போர்வீரனாகச் செயல்பட்டது. எதிரியின் ஒவ்வொரு ட்ரோன்,போர் விமானம் மற்றும் ஏவுகணையைத் துல்லியமாகக் கவனித்து மிகச் சரியாகக் கணக்கிட்டு துல்லியமாகத் தாக்கி அழித்தது.

ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் 100 சதவீதம் துல்லியத்தை நிரூபித்த ஆகாஷ்தீர், இந்திய வான்வெளிக்கு ஒரு பாதுகாப்பு கவசமாகச் செயல்பட்டது. மற்ற நாடுகளின் வான் பாதுகாப்பு அமைப்புகளை விடவும் மிக வேகமாகக் கண்காணித்து,மிக வேகமாக முடிவெடுத்து மிக வேகமாகத் தாக்கியது.  தரையில் நிரந்தரமாக இருக்கும் ரேடார்களை போல் இல்லாமல். நகரும் விதத்திலான வாகன அடிப்படையில் ஆகாஷ்தீர் அமைக்கப்பட்டுள்ளது.

கட்டளை,தகவல்தொடர்பு,கம்ப்யூட்டர்,செயற்கை நுண்ணறிவு என அனைத்து கட்டமைப்புகளுடன் ஒருங்கிணைத்துச் செயல்படும் ஆகாஷ் தீர் முப்படைகளுடனும் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.  நவீன போர்க்கள உத்தியையும்  மறுவரையறை செய்த ஆகாஷ்தீர் உலகம் இதுவரை கண்டிராத புத்திசாலித்தனமான அசுரன் என்று பாராட்டப்பட்டது.

DRDO உருவாக்கிய  ஆகாஷ்தீர்  வான் பாதுகாப்பு அமைப்பு,, 45 கிலோமீட்டர் தூரத்திலேயே ட்ரோன்கள் மற்றும் குரூஸ் ஏவுகணைகளைக் குறிவைத்து அழிக்கிறது. இது நடுத்தர தூரத் தரையிலிருந்து ஏவும் வான் ஏவுகணை தளமாகும். மேக் 3.5 வேகத்துடன் செயல்படும் இந்த அமைப்பில்   Rajendra 3D radar array  பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரே நேரத்தில் 64 இலக்குகளைக் கண்காணிக்கும் திறன் கொண்டதாகும்.

இந்திய விமானப்படையில் எட்டு ஆகாஷ் வான் அமைப்புக்களும் உள்ளன.  ராணுவத்தில்  ஆகாஷ்-1S மற்றும் புதிய ஆகாஷ்-NG – ஆகிய இரண்டு அமைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் “சுதர்சன் சக்ரா” என்று அழைக்கப்படும் ரஷ்யாவின் S-400 Triumf  இருந்தாலும் ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு அமைப்பின் செயல்பாட்டு வெற்றி, உலகையே வியந்து பார்க்க வைத்துள்ளது.

இதன்காரணமாக, இந்தியாவின் பாதுகாப்பு திறன்களில், குறிப்பாகத் தகவல் தொடர்பு அமைப்புகள், கடல் ரோந்து கப்பல்கள் மற்றும் கருடா பீரங்கி துப்பாக்கி  உள்ளிட்ட பாதுகாப்பு சார்ந்த  இருதரப்பு  ஒத்துழைப்புக்குப் பிரேசில்  தீவிர ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பை  வாங்கப் பிரேசில் விருப்பம் தெரிவித்துள்ளது

இந்நிலையில், பிரேசிலில் நடக்கும் BRICS பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, அர்ஜென்டினா, நமீபியா ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்கிறார். கடந்த 10 ஆண்டுகளில்,ஒரு இந்தியப் பிரதமரின் மிக நீண்ட இராஜதந்திர பயணம் இதுவாகும். இதன் மூலம் உலகளாவிய தெற்கு நாடுகளுடன்  இந்தியாவின் உறவு வலிமைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: பிரேசில்ஆப்ரேஷன் சிந்தூர்India's Akashthir: The clever monster - Brazil is eager to buy itஇந்தியாவின் ஆகாஷ்தீர்
Share
Tweet
SendShare
Previous Post

இபிஎஸ் சுற்றுப்பயணம் – நயினார் நாகேந்திரன் பங்கேற்க அழைப்பு!

Next Post

தென்காசி : சாலையோர பாலத்தில் மோதி கார் விபத்து – ஒருவர் பலி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies