பாகிஸ்தான் நாடாளுமன்றம் இரவோடு இரவாக திடீர் கலைப்பு!
Jan 14, 2026, 01:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் நாடாளுமன்றம் இரவோடு இரவாக திடீர் கலைப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 10, 2023, 12:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிறையில் இருந்து வரும் நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றம் திடீரென இரவோடு இரவாக கலைக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டில் கடந்த 2018-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆகவே, பிரபல கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான தெக்ரீக் இ இன்சாப் கட்சி, சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றி, பிரதமராக இம்ரான் கான் பதவி வகித்து வந்தார். இக்கூட்டணி 4 ஆண்டுகள் நீடித்த நிலையில், அந்நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

இதையடுத்து, கடந்தாண்டு இம்ரான் கான் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணிக் கட்சிகள் திடீரென  திரும்பப் பெற்றன. இதைத் தொடர்ந்து, கடந்தாண்டு ஏப்ரல் மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான் கான் அரசு தோல்வியடைந்தது. இதன் பிறகு, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் பிரதமராகப் பதவியேற்றார்.

இதன் பிறகு, இம்ரான் கான் மீது ஊழல், கொலை மிரட்டல், மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், பிரதமராக இருந்த காலக்கட்டத்தில் தனக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களை அரசு கஜானவில் சேர்க்காமல், அதனை விற்று  பணத்தை மோசடி செய்து விட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக, இம்ரான் கான் உடனடியாக கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில்தான், பாகிஸ்தான் நாடாளுமன்றம் நேற்று இரவோடு இரவாக திடீரென கலைக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பரிந்துரையின் பேரில், அதிபர் ஆரில் ஆல்வி, இதற்கான உத்தரவை பிறப்பித்திருக்கிறார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிகாலம் முடிய இன்னும் 3 நாட்களே மீதமிருக்கும் நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருப்பது எதிர்க்கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காரணம், நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிந்துவிட்டால், 60 நாட்களுக்குள் தேர்தலை நடத்தியாக வேண்டும். அதேசமயம், பதவிக்காலம் முடிவதற்கு முன்பே கலைத்துவிட்டால், தேர்தலை நடத்த 90 நாட்கள் கால அவகாசம் உண்டு. ஆகவே, கூடுதலாக 30 நாட்கள் கிடைக்கும் என்கிற நோக்கத்திலேயே, பதவிக்காலம் முடிவதற்கு முன்பே நாடாளுமன்றத்தைக் கலைக்கும்படி ஷெபாஸ் ஷெரீப் பரிந்துரை செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

Tags: pakistanPakistan PMpakistan PM Shahbaz SharifShahbaz Sharif
ShareTweetSendShare
Previous Post

உலகக் கோப்பை கிரிக்கெட் தேதி மாற்றம்: டிக்கெட் விற்பனை 25ம் தேதி தொடக்கம்

Next Post

இன்று உலக சிங்கங்கள் தினம் 2023

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies