பாகிஸ்தான் நாடாளுமன்றம் இரவோடு இரவாக திடீர் கலைப்பு!
Nov 17, 2025, 08:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் நாடாளுமன்றம் இரவோடு இரவாக திடீர் கலைப்பு!

Web Desk by Web Desk
Aug 10, 2023, 12:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிறையில் இருந்து வரும் நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றம் திடீரென இரவோடு இரவாக கலைக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டில் கடந்த 2018-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆகவே, பிரபல கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான தெக்ரீக் இ இன்சாப் கட்சி, சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றி, பிரதமராக இம்ரான் கான் பதவி வகித்து வந்தார். இக்கூட்டணி 4 ஆண்டுகள் நீடித்த நிலையில், அந்நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

இதையடுத்து, கடந்தாண்டு இம்ரான் கான் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணிக் கட்சிகள் திடீரென  திரும்பப் பெற்றன. இதைத் தொடர்ந்து, கடந்தாண்டு ஏப்ரல் மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான் கான் அரசு தோல்வியடைந்தது. இதன் பிறகு, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் பிரதமராகப் பதவியேற்றார்.

இதன் பிறகு, இம்ரான் கான் மீது ஊழல், கொலை மிரட்டல், மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், பிரதமராக இருந்த காலக்கட்டத்தில் தனக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களை அரசு கஜானவில் சேர்க்காமல், அதனை விற்று  பணத்தை மோசடி செய்து விட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக, இம்ரான் கான் உடனடியாக கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில்தான், பாகிஸ்தான் நாடாளுமன்றம் நேற்று இரவோடு இரவாக திடீரென கலைக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பரிந்துரையின் பேரில், அதிபர் ஆரில் ஆல்வி, இதற்கான உத்தரவை பிறப்பித்திருக்கிறார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிகாலம் முடிய இன்னும் 3 நாட்களே மீதமிருக்கும் நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருப்பது எதிர்க்கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காரணம், நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிந்துவிட்டால், 60 நாட்களுக்குள் தேர்தலை நடத்தியாக வேண்டும். அதேசமயம், பதவிக்காலம் முடிவதற்கு முன்பே கலைத்துவிட்டால், தேர்தலை நடத்த 90 நாட்கள் கால அவகாசம் உண்டு. ஆகவே, கூடுதலாக 30 நாட்கள் கிடைக்கும் என்கிற நோக்கத்திலேயே, பதவிக்காலம் முடிவதற்கு முன்பே நாடாளுமன்றத்தைக் கலைக்கும்படி ஷெபாஸ் ஷெரீப் பரிந்துரை செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

Tags: pakistanPakistan PMpakistan PM Shahbaz SharifShahbaz Sharif
ShareTweetSendShare
Previous Post

உலகக் கோப்பை கிரிக்கெட் தேதி மாற்றம்: டிக்கெட் விற்பனை 25ம் தேதி தொடக்கம்

Next Post

இன்று உலக சிங்கங்கள் தினம் 2023

Related News

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

மரண தண்டனை – ஷேக் ஹசீனா கண்டனம்!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு!

மதுரை : 10 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் புகார்!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – அமீர் ரஷீத்தை விசாரிக்க NIA-வுக்கு அனுமதி!

ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜப்பான் : சுற்றுலா பயணிகளை கவர்ந்த மவுண்ட் ஃபுஜியின் இலையுதிர் கால அழகு!

நெல்லை : இலவச வீடு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் போராட்டம்!

தென் கொரியா : பல உருவங்களை காட்சிப்படுத்தி மக்களை வெகுவாக கவர்ந்த ட்ரோன் ஷோ!

ராமநாதபுரம் : கடல் கொந்தளிப்பு – மண் அரிப்பு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்!

நாமக்கல் : கஞ்சா போதையில் பொதுமக்களை தாக்கிய இளைஞர்கள்!

ஜெர்மனி : பாரம்பரியமாக நடைபெறும் ஆடுகள் அழைத்து செல்லப்படும் நிகழ்வு!

சபரிமலையில் தங்கம் திருட்டு வழக்கு : 15 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு!

ஈரானில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி!

அமெரிக்காவிலிருந்து எல்பிஜி எரிவாயுவை இறக்குமதி செய்ய இந்தியா ஒப்பந்தம்!

துபாய் விமான கண்காட்சி – ஏராளமான நிறுவனங்கள் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies