மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வி!
Nov 16, 2025, 03:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வி!

Web Desk by Web Desk
Aug 10, 2023, 08:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. இத்தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த 8, 9-ம் தேதிகளில் நடந்தது. அப்போது, காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசினார்கள். இதற்கு மத்திய அமைச்சர்கள் சிலர் விளக்கம் அளித்து பதிலடி கொடுத்தனர்.

இந்தச் சூழலில், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்தார். அப்போது, எதிர்க்கட்சிகளைக் கடுமையாக விமர்சித்து பேசிய மோடி, “2018-ம் ஆண்டு மத்திய பா.ஜ.க. அரசு மீது, எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. இதில், அவர்கள் படுதோல்வியைச் சந்தித்தனர். தற்போது, மீண்டும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்கள். இதிலும் தோல்வியைத்தான் தழுவுவார்கள்.

ஒருமுறை “நோ பால்” போட்டால் பரவாயில்லை. திரும்ப திரும்ப “நோ பால்” வீசுவது ஏன்? எங்களது அரசு சதமடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் “நோ பால்” வீசிக்கொண்டிருக்கின்றன. நம்பிக்கை இல்லாத் தீர்மானம் எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ஷ்டம் இல்லாமலேயே இருக்கிறது. இதே போல, 2028-ம் ஆண்டும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவீர்கள். அப்போதும் இத்தீர்மானம் தோல்வியைத்தான் தழுவும்” என்று கூறினார்.

இது ஒருபுறம் இருக்க, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசிக் கொண்டிருக்கும் போதே எதிர்க்கட்சியினர் வெளிநடப்புச் செய்து விட்டனர். பிரதமர் பேசி முடித்ததும், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சி வரிசையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க யாரும் இல்லாததால், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

Tags: Narendra ModiModimodi speechpm narendra modiParliament Modi
ShareTweetSendShare
Previous Post

பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கில் படுமோசமான விசாரணை: உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி!

Next Post

எனது 3-வது ஆட்சி காலத்தில் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கும்: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி சூளுரை!

Related News

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

திருப்பதி தேவஸ்தான முன்னாள் விஜிலன்ஸ் அதிகாரி கொலை வழக்கு – போலீசார் தீவிர விசாரணை!

முதலீடுகளை கோட்டை விடும் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூரில் SIR நடவடிக்கை – திமுகவினர் தலையீடு உள்ளதாக குற்றச்சாட்டு!

சிவகங்கையில் வட்டாட்சியரை கடித்த தெருநாய் – நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை சேலையூரில் கொள்ளையர்கள் கைவரிசை – வெளியானது வீடியோ!

சுசீந்திரம் தாணுமாலய கோயில் தெப்பக்குள விவகாரம் – அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா அம்மா மறைவு – அண்ணாமலை இரங்கல்!

வேலூரில் திமுக கவுன்சிலர் இல்லத்தில் S.I.R. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்த அதிகாரிகள் – அதிமுகவினர் வாக்குவாதம்!

கேரளாவில் பரவும் அமீபா தொற்று – சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை!

“இண்டி” கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி காங்கிரசுக்கு உள்ளதா? – திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவை நாடும் சர்வதேச நாடுகள் – மோகன் பகவத்

காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது – பிரதமர் மோடி

அனைத்தையும் எதிர்ப்பதா? : SIR நடவடிக்கையை எதிர்க்கும் காரணத்தை விஜய் கூற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies