மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வி!
Jul 1, 2025, 11:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வி!

Web Desk by Web Desk
Aug 10, 2023, 08:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. இத்தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த 8, 9-ம் தேதிகளில் நடந்தது. அப்போது, காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசினார்கள். இதற்கு மத்திய அமைச்சர்கள் சிலர் விளக்கம் அளித்து பதிலடி கொடுத்தனர்.

இந்தச் சூழலில், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்தார். அப்போது, எதிர்க்கட்சிகளைக் கடுமையாக விமர்சித்து பேசிய மோடி, “2018-ம் ஆண்டு மத்திய பா.ஜ.க. அரசு மீது, எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. இதில், அவர்கள் படுதோல்வியைச் சந்தித்தனர். தற்போது, மீண்டும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்கள். இதிலும் தோல்வியைத்தான் தழுவுவார்கள்.

ஒருமுறை “நோ பால்” போட்டால் பரவாயில்லை. திரும்ப திரும்ப “நோ பால்” வீசுவது ஏன்? எங்களது அரசு சதமடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் “நோ பால்” வீசிக்கொண்டிருக்கின்றன. நம்பிக்கை இல்லாத் தீர்மானம் எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ஷ்டம் இல்லாமலேயே இருக்கிறது. இதே போல, 2028-ம் ஆண்டும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவீர்கள். அப்போதும் இத்தீர்மானம் தோல்வியைத்தான் தழுவும்” என்று கூறினார்.

இது ஒருபுறம் இருக்க, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசிக் கொண்டிருக்கும் போதே எதிர்க்கட்சியினர் வெளிநடப்புச் செய்து விட்டனர். பிரதமர் பேசி முடித்ததும், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சி வரிசையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க யாரும் இல்லாததால், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

Tags: Narendra ModiModimodi speechpm narendra modiParliament Modi
ShareTweetSendShare
Previous Post

பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கில் படுமோசமான விசாரணை: உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி!

Next Post

எனது 3-வது ஆட்சி காலத்தில் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கும்: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி சூளுரை!

Related News

மம்தா கட்சியின் செல்லப்பிள்ளை – கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளி பற்றி பகீர் தகவல்!

ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து மீண்டும் உயர்வு!

இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!

கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

டெல்லியில் காலாவதியான வாகனங்களுக்கு இன்று முதல் பெட்ரோல், டீசல் கிடையாது – ஒலிபெருக்கு மூலம் அறிவிக்கும் பெட்ரோல் நிறுவனங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

‘Thammudu’ படத்தின் டிரெய்லர் வெளியானது!

ஷெஃபாலி ஜரிவாலாவின் மரணத்திற்கு குறைந்த ரத்த அழுத்தமே காரணம் : போலீஸ் தகவல்!

டெலிவரி செயலிகள் மூலம் வரும் ஆர்டர்களுக்கு உணவு வழங்கப்படாது – நாமக்கல் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

திருப்பூர் மாநகராட்சி ரேஷன் அட்டைதாரர்களுக்கு முறையாக உணவு பொருட்கள் வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு!

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதுச்சேரி பாஜக தலைவராக வி.பி. ராமலிங்கம் பதவியேற்பு!

திருப்பூர் இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கு – மேலும் 3 பேர் கைது!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளித்து உயிரிழந்த எதிரொலி – தீவிர சோதனைக்கு பிறகு குறைதீர் கூட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டட பொதுமக்கள்!

திருவள்ளூரில் ரூ. 75,000 லஞ்சம் வாங்கிய நில எடுப்பு வட்டாட்சியர் கைது

சேலத்தில் கால்வாய் கட்ட பணம் தர மறுத்த வெள்ளிப் பட்டறை உரிமையாளரை தாக்கிய திமுக முன்னாள் கவுன்சிலர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies