பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கில் படுமோசமான விசாரணை: உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி!
Jun 19, 2026, 12:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கில் படுமோசமான விசாரணை: உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 10, 2023, 08:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கில், படுமோசமாக விசாரணை நடந்திருக்கிறது என்று அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறை, பொன்முடி, அவரது மனைவி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

கடந்த 1996 முதல் 2001-ம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. அப்போது, அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. 2001-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த நிலையில், 2002-ம் ஆண்டு பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு, முதலில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு, வேலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இவ்வழக்கில் 172 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி வசந்த லீலா, போதிய ஆதாரங்கள் இல்லை என்றும், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறி, பொன்முடியையும், அவரது மனைவி விசாலாட்சியையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். ஆனால், இத்தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை.

இந்த நிலையில்தான், மேற்கண்ட வழக்கை தாமாக முன்வந்து மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு எடுத்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். இவ்வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “இதுவரை நான் பார்த்ததில் படுமோசமாக விசாரிக்கப்பட்டதால்தான் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளேன். இந்த மனு தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை, பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிடுகிறேன்” என்று கூறி, வழக்கு விசாரணையை செப்டம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இவ்வழக்கால், அமைச்சர் பொன்முடிக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

Tags: Ponmudicourtchennai high courtMinister Ponmudi
ShareTweetSendShare
Previous Post

தமிழ்நாட்டில் பாரத அன்னைக்குப் பூஜை செய்வது தடுப்பு : பிரதமர் மோடி காட்டம்.

Next Post

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வி!

Related News

முதல்முறையாக பிஎப் கணக்கில் இணைந்த ஊழியர்களுக்கு 15000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

தகவல் தொடர்பு வசதி இல்லாத பகுதிகளுக்கும் தகவலை கொண்டு சென்றவர் ஸ்ரீதர் எல்.முருகன் புகழாரம்3!

தமிழகத்தில் RTO அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.37 லட்சம் பறிமுதல்!

ஓய்வுபெற்ற வருமான வரித்துறை முதன்மை ஆணையர் ரெங்கராஜ் மீது சிபிஐ வழக்குப்பதிவு!

12 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள மாற்றங்கள் 140 கோடி மக்களின் நம்பிக்கையின் அடையாளம் – பிரதமர் மோடி பெருமிதம்!

தாம்பரம் அருகே 4 மணி நேரம் மின்தடை – பொதுமக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது; நாளை தனி தீர்மானம்

ஈரான்- அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்து – வளைகுடாவில் திரும்புமா அமைதி? – சிறப்பு தொகுப்பு!

பாலியல் வன்கொடுமை செய்து கட்டாய மதமாற்றம் : விமானப்படை அதிகாரி மனைவிக்கு நடந்த கொடூரம் – சிறப்பு தொகுப்பு!

78 ஆண்டுகால கனவை நிறைவேற்றும் NHAI : விறுவிறுப்படையும் தொப்பூர் மலைப்பாதை – சிறப்பு கட்டுரை!

தொடரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் – சென்னையில் பாஜக ஆர்பாட்டம்!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின்னர் சமூகநீதி சர்வே – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் உரை!

வெள்ளை அறிக்கையில் திமுக ஆட்சி கால நிதி முறைகேடு இடம்பெறாத விவகாரம் – முதல்வைர் அதிருப்தி என தகவல்!

சட்டப்பேரவைக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து சென்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் – பதாகைகளை ஏந்தியபடி கோஷம்!

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும் – சட்டப்பேரவையில் ஆளுநர் உரை!

சமாஜ்வாதி கட்சியிலும் பிளவு ஏற்படும் – அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies