எதிர்க்கட்சிகள் பயந்து ஓடி விட்டன: பிரதமர் மோடி தாக்கு!ṭ
Mar 15, 2026, 03:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எதிர்க்கட்சிகள் பயந்து ஓடி விட்டன: பிரதமர் மோடி தாக்கு!ṭ

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 12, 2023, 04:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது வாக்களிக்க பயந்துகொண்டு, எதிர்க்கட்சிகள் பாதியிலேயே ஓடி விட்டன என்று பாரத பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் வியூகங்கள் அமைப்பது தொடர்பாக, மேற்குவங்க மாநிலம் கிழக்குப் பகுதிக்கான பா.ஜ.க. நிர்வாகிகள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்து வருகிறது. பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தலைமை வகிக்க, அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், காணொளி காட்சி வாயிலாகப் பேசிய பாரத பிரதமர் நரேந்திர மோடி, “மேற்குவங்க மாநிலத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டு வன்முறையில் ஈடுபட்டனர். வேட்பு மனு தாக்கல் செய்ய விடாமல், பா.ஜ.க. வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். பா.ஜ.க. வேட்பாளர்களை மிரட்டியதோடு, வாக்காளர்களையும் மிரட்டனர்.

மேலும், வாக்குச்சாவடிகளையும் கைப்பற்றி, அராஜகத்தில் ஈடுபட்டனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ரத்தக்களரி அரசியலை பின்பற்றுகிறது. மேற்கு வங்கத்தில் ரத்த அரசியல் விளையாட்டு நடத்துகிறது. இதுதான் அவர்களின் அரசியல் நாகரிகம் போல் தெரிகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இது ஒருபுறம் இருக்க, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை தோற்கடித்து, நம்மைப் பற்றி நாடு முழுவதும் எதிர்மறை கருத்துக்களை பரப்பியவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தோம். நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது வாக்களிக்க பயந்து கொண்டு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாதியிலேயே ஓடி விட்டனர்.

மணிப்பூர் விவகாரம் தொடர்பான விவாதத்தையும் முடக்கி விட்டனர். மணிப்பூர் மக்களின் வலியை எதிர்க்கட்சிகள் உணரவில்லை. தங்களது அரசியல் ஆதாயத்திற்காக மணிப்பூரை சூறையாடி இருக்கிறார்கள். மணிப்பூரை வைத்து அரசியல் செய்தார்களே தவிர, அம்மக்கள் மீது எதிர்க்கட்சிகளுக்கு துளியும் அக்கறை இல்லை. இதனால்தான், பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியவர்கள், மணிப்பூரை பற்றி மட்டும் பேசவில்லை” என்று எதிர்க்கட்சிகளை கடுமையாக தாக்கி பேசியிருக்கிறார் பிரதமர் மோடி.

Tags: IndiaModiParliamentbjpModi Parliament SpeechMinisters
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்கா, பிரிட்டனில் வேகமாக பரவும் புதுவகை வைரஸ்!

Next Post

ஜம்மு காஷ்மீரில் நாளை மூவர்ணக்கொடி பேரணி: டி.ஜி.பி. அறிவிப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies