எதிர்க்கட்சிகள் பயந்து ஓடி விட்டன: பிரதமர் மோடி தாக்கு!ṭ
Jul 28, 2026, 09:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எதிர்க்கட்சிகள் பயந்து ஓடி விட்டன: பிரதமர் மோடி தாக்கு!ṭ

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 12, 2023, 04:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது வாக்களிக்க பயந்துகொண்டு, எதிர்க்கட்சிகள் பாதியிலேயே ஓடி விட்டன என்று பாரத பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் வியூகங்கள் அமைப்பது தொடர்பாக, மேற்குவங்க மாநிலம் கிழக்குப் பகுதிக்கான பா.ஜ.க. நிர்வாகிகள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்து வருகிறது. பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தலைமை வகிக்க, அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், காணொளி காட்சி வாயிலாகப் பேசிய பாரத பிரதமர் நரேந்திர மோடி, “மேற்குவங்க மாநிலத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டு வன்முறையில் ஈடுபட்டனர். வேட்பு மனு தாக்கல் செய்ய விடாமல், பா.ஜ.க. வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். பா.ஜ.க. வேட்பாளர்களை மிரட்டியதோடு, வாக்காளர்களையும் மிரட்டனர்.

மேலும், வாக்குச்சாவடிகளையும் கைப்பற்றி, அராஜகத்தில் ஈடுபட்டனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ரத்தக்களரி அரசியலை பின்பற்றுகிறது. மேற்கு வங்கத்தில் ரத்த அரசியல் விளையாட்டு நடத்துகிறது. இதுதான் அவர்களின் அரசியல் நாகரிகம் போல் தெரிகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இது ஒருபுறம் இருக்க, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை தோற்கடித்து, நம்மைப் பற்றி நாடு முழுவதும் எதிர்மறை கருத்துக்களை பரப்பியவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தோம். நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது வாக்களிக்க பயந்து கொண்டு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாதியிலேயே ஓடி விட்டனர்.

மணிப்பூர் விவகாரம் தொடர்பான விவாதத்தையும் முடக்கி விட்டனர். மணிப்பூர் மக்களின் வலியை எதிர்க்கட்சிகள் உணரவில்லை. தங்களது அரசியல் ஆதாயத்திற்காக மணிப்பூரை சூறையாடி இருக்கிறார்கள். மணிப்பூரை வைத்து அரசியல் செய்தார்களே தவிர, அம்மக்கள் மீது எதிர்க்கட்சிகளுக்கு துளியும் அக்கறை இல்லை. இதனால்தான், பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியவர்கள், மணிப்பூரை பற்றி மட்டும் பேசவில்லை” என்று எதிர்க்கட்சிகளை கடுமையாக தாக்கி பேசியிருக்கிறார் பிரதமர் மோடி.

Tags: IndiaModiParliamentbjpModi Parliament SpeechMinisters
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்கா, பிரிட்டனில் வேகமாக பரவும் புதுவகை வைரஸ்!

Next Post

ஜம்மு காஷ்மீரில் நாளை மூவர்ணக்கொடி பேரணி: டி.ஜி.பி. அறிவிப்பு!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies