எதிர்க்கட்சிகள் பயந்து ஓடி விட்டன: பிரதமர் மோடி தாக்கு!ṭ
Sep 12, 2026, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எதிர்க்கட்சிகள் பயந்து ஓடி விட்டன: பிரதமர் மோடி தாக்கு!ṭ

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 12, 2023, 04:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது வாக்களிக்க பயந்துகொண்டு, எதிர்க்கட்சிகள் பாதியிலேயே ஓடி விட்டன என்று பாரத பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் வியூகங்கள் அமைப்பது தொடர்பாக, மேற்குவங்க மாநிலம் கிழக்குப் பகுதிக்கான பா.ஜ.க. நிர்வாகிகள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்து வருகிறது. பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தலைமை வகிக்க, அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், காணொளி காட்சி வாயிலாகப் பேசிய பாரத பிரதமர் நரேந்திர மோடி, “மேற்குவங்க மாநிலத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டு வன்முறையில் ஈடுபட்டனர். வேட்பு மனு தாக்கல் செய்ய விடாமல், பா.ஜ.க. வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். பா.ஜ.க. வேட்பாளர்களை மிரட்டியதோடு, வாக்காளர்களையும் மிரட்டனர்.

மேலும், வாக்குச்சாவடிகளையும் கைப்பற்றி, அராஜகத்தில் ஈடுபட்டனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ரத்தக்களரி அரசியலை பின்பற்றுகிறது. மேற்கு வங்கத்தில் ரத்த அரசியல் விளையாட்டு நடத்துகிறது. இதுதான் அவர்களின் அரசியல் நாகரிகம் போல் தெரிகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இது ஒருபுறம் இருக்க, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை தோற்கடித்து, நம்மைப் பற்றி நாடு முழுவதும் எதிர்மறை கருத்துக்களை பரப்பியவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தோம். நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது வாக்களிக்க பயந்து கொண்டு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாதியிலேயே ஓடி விட்டனர்.

மணிப்பூர் விவகாரம் தொடர்பான விவாதத்தையும் முடக்கி விட்டனர். மணிப்பூர் மக்களின் வலியை எதிர்க்கட்சிகள் உணரவில்லை. தங்களது அரசியல் ஆதாயத்திற்காக மணிப்பூரை சூறையாடி இருக்கிறார்கள். மணிப்பூரை வைத்து அரசியல் செய்தார்களே தவிர, அம்மக்கள் மீது எதிர்க்கட்சிகளுக்கு துளியும் அக்கறை இல்லை. இதனால்தான், பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியவர்கள், மணிப்பூரை பற்றி மட்டும் பேசவில்லை” என்று எதிர்க்கட்சிகளை கடுமையாக தாக்கி பேசியிருக்கிறார் பிரதமர் மோடி.

Tags: IndiaModiParliamentbjpModi Parliament SpeechMinisters
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்கா, பிரிட்டனில் வேகமாக பரவும் புதுவகை வைரஸ்!

Next Post

ஜம்மு காஷ்மீரில் நாளை மூவர்ணக்கொடி பேரணி: டி.ஜி.பி. அறிவிப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies