"படத்துல வேணுமுன்னா போட்டுக்கலாம்": சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனம்!
Sep 4, 2026, 09:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“படத்துல வேணுமுன்னா போட்டுக்கலாம்”: சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Aug 30, 2023, 01:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 இடங்களை வரைபடத்தில் வேண்டுமானால் போட்டுக்கொள்ளலாம், அதற்காக, அப்பகுதிகள் சீனாவுக்குச் சொந்தமாகி விடாது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

சீனாவின் இயற்கை வளத்துறை அமைச்சகம், தேசிய வரைபட விழிப்புணர்வு வாரத்தை ஜெஜியாங் மாகாணத்தின் டெகிங் பகுதியில் நேற்று கொண்டாடியது. இதையொட்டி, இந்தாண்டுக்கான தேசிய வரைபடம் வெளியிடப்பட்டது. அதில், அருணாச்சலப் பிரதேசத்துக்கு தெற்கு திபெத் என்று பெயரிட்டும், கடந்த 1962-ம் ஆண்டு போரில் ஆக்கிரமித்த பகுதியை அக்ஷாய் சின் என்றும் சீனா கூறியிருந்தது. அதேபோல, தைவான் மற்றும் சர்ச்சைக்குரிய தெற்கு சீனக் கடல் பகுதியையும் தனதுப் பகுதியாக தெரிவித்திருந்தது. இதே பகுதியை வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூனே ஆகிய நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா வெளியிட்டுள்ள இந்த புதிய வரைபடத்திற்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து தொலைக்காட்சி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், “சீனா தங்களுக்குச் சொந்தமில்லாதப் பகுதிகளைத் தங்களுடையது என்று கூறி வரைபடங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறது. இது ரொம்ப காலமாகவே அவர்களின் பழக்கமாக இருந்து வருகிறது. இந்தியாவின் சில பகுதிகளைச் சேர்ந்து வரைபடங்களை வெளியிடுவதால் எதுவும் மாறாது. இவ்வாறு அபத்தமாக உரிமைகோருவதன் மூலம் மற்ற நாடுகளின் பிரதேசங்கள் சீனாவுக்குச் சொந்தமாகிவிடாது” என்று சாடினார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், “சீனாவின் வரைபடம் குறித்து ஜனநாயக முறையில் அந்நாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அடிப்படையற்ற அவர்களின் கூற்றுகளை நாங்கள் நிராகரிக்கிறோம். அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாதப் பகுதி. புதிதாகப் பெயர் வைப்பதால், உண்மை நிலவரத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது. சீனாவின் இந்த நடவடிக்கை எல்லை பிரச்சனைக்கான தீர்வுகளை மேலும் சிக்கலாக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டிற்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின் பிங்கை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். அப்போது, “எல்லைப் பகுதிகளில் தீர்க்கப்படாத பிரச்னைகள் கவலையளிக்கிறது. இந்தியா – சீனா உறவு இயல்பு நிலைக்குத் திரும்ப எல்லையில் அமைதி நிலவுவது முக்கியம்” என்று வலியுறுத்தியதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இந்த சூழலில், இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தை உரிமை கோரி சீனா வரைபடம் வெளியிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: Jai sankar
Share
Tweet
SendShare
Previous Post

பாகிஸ்தானிலுள்ள இந்திய தூதரத்துக்கு முதல் பெண் அதிகாரி நியமனம்!

Next Post

வரலாற்று நிகழ்வை நேரில் பார்க்க ஆசையா! – இஸ்ரோ அரிய வாய்ப்பு!

Related News

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்த விவகாரம் – வங்க தேசத்தை சேர்ந்த 23 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies