"படத்துல வேணுமுன்னா போட்டுக்கலாம்": சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனம்!
Apr 20, 2026, 02:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“படத்துல வேணுமுன்னா போட்டுக்கலாம்”: சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Aug 30, 2023, 01:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 இடங்களை வரைபடத்தில் வேண்டுமானால் போட்டுக்கொள்ளலாம், அதற்காக, அப்பகுதிகள் சீனாவுக்குச் சொந்தமாகி விடாது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

சீனாவின் இயற்கை வளத்துறை அமைச்சகம், தேசிய வரைபட விழிப்புணர்வு வாரத்தை ஜெஜியாங் மாகாணத்தின் டெகிங் பகுதியில் நேற்று கொண்டாடியது. இதையொட்டி, இந்தாண்டுக்கான தேசிய வரைபடம் வெளியிடப்பட்டது. அதில், அருணாச்சலப் பிரதேசத்துக்கு தெற்கு திபெத் என்று பெயரிட்டும், கடந்த 1962-ம் ஆண்டு போரில் ஆக்கிரமித்த பகுதியை அக்ஷாய் சின் என்றும் சீனா கூறியிருந்தது. அதேபோல, தைவான் மற்றும் சர்ச்சைக்குரிய தெற்கு சீனக் கடல் பகுதியையும் தனதுப் பகுதியாக தெரிவித்திருந்தது. இதே பகுதியை வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூனே ஆகிய நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா வெளியிட்டுள்ள இந்த புதிய வரைபடத்திற்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து தொலைக்காட்சி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், “சீனா தங்களுக்குச் சொந்தமில்லாதப் பகுதிகளைத் தங்களுடையது என்று கூறி வரைபடங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறது. இது ரொம்ப காலமாகவே அவர்களின் பழக்கமாக இருந்து வருகிறது. இந்தியாவின் சில பகுதிகளைச் சேர்ந்து வரைபடங்களை வெளியிடுவதால் எதுவும் மாறாது. இவ்வாறு அபத்தமாக உரிமைகோருவதன் மூலம் மற்ற நாடுகளின் பிரதேசங்கள் சீனாவுக்குச் சொந்தமாகிவிடாது” என்று சாடினார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், “சீனாவின் வரைபடம் குறித்து ஜனநாயக முறையில் அந்நாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அடிப்படையற்ற அவர்களின் கூற்றுகளை நாங்கள் நிராகரிக்கிறோம். அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாதப் பகுதி. புதிதாகப் பெயர் வைப்பதால், உண்மை நிலவரத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது. சீனாவின் இந்த நடவடிக்கை எல்லை பிரச்சனைக்கான தீர்வுகளை மேலும் சிக்கலாக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டிற்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின் பிங்கை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். அப்போது, “எல்லைப் பகுதிகளில் தீர்க்கப்படாத பிரச்னைகள் கவலையளிக்கிறது. இந்தியா – சீனா உறவு இயல்பு நிலைக்குத் திரும்ப எல்லையில் அமைதி நிலவுவது முக்கியம்” என்று வலியுறுத்தியதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இந்த சூழலில், இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தை உரிமை கோரி சீனா வரைபடம் வெளியிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: Jai sankar
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தானிலுள்ள இந்திய தூதரத்துக்கு முதல் பெண் அதிகாரி நியமனம்!

Next Post

வரலாற்று நிகழ்வை நேரில் பார்க்க ஆசையா! – இஸ்ரோ அரிய வாய்ப்பு!

Related News

மதுரை சித்திரை திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

உதயநிதி முதலமைச்சரானால் தமிழ்நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் – ராஜ்நாத்சிங்

திருச்செந்தூரில் ராஜ்நாத்சிங் : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம்!

கேஸ் சிலிண்டர் புக் செய்த 5 நாட்களுக்குள் வினியோகம் – பெட்ரோலிய துறை அமைச்சகம் விளக்கம்!

மகனை முதலமைச்சராக்குவதே ஸ்டாலினின் ஒரே குறிக்கோள் – மத்திய அமைச்சர் அமித் ஷா

அரசு முறை பயணமாக இலங்கை சென்ற சிபிஆர் – அதிபர் அனுர குமார திசநாயகேவுடன் சந்திப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜக ஆட்சி அமைந்தவுடன் ஆண்டுதோறும் பெண்களுக்கு ரூ.36,000 – மேற்கு வங்க பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உறுதி!

நெல் சாகுபடியில் 10-வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழகம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தவெக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டுக்கு 12 லட்சம் கோடி தேவைப்படும் – பொருளாதார வல்லுநர்கள் கருத்து!

மதமாற்றம், லவ் ஜிகாத்திற்கு எதிராக கடுமையான சட்டங்கள் தேவை – குடியரசு தலைவருக்கு விஷ்வ இந்து பரிஷத் தகவல்!

ராகுல் காந்தியின் ஆங்கில உரையை மொழிபெயர்த்த செல்வப்பெருந்தகை – ட்ரோல் செய்து வரும் நெட்டிசன்கள்!

தமிழகம் வந்தார் ராஜ்நாத்சிங் – வாசுதேவநல்லூர் தொகுதியில் இன்று ரோடு ஷோ!

தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடக்கின்ற தேர்தல் – இபிஎஸ்

என்டிஏ ஆட்சி அமைந்ததும் ஊழல் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஊழல் மலிந்த திமுக அரசை வீழ்த்தி என்டிஏ ஆட்சி அமைக்கும் – பியூஷ் கோயல் உறுதி!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி – எதிர்கட்சிகளை கண்டித்து ஆந்திராவில் முதல்வர் தலைமையில் பேரணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies