பிரதமரின் தொலைநோக்குப் பார்வை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் புகழாரம்!
Jul 26, 2025, 07:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமரின் தொலைநோக்குப் பார்வை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் புகழாரம்!

இந்தியாவின் கல்விச்சூழலுக்கு உலக அங்கீகாரம்!

Web Desk by Web Desk
Sep 12, 2023, 05:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் இந்தியாவின் கல்விச் சூழலுக்கு உலகளவிலான அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருக்கிறார்.

இந்தியா தலைமையிலான ஜி20 மாநாடு, தலைநகர் டெல்லியில் நடந்து முடிந்திருக்கிறது. இம்மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அந்த வகையில், நமது தேசியக் கல்விக்கொள்கை 2020-ன் முக்கியக் கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு ஒப்புதல் கிடைத்திருக்கிறது. ஆகவே, ஜி20 அமைப்பின் கீழ், உலகளாவிய கல்வி நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்லும் வகையில் செயல்பட்ட, பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பாராட்டுத் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்தியாவின் காலத்தால் அழியாத “வசுதைவ குடும்பகம்” (உலகம் ஒரே குடும்பம்) என்கிற உத்வேகத்திற்கு இணங்கவும், இந்த ஒரே பூமியில் ஒன்றாக வாழும் இந்த ஒரே குடும்பத்திற்கு ஒரே  எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக, மனிதநேயத்தை மையமாகக் கொண்ட அணுகுமுறையைக் கொண்டு வந்ததற்காகவும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின்  தொலைநோக்குப் பார்வைக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜி20 என்கிற மதிப்புமிக்க குழுவில் ஆப்பிரிக்க யூனியனை வெற்றிகரமாக சேர்ப்பதிலும், ஜி20 அமைப்பை உண்மையிலேயே ஜனநாயகப்படுத்துவதிலும், உலகளாவிய வளரும் நாடுகளின் குரலுக்கு வலு சேர்ப்பதிலும் இந்தியாவின் தலைமையின் மூலம் இந்த உள்ளடக்கிய பார்வை உணரப்பட்டிருக்கிறது. ஒருமித்த கருத்து, ஒத்துழைப்பு அடிப்படையில் உலகளாவிய ஒழுங்கை மாற்றியதற்காக இந்தியாவின் தலைமைத்துவ பதவி சரியாக பாராட்டப்படுகிறது.

மேலும், ஜி20 டெல்லி தலைவர்களின் பிரகடனம், அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண் தொழில்நுட்பம் சார்ந்த கற்றல், வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான திறன்களை உருவாக்குதல் மற்றும் வேலையின் எதிர்காலம் மற்றும் ஒத்துழைப்பு மூலம் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை வலுப்படுத்துதல் போன்ற முக்கியமான துறைகளில் விவாதங்களுக்கு முன்னுரிமை அளித்தது. கல்வியின் மூலம் சமத்துவமான மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக பணியாற்றுவதற்கான உலகளாவிய உறுதிப்பாட்டை புதுப்பித்திருப்பதோடு, அதற்கான செயல்திட்டத்தையும் வழங்கி இருக்கிறது.

ஜி20 கட்டமைப்பின் கீழ் உலகளாவிய கல்வி நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்ல நமது பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய தொலைநோக்கு தலைமையையும் தெளிவான விளக்கமும் பாராட்டத்தக்கது. இதன் விளைவாக, இந்தியாவின் கல்வி மற்றும் திறன் சுற்றுச்சூழல் அமைப்புக்கு உலக அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. தவிர, நமது தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் முக்கிய கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு ஒப்புதல் கிடைத்திருக்கிறது. டிஜிட்டல் மாற்றம், பசுமை மாற்றம் மற்றும் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி ஆகிய அடையாளம் காணப்பட்ட 3 பிரிவுகளில் கல்விப் பணிக்குழு முன்னுரிமைகளுடன் தலைவர்களின் பிரகடனம் பிரதிபலிக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

Tags: PM ModiCentral Ministerdharmendra pradhanHailsindias educationecosystem
ShareTweetSendShare
Previous Post

பொதுமக்கள் உயிருக்குப் பாதுகாப்பில்லை!-அண்ணாமலை!

Next Post

‘விஸ்வ குரு, விஸ்வ பந்து’: ராஜ்நாத் சிங் புகழாரம்!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies