இந்து அமைப்பினர் மீது தாக்குதல்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது!
Oct 26, 2025, 05:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்து அமைப்பினர் மீது தாக்குதல்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது!

விஷ்வ ஹிந்து பரிஷத் யாத்திரையில் கலவரம்!

Web Desk by Web Desk
Sep 15, 2023, 01:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹரியானா மாநிலம் நூ பகுதியில் நடந்த யாத்திரையின்போது, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியதோடு, கலவரத்துக்கும் காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மம்மான் கான் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஹரியானா மாநிலம் நூ பகுதியில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில், கடந்த ஜூலை மாதம் 31-ம் தேதி, பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா நடைபெற்றது. இந்த யாத்திரை குருகிராம் – ஆல்வார் இடையே வந்தபோது, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குழு, யாத்திரையை தடுத்து நிறுத்தியது. மேலும், வீடு, கடைகள், ஹோட்டல்கள், விடுதிகள் ஆகியவற்றின் மேல் நின்று கொண்டு, ஊர்வலத்தில் பங்கேற்ற விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது இஸ்லாமிய இளைஞர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீவைத்தனர்.

இதையடுத்து, இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு, கலவரமாக வெடித்தது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். ஆனால், இஸ்லாமியர்கள் தரப்பு, காவல்துறையினர் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனிடையே, இஸ்லாமிய இளைஞர்கள் கும்பலிடம் இருந்து தப்பிப்பதற்காக, ஊர்வலத்தில் பங்கேற்ற விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும், அருகிலிருந்து கோவில்கள், காவல் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களுக்குள் தஞ்சம் புகுந்தனர்.

ஆனால், அப்படியும் விடாத இஸ்லாமிய இளைஞர்கள் குழு, காவல்நிலையத்துக்கும் தீவைத்தது. இக்கலவரத்தில் ஒரு ஊர்க்காவல்படை வீரர், ஒரு காவலர், இந்து அமைப்பைச் சேர்ந்த 2 பேர் உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறை தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், வன்முறைக்குக் காரணமான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மம்மான் கானை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். இவர், பெரோஸ்புர் ஜிர்கா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ArrestCongressHaryanaNuhRiotMLA
ShareTweetSendShare
Previous Post

சீன அதிபரை விட மோடி தொலைநோக்குப் பார்வை கொண்டவர்!

Next Post

ஆதித்யா எல்-1: 4-வது முறையாக உயரம் அதிகரப்பு!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies