இந்து அமைப்பினர் மீது தாக்குதல்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது!
Mar 15, 2026, 06:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்து அமைப்பினர் மீது தாக்குதல்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது!

விஷ்வ ஹிந்து பரிஷத் யாத்திரையில் கலவரம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 15, 2023, 01:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹரியானா மாநிலம் நூ பகுதியில் நடந்த யாத்திரையின்போது, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியதோடு, கலவரத்துக்கும் காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மம்மான் கான் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஹரியானா மாநிலம் நூ பகுதியில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில், கடந்த ஜூலை மாதம் 31-ம் தேதி, பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா நடைபெற்றது. இந்த யாத்திரை குருகிராம் – ஆல்வார் இடையே வந்தபோது, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குழு, யாத்திரையை தடுத்து நிறுத்தியது. மேலும், வீடு, கடைகள், ஹோட்டல்கள், விடுதிகள் ஆகியவற்றின் மேல் நின்று கொண்டு, ஊர்வலத்தில் பங்கேற்ற விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது இஸ்லாமிய இளைஞர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீவைத்தனர்.

இதையடுத்து, இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு, கலவரமாக வெடித்தது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். ஆனால், இஸ்லாமியர்கள் தரப்பு, காவல்துறையினர் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனிடையே, இஸ்லாமிய இளைஞர்கள் கும்பலிடம் இருந்து தப்பிப்பதற்காக, ஊர்வலத்தில் பங்கேற்ற விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும், அருகிலிருந்து கோவில்கள், காவல் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களுக்குள் தஞ்சம் புகுந்தனர்.

ஆனால், அப்படியும் விடாத இஸ்லாமிய இளைஞர்கள் குழு, காவல்நிலையத்துக்கும் தீவைத்தது. இக்கலவரத்தில் ஒரு ஊர்க்காவல்படை வீரர், ஒரு காவலர், இந்து அமைப்பைச் சேர்ந்த 2 பேர் உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறை தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், வன்முறைக்குக் காரணமான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மம்மான் கானை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். இவர், பெரோஸ்புர் ஜிர்கா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ArrestCongressHaryanaNuhRiotMLA
ShareTweetSendShare
Previous Post

சீன அதிபரை விட மோடி தொலைநோக்குப் பார்வை கொண்டவர்!

Next Post

ஆதித்யா எல்-1: 4-வது முறையாக உயரம் அதிகரப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies