ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கைது: அமலாக்கத்துறை அதிரடி!
Aug 21, 2025, 07:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கைது: அமலாக்கத்துறை அதிரடி!

டெல்லி புதிய மதுபானக் கொள்கை ஊழல் விவகாரம்!

Web Desk by Web Desk
Oct 4, 2023, 07:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி புதிய மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கடந்த 2021-ம் ஆண்டு புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இதற்காக, 749 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமம் வழங்கப்பட்டது. இந்த புதிய மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்திப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது தொடர்பாக டெல்லி தலைமைச் செயலாளர் நரேஷ் குமார், அம்மாநில துணை நிலை ஆளுநர் வினைகுமார் சக்சேனாவிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார். இதையடுத்து, புதிய மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்தார். இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் பல்வேறு இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.

பின்னர், இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட 36 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது. தொடர்ந்து, புதிய மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக மணீஷ் சிசோடியாவிடம் பலமுறை விசாரணை செய்ததோடு, கடந்த பிப்ரவரி மாதம் அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. தற்போது வரை அவர் சிறையில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், புதிய மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக, ஒய்.எஸ்.ஆர்.சி.பி. காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மகுண்டா சீனிவாசலு ரெட்டியின் மகன் ராகவ் மகுண்டா, மணீஷ் சிசோடியாவின் நெருங்கிய உதவியாளரும், டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபருமான தினேஷ் அரோரா ஆகியோர் நேற்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து, இன்று காலை ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங்கின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, இன்று மாலை சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருக்கிறார்கள்.

Tags: EdArrestaam aadmi partyMP SanjaY Singh
ShareTweetSendShare
Previous Post

இணையதள பயங்கரவாதம், பருவநிலை, புதிய பாதுகாப்பு சவால்களுக்கும் நாம் தயாராக வேண்டும் – திரௌபதி முர்மு!

Next Post

ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநராக முனீஸ் கபூரை நியமனம்!

Related News

உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலவசம் – சுற்றுலா பயணிகளை ஈர்க்க தாய்லாந்து நடவடிக்கை!

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

ஆப்கானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த influencers-ஐ கொண்டு தாலிபான்கள் விளம்பரம் : ஆபத்தானது என எச்சரிக்கை!

இலங்கை ​யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா கோலாகலம்!

எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies