தமிழகத்தில்  ரூ.3, 260 கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுப் பணிகள் : தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
Jan 14, 2026, 09:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில்  ரூ.3, 260 கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுப் பணிகள் : தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Mar 11, 2024, 07:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாட்டில் ரூ.3, 260 கோடி செலவில் 157 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுப் பணிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த பணிகளைத் தொடங்கி வைத்தார்.

தேசிய நெடுஞ்சாலை எண். 67, புதிய தேசிய நெடுஞ்சாலை 181 ஆகியவற்றில் 10.34 கி.மீ. தூரத்திற்கான சாலைப் பிரிவுகளை பிரதமர் தொடங்கிவைத்தார். இதன் மதிப்பு ரூ.23 கோடியாகும்.  தேசிய நெடுஞ்சாலை 45ஏ-ல், விழுப்புரம்-புதுச்சேரி-நாகப்பட்டினம் சாலையில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பழைய மேம்பாலத்திற்கு பதிலாக கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தையும் அவர் தொடங்கிவைத்தார். இந்தப் பாலம் ரூ.27 கோடி ரூபாய் செலவில் 0.57 கி.மீ. தூரத்திற்கு கட்டப்பட்டது.

நாகப்பட்டினம், கூடலூர்-மைசூர் சாலையில், பெரியநாயக்கன் பாளையம்- கோவைப் புறநகர் பகுதியில் ரூ.99 கோடி செலவில் 1.76 கி.மீ. தூரத்திற்கு கட்டப்பட்ட மேம்பாலத்தையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.

மேலும் தேசிய நெடுஞ்சாலை 44-ல் தர்மபுரி-சேலம் பிரிவில், 7 கி.மீ. தூரத்திற்கு தோப்பூர் சாலைப்பிரிவை அகலப்படுத்தும் பணிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இதன் மதிப்பு ரூ.905 கோடியாகும்.

ரூ.1376 கோடி ரூபாய் செலவில் திருவள்ளூரில் இருந்து, தமிழ்நாடு-ஆந்திரா எல்லைப் பகுதிவரை சென்னை-திருப்பதி தொகுப்பு -1-ல், நான்கு வழிச்சாலையை இணைக்கும் 44 கி.மீ. தூரச் சாலைக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

இருவழிச்சாலையாக உள்ள தேசிய நெடுஞ்சாலை 81 (கோயம்புத்தூர்-சிதம்பரம்) (பழைய தேசிய நெடுஞ்சாலை எண்.67 நாகப்பட்டினம்-கூடலூர்) அணுகுசாலை வசதியுடன் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். 47.6 கி.மீ. தொலைவுக்கான இந்தச்சாலை ரூ.275  கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ளது.

கடலூர்- விருத்தாச்சலம்- சேலம் இடையிலான தேசிய நெடுஞ்சாலை எண்.532-ல் அணுகுசாலை வசதியுடன் இருவழிச்சாலையை, நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்துவதுடன், இந்த சாலையின் பல்வேறு இடங்களில் சாலையின் நடுப்பகுதியில் தடுப்பு அமைத்தல், மழைநீர் வடிகால் கட்டுதல் மற்றும் கூடுதல் பாலப்பணிகள் ரூ.295 கோடி செலவில் மேற்கொள்ளவும் அடிக்கல் நாட்டப்பட்டது.

மதுரை-அச்சம்பத்து-விராட்டிப்பத்து இடையிலான தேசிய நெடுஞ்சாலை எண்.85-ல் 3.53 கி.மீ. தொலைவுக்கு  ரூ.260 கோடி செலவில் புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 157 கி.மீ. தொலைவுக்கான தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுப்பணிகள் ரூ.3,260 கோடி செலவில் மேற்கொள்ள அடிக்கல் நாட்டித் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் மெய்நிகர் வடிவில் கலந்துகொண்டார்.

Tags: PM ModiL Murugandelhi
ShareTweetSendShare
Previous Post

துவாரகா விரைவுச் சாலையின் சிறப்பம்சங்கள்!

Next Post

WPL : குஜராத் ஜெயன்ட்ஸ் பேட்டிங்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies