சமஸ்கிருதம் நமது ஆன்மீக முயற்சிக்கு ஒரு புனித பாலமாக செயல்படும் தெய்வீக மொழியாகும்! - குடியரசுத் துணைத் தலைவர்
Aug 7, 2026, 06:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமஸ்கிருதம் நமது ஆன்மீக முயற்சிக்கு ஒரு புனித பாலமாக செயல்படும் தெய்வீக மொழியாகும்! – குடியரசுத் துணைத் தலைவர்

Murugesan M by Murugesan M
Apr 26, 2024, 08:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், சமஸ்கிருதம் தெய்வீக மொழி என்றும், நமது ஆன்மிகத் தேடலில், தெய்வீகத்தை இணைக்கும் புனிதப் பாலமாக அது செயல்படுகிறது என்றும் கூறியுள்ளார்.

திருப்பதியில் உள்ள தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய அவர்,

சமஸ்கிருதம் மனித நாகரிகத்திற்கான கலாச்சார நங்கூரம் என்று விவரித்தார். “இன்றையக் காலகட்டத்தில், சமஸ்கிருதம் அறிவார்ந்த கடுமை, ஆன்மீக அமைதி மற்றும் தனக்கும் உலகிற்கும் ஆழமான இணைப்பு ஆகியவற்றைக் கொண்ட ஒரு தனித்துவமான ஆறுதலை வழங்குகிறது” என்று அவர் கூறினார்.  “திருப்பதியில் தான் ஒருவர் தெய்வீகம், ஆன்மீகம் மற்றும் மேன்மைக்கு மிக அருகில் வருகிறார்.

கோவிலில் தரிசனம் செய்த போது இதை அனுபவித்தேன். நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்ந்தேன், அனைவருக்கும் பேரின்பத்தை நாடினேன்” என்று கூறினார்.

குடியரசு துணைத்தலைவர்  ஜக்தீப் தன்கர், டாக்டர் சுதேஷ் தன்கருடன் இணைந்து வெங்கடேஸ்வரரிடம் பிரார்த்தனை செய்தார்.

பின்னர் அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “இன்று திருமலையில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது.

சேஷாசலம் மலைகளின் அமைதியான சூழலுக்கு மத்தியில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் இந்த புனித இருப்பிடம் பாரதத்தின் வளமான ஆன்மீகப் பாரம்பரியத்தின் ஒளிரும் சின்னமாகும்.

எனது சக குடிமக்கள் அனைவரின் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்தேன்”.

இந்திய அறிவு முறைகளின் மறுமலர்ச்சி மற்றும் பரப்புதலில் தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களின் பங்கை வலியுறுத்தினார்.

சமஸ்கிருதத்தின் வளமான பாரம்பரியத்திற்கும் நவீன கல்வித் தேவைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் வகையில், புதுமையான பாடத்திட்டங்களை உருவாக்கவும், பலதுறை ஆராய்ச்சியை வளர்க்கவும் அவர் அழைப்பு விடுத்தார்.

“சமஸ்கிருதம் என்னும் புனித மொழி நம்மை தெய்வீகத்துடன் இணைப்பது மட்டுமல்லாமல், உலகைப் பற்றிய முழுமையான புரிதலை நோக்கிய பாதையை ஒளிரச் செய்யட்டும்” என்று குடியரசு துணைத் தலைவர்  மேலும் கூறினார். விலைமதிப்பற்ற பழங்கால கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாப்பதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் தன்கர் வலியுறுத்தினார்.

நமது கலாச்சார பாரம்பரியத்தின் கருவூலமாக சமஸ்கிருதம் திகழ்கிறது என்று கூறிய குடியரசு துணைத் தலைவர், அதைப் பாதுகாப்பதும், மேம்படுத்துவதும் தேசிய முன்னுரிமை மற்றும் கடமை என்று குறிப்பிட்டார்.

சமஸ்கிருதம் இன்றைய தேவைக்கேற்ப வளர்க்கப்பட வேண்டும் என்றும் அதை எளிமையாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். எந்தவொரு மொழியும் சமூகத்தால் பயன்படுத்தப்படும் போதும், அதில் இலக்கியங்கள் இயற்றப்பட்டால் மட்டுமே உயிர்வாழ முடியும் என்று குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவர், நம் அன்றாட வாழ்க்கையில் சமஸ்கிருத பயன்பாட்டை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தினார்.

மத மற்றும் தத்துவ நூல்கள் மட்டுமல்லாமல், மருத்துவம், நாடகம், இசை மற்றும் அறிவியல் குறித்த மதச்சார்பற்ற படைப்புகளையும் உள்ளடக்கிய சமஸ்கிருதத்தின் வளமான மற்றும் மாறுபட்ட இலக்கியத் தொகுப்பைப் பற்றி குறிப்பிட்ட திரு தன்கர், பிரதான கல்வியில் சமஸ்கிருதத்தின் ஒருங்கிணைப்பு குறைவாகவே உள்ளது, இது பெரும்பாலும் இந்திய அறிவு முறைகளை நிராகரிக்கும் நீடித்த காலனித்துவ மனநிலையால் தடுக்கப்படுகிறது என்று எடுத்துரைத்தார்.

சமஸ்கிருதத்தைப் படிப்பது வெறுமனே ஒரு கல்வித் தேடல் அல்ல என்று கூறிய அவர், அதை சுய கண்டுபிடிப்பு மற்றும் அறிவொளியின் பயணம் என்று விவரித்தார்.

“சமஸ்கிருதத்தின் பாரம்பரியத்தை எடுத்துச் செல்லுங்கள் – கல்வி அறிவை மட்டுமல்ல, மாற்றத்திற்கான பாதையையும்” என்று அவர் அறைகூவல் விடுத்தார், மேலும் இந்த விலைமதிப்பற்ற பாரம்பரியத்தின் தூதர்களாக மாறுமாறு மாணவர்களைக் கேட்டுக்கொண்டார், இதன் பொக்கிஷங்கள் எதிர்கால சந்ததியினரை சென்றடைவதை அவர் உறுதி செய்தார்.

தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தர்   என். கோபாலசுவாமி, தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, திருப்பதியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்) இயக்குநர் பேராசிரியர் சாந்தனு பட்டாச்சார்யா, ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பிற பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags: Sanskrit is the divine language that acts as a sacred bridge to our spiritual endeavour! - Vice President of the Republic
Share
Tweet
SendShare
Previous Post

NDA கூட்டணியின் நல்லாட்சியை வாக்காளர்கள் விரும்புகிறார்கள்! – பிரதமர் மோடி

Next Post

‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ – எஸ்சிஓ பாதுகாப்பு அமைச்சர்கள் அங்கீகரித்துள்ளனர்!

Related News

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

Load More

அண்மைச் செய்திகள்

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி!

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் – முதலமைச்சர் விஜய்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies