இந்து மத நம்பிக்கையை ஒழிக்க காங்கிரஸ் சதி செய்வதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நந்தூர்பரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர்,
மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு அம்பேத்கரின் கொள்கைகளுக்கு எதிரானது என்றும், மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்தவர்களின் முதுகில் குத்துவதைப் போன்றது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டைப் பறித்து இஸ்லாமியர்களுக்கு வழங்க மாட்டோம் என எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளிக்குமாறு காங்கிரஸுக்கு கடந்த 17 நாட்களாக சவால் விடுத்து வருகிறேன். ஆனால், அதற்கு காங்கிரஸ் இதுவரை பதிலளிக்கவில்லை என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மெளனம் சாதிப்பது அக்கட்சியின் மறைமுக திட்டத்தை தெளிவுபடுத்துவதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
இந்து மத நம்பிக்கையை ஒழிக்க காங்கிரஸ் சதியில் ஈடுபட்டுள்ளதாகவும், பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.