மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு 50 தொகுதிகள் கூட கிடைக்காது என்றும், அந்தக் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறாது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ஒடிசா மாநிலம் கந்தமால் தொகுதியில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்று சூளுரைத்தார். காங்கிரசுக்கு 50 தொகுதிகள் கூட கிடைக்காது என்று கூறிய பிரதமர், அக்கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறாது என்றும் தெரிவித்தார்.
பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் ஐயர் குறிப்பிட்டதை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, மீண்டும் மீண்டும் தேச பாதுகாப்புக்கு காங்கிரஸ் அச்சுறுத்தல் விளைவிப்பதாக குற்றம்சாட்டினார்.
அணு குண்டை எப்படி பத்திரமாக வைத்திருப்பது என்றும், தற்போதைய பொருளாதார சூழலில் அதை யாராவது விலைக்கு வாங்க வரமாட்டார்களா என பாகிஸ்தான் கவலைப்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.
அந்த அணுகுண்டின் தரத்தைக் கருதி யாரும் அதை விலைபேச வரவில்லை என்றும் பாகிஸ்தானை பிரதமர் மறைமுகமாக விமர்சித்தார்.