கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலையொட்டி, மும்பையில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், 60 ஆண்டுகளாக வறுமையை ஒழிப்போம் என காங்கிரஸ் சூளுரைத்ததாகவும், காங்கிரஸை சேர்ந்த பிரதமர்கள் செங்கோட்டையில் வறுமை ஒழிப்பு குறித்து ஒவ்வொரு சுதந்திர தினத்தின்போதும் 25 நிமிடங்கள் உரையாற்றியதாகவும் கூறினார்.
ஆனால், நடைமுறையில் வறுமையை ஒழிக்க காங்கிரஸ் தவறிவிட்டதாக குற்றம்சாட்டிய பிரதமர், கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் 25 கோடி பேர் வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டிருப்பதாக கூறினார்.
இதன் மூலம் காங்கிரஸால் முடியாததை பாஜக முடித்துக் காட்டியதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டதை நினைவுகூர்ந்த பிரதமர், தங்கள் கனவை நிறைவேற்றுவதற்காக இந்தியர்கள் 500 ஆண்டுகளானாலும் போராடும் மன வலிமை பெற்றவர்கள் என்பதை உலகம் இன்றைக்கு உணர்ந்துவிட்டதாக கூறினார்.
முன்னதாக வீர சாவர்க்கர், அம்பேத்கர், பால் தாக்கரே நினைவிடங்களில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.