ஒடிசாவில் இரட்டை என்ஜின் அரசு அமையப் போவது உறுதி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தேன்கனல் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். இயற்கை வளங்கள் நிறைந்த ஒடிசாவில் மக்கள் வறுமையில் வாடுவதாக தெரிவித்தார். மாநிலத்தின் கனிமங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக தெரிவித்த பிரதமர், பூரி ஜெகநாதர் கோயிலின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் கூறினார்.
கடந்த 25 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த பிஜூ ஜனதளம் மாநிலத்தின் வளர்சிக்கு என்ன பணிகளை மேற்கொண்டது என கேள்வி எழுப்பினார். ஒடிசாவில் முதன்முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் நாடாளுமன்ற தேர்தலிலும் அதிக இடங்களை கைப்பற்றும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.