ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடல் நிலை மோசமடைந்து வருவது குறித்து ஜூன் 10ஆம் தேதிக்குப் பிறகு விசாரணை நடத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஒடிசா பாலசோரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,
ஏழை மாநிலமான ஒடிசாவை முதலில் காங்கிரஸ் தலைவர்கள் கொள்ளையடித்ததாகவும், கடந்த கடந்த 25 ஆண்டுகளாக பிஜூ ஜனதா தளம் கொள்ளையடித்து வருவதாகவும் கூறினார்.
ஒடிசா முதல்வரால் தனியாக எந்த பணிகளையும் தற்போது செய்ய முடியாது என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
அவரின் உடல்நிலை மோசமடைந்ததன் பின்னணியில் ஏதேனும் சதி இருக்குமோ என்ற கவலையை மக்கள் எழுப்புவதாக தெரிவித்த மோடி, ஜூன் 10-ம் தேதி பாஜக ஆட்சி அமைக்கும் போது, முதல்வரின் உடல்நிலை குறித்து சிறப்புக் குழு விசாரணை நடத்தும் என்றும் பிரதமர் கூறினார்.
370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை ஜம்மு காஷ்மீர் மக்கள் திருவிழா போல் கொண்டாடுவதாகவும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டதன் மூலம் 500 ஆண்டு கால காத்திருப்புக்கு முடிவுக்கு வந்துள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.