ஆன்மீக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
Aug 24, 2025, 02:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆன்மீக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Web Desk by Web Desk
Jul 3, 2024, 10:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் ஆன்மீக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது. இவ்விபத்து தொடர்பாக, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீது புதிய குற்றவியல் சட்டங்களின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில், ஃபுல்லெரா என்ற கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் பிரசங்கம் நிகழ்த்தினார். இதில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மதபோதகர் போலே பாபா மேடையில் கீழே இறங்கி வந்தபோது, மக்கள் ஒருவரையொருவர் முண்டியடித்து கொண்டு அவரை நோக்கி முன்னே சென்றனர்.

இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த பெண்கள் மற்றும் குழந்தைகள், எட்டா மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.

மாநில அரசு சார்பில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினனார். ஆக்ரா நகர கூடுதல் டி.ஜி. தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

இந்த விபத்திற்கு காரணமான ஆன்மீக பிரசங்கத்தை நடத்திய போலே பாபா தலைமறைவாகியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹத்ராஸில் விபத்து நிகழ்ந்த இடத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், மோப்ப நாய் உதவியுடன் தடயவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், தலைமறைவாகியுள்ள போலே பாபாவின் அறக்கட்டளையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இவ்விபத்து தொடர்பாக, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீது, பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 80 ஆயிரம் பேர் கூடுவதற்காக அனுமதி பெற்ற நிலையில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடியதால், நெரிசல் ஏற்பட்டு இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags: More than 100 people were killed in a jam at a spiritual gathering!
ShareTweetSendShare
Previous Post

ஒளிரப்போகும் அயோத்தி ரூ.85,000 கோடி முதலீட்டில் திட்டங்கள் ரெடி!

Next Post

இடையூறு செய்த எதிர்க்கட்சி எம்.பி.க்கு தண்ணீர் வழங்கிய பிரதமர் மோடி!

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies