ஜூலை 16-இல் மாநிலங்களின் கடல்சார், நீர்வழி போக்குவரத்து குழு கூட்டம்!
Aug 19, 2025, 04:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜூலை 16-இல் மாநிலங்களின் கடல்சார், நீர்வழி போக்குவரத்து குழு கூட்டம்!

Web Desk by Web Desk
Jul 13, 2024, 04:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய கப்பல்துறை அமைச்சகம் ஜூலை 16ஆம் தேதி மாநிலங்களின் கடல்சார், நீர்வழிப் போக்குவரத்துக் குழுக்களின் கூட்டத்தை நடத்துகிறது.

மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் நீர்வழிகள் அமைச்சகம் மாநிலங்களின் கடல்சார், நீர்வழிப் போக்குவரத்துக் குழுக்களின் கூட்டத்தை 4 ஜூலை 16 ஆம் தேதி காணொலி மூலம் நடத்தவுள்ளது. மத்திய கப்பல் துறை செயலாளர்  டி. கே. ராமச்சந்திரன் இக்கூட்டத்திற்குத் தலைமை வகிக்க உள்ளார்.

இந்தியா முழுவதும் கடல்சார் போக்குவரத்திலும் பிற நீர்வழிப் போக்குவரத்திலும் விரிவான வளர்ச்சியை உறுதி செய்வதை இந்தக் குழு நோக்கமாகக் கொண்டுள்ளது. மாநிலங்கள் சார்ந்த கடல்சார், நீர்வழிப் போக்குவரத்துத் திட்டங்களைத் தயாரித்தல், கடல்சார் கொள்கைகளை உருவாக்குதல், பசுமை முன்முயற்சிகள், நீர்வழித்தடங்கள் மேம்பாடு, கப்பல் சுற்றுலா, நகர்ப்புற நீர்வழிப் போக்குவரத்து, கலங்கரை விளக்கங்கள் மேம்பாடு ஆகியவை தொடர்பாக இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும்.

ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள மாநில குழுக்களின் பணிகளில் உள்ள முன்னேற்றம், சாகர்மாலா திட்டத்தை செயல்படுத்துவது, சரக்குப் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டம், கடலோர, ஆற்றுக் கப்பல் சுற்றுலா தொடர்பாக மாநிலங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்,  உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்தும் இக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும்.

நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை என்பதை  உணர்ந்து, மத்திய கப்பல் துறை அமைச்சகம் ஒவ்வொரு மாநிலத்திலும், மாநில கடல்சார், நீர்வழிப் போக்குவரத்துக் குழுவை நிறுவியுள்ளது. கடல்சார் துறைகளிலும் நீர்வழிப் போக்குவரத்துத் துறையிலும் பல்வேறு முன்முயற்சிகளை ஒருங்கிணைப்பதில் இந்தக் குழுக்கள் முக்கிய கவனம் செலுத்துகின்றன.

ஒவ்வொரு மாநில குழுவும் மாநில தலைமைச் செயலாளர் அல்லது கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் செயல்படுகிறது. பெரிய துறைமுகங்கள், கடல்சார் வாரியங்கள், மாநில பொதுப்பணித்துறை,  சுற்றுலாத் துறை, மீன்வளத் துறை, ரயில்வே,  தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சுங்கத் துறை ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக இந்தக் குழுக்கள் உள்ளன.

தற்போது, ஆந்திரா, மிசோரம், ஹிமாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, புதுச்சேரி, ராஜஸ்தான், பீகார், அசாம், கோவா, கேரளா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் லட்சத்தீவு யூனியன் பிரதேசத்திலும் இந்தக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்தக் குழுக்கள் விரைவில் அமைக்கப்படவுள்ளன.

ShareTweetSendShare
Previous Post

தூர்வாரப்படும்போது கிடைக்கும்  மணலை மதிப்பிடுவதற்கான ஆராய்ச்சி முன்மொழிவுக்கு மத்திய அரசு ஒப்புதல்!

Next Post

விக்கிரவாண்டியில் ரூ.250 கோடி செலவு செய்து வெற்றி பெற்ற திமுக : அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

Related News

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 பட்டத்தை வென்ற மாணிகா விஸ்வகர்மா!

நிர்மலா சீதாராமன் – தங்கம் தென்னரசு சந்திப்பு!

உயர்வுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை!

தோல் புற்றுநோயால் ஐடி ஊழியர் பாதிப்பு – வெற்றிகரமாக சிகிச்சை அளித்த சென்னை சிம்ஸ் மருத்துவமனை!

முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டம் தொடங்கி வைப்பு!

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

எலான் மஸ்க்கால் பணிநீக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் CEO பராக் அகர்வால்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூரியர் மேனை பாராட்டிய ஆஸி. பெண்!

மனித உடல் உறுப்பு திருட்டு : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

தெரு நாய்களுக்கு ஆதரவாக விலங்குநல ஆர்வலர்கள் போராட்டம்!

கரூர் : போலி அறக்கட்டளை நடத்தி பண மோசடி – மாவட்ட ஆட்சியரகத்தில் புகார்!

வெனிசுலா கனமழை : வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி!

கோவிலம்பாக்கம் ஊராட்சி : மதுபோதையில் ஊழியர்களை தாக்கிய ஊராட்சியைச் செயலர்!

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies