ஜூலை 16-இல் மாநிலங்களின் கடல்சார், நீர்வழி போக்குவரத்து குழு கூட்டம்!
Aug 20, 2026, 01:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜூலை 16-இல் மாநிலங்களின் கடல்சார், நீர்வழி போக்குவரத்து குழு கூட்டம்!

Murugesan M by Murugesan M
Jul 13, 2024, 04:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய கப்பல்துறை அமைச்சகம் ஜூலை 16ஆம் தேதி மாநிலங்களின் கடல்சார், நீர்வழிப் போக்குவரத்துக் குழுக்களின் கூட்டத்தை நடத்துகிறது.

மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் நீர்வழிகள் அமைச்சகம் மாநிலங்களின் கடல்சார், நீர்வழிப் போக்குவரத்துக் குழுக்களின் கூட்டத்தை 4 ஜூலை 16 ஆம் தேதி காணொலி மூலம் நடத்தவுள்ளது. மத்திய கப்பல் துறை செயலாளர்  டி. கே. ராமச்சந்திரன் இக்கூட்டத்திற்குத் தலைமை வகிக்க உள்ளார்.

இந்தியா முழுவதும் கடல்சார் போக்குவரத்திலும் பிற நீர்வழிப் போக்குவரத்திலும் விரிவான வளர்ச்சியை உறுதி செய்வதை இந்தக் குழு நோக்கமாகக் கொண்டுள்ளது. மாநிலங்கள் சார்ந்த கடல்சார், நீர்வழிப் போக்குவரத்துத் திட்டங்களைத் தயாரித்தல், கடல்சார் கொள்கைகளை உருவாக்குதல், பசுமை முன்முயற்சிகள், நீர்வழித்தடங்கள் மேம்பாடு, கப்பல் சுற்றுலா, நகர்ப்புற நீர்வழிப் போக்குவரத்து, கலங்கரை விளக்கங்கள் மேம்பாடு ஆகியவை தொடர்பாக இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும்.

ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள மாநில குழுக்களின் பணிகளில் உள்ள முன்னேற்றம், சாகர்மாலா திட்டத்தை செயல்படுத்துவது, சரக்குப் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டம், கடலோர, ஆற்றுக் கப்பல் சுற்றுலா தொடர்பாக மாநிலங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்,  உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்தும் இக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும்.

நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை என்பதை  உணர்ந்து, மத்திய கப்பல் துறை அமைச்சகம் ஒவ்வொரு மாநிலத்திலும், மாநில கடல்சார், நீர்வழிப் போக்குவரத்துக் குழுவை நிறுவியுள்ளது. கடல்சார் துறைகளிலும் நீர்வழிப் போக்குவரத்துத் துறையிலும் பல்வேறு முன்முயற்சிகளை ஒருங்கிணைப்பதில் இந்தக் குழுக்கள் முக்கிய கவனம் செலுத்துகின்றன.

ஒவ்வொரு மாநில குழுவும் மாநில தலைமைச் செயலாளர் அல்லது கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் செயல்படுகிறது. பெரிய துறைமுகங்கள், கடல்சார் வாரியங்கள், மாநில பொதுப்பணித்துறை,  சுற்றுலாத் துறை, மீன்வளத் துறை, ரயில்வே,  தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சுங்கத் துறை ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக இந்தக் குழுக்கள் உள்ளன.

தற்போது, ஆந்திரா, மிசோரம், ஹிமாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, புதுச்சேரி, ராஜஸ்தான், பீகார், அசாம், கோவா, கேரளா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் லட்சத்தீவு யூனியன் பிரதேசத்திலும் இந்தக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்தக் குழுக்கள் விரைவில் அமைக்கப்படவுள்ளன.

Share
Tweet
SendShare
Previous Post

தூர்வாரப்படும்போது கிடைக்கும்  மணலை மதிப்பிடுவதற்கான ஆராய்ச்சி முன்மொழிவுக்கு மத்திய அரசு ஒப்புதல்!

Next Post

விக்கிரவாண்டியில் ரூ.250 கோடி செலவு செய்து வெற்றி பெற்ற திமுக : அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

Related News

சென்னையில் நாளை தென்மாநில முதலமைச்சர்கள் கூட்டம்; அமித் ஷா பங்கேற்பு

2027க்குள் 50 புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் : காத்திருக்கும் புதிய அனுபவம் : நீண்ட தூர ரயில் பயணிகளுக்கு SURPRISE வசதிகள் – சிறப்பு தொகுப்பு!

சீனாவின் கடல் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : Sea Guardian ட்ரோன்களை குத்தகைக்கு எடுத்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

பாஜகவில் புதிய அணியை களமிறக்கிய நிதின் நபின் : அனைத்து சமூகங்களுக்கும் சமவாய்ப்பு – சிறப்பு தொகுப்பு!

மின்கடத்தி கொள்முதல் முறைகேடு – 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு வாகனம் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பால் கொள்முதல் விலை உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

எப்போது பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்பது தெரியும் – முதல்வர் விஜய் பேச்சு!

மருத்துவக் காப்பீட்டுத் தொகை ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு!

மதுரையில் பூசாரி உயிரிழந்த விவகாரம் – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை – உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் முதற்கட்டமாக 500 விளையாட்டு மைதானங்கள் தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு: இன்று சென்னை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!

கோவையில் பாஜக சார்பில் தேசிய கொடி பேரணி; நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

இந்திய பாதுகாப்புத்துறையின் GAME CHANGER ‘பிரம்மோஸ்-NG’ – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies