திவாலாகும் பைஜூஸ் அதீத ஆசையால் சரிந்த கதை!
Aug 7, 2026, 04:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திவாலாகும் பைஜூஸ் அதீத ஆசையால் சரிந்த கதை!

Murugesan M by Murugesan M
Jul 20, 2024, 12:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமலாக்கத் துறை சோதனை, லுக் அவுட் நோட்டீஸ் , முதலீட்டாளர்களுடன் பிரச்னை, ஊழியர்கள் வேலை இழப்பு என தொடர் சர்ச்சைகளில் சிக்கி வந்த பைஜூஸ் நிறுவனத்துக்கு எதிரான திவால் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளது. பைஜூஸ் நிறுவனத்தின் அதிவேக வளர்ச்சியும் ,அதிவேக சரிவும் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

2011ம் ஆண்டு பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு ஆன்லைன் ஸ்டார்ட்அப் நிறுவனமாக தொடங்கிய பைஜூஸ், மிக குறுகிய காலத்திலேயே கல்வி உலகில் முன்னணி ஆன் லைன் நிறுவனமாக வளர்ச்சி அடைந்தது. கொரொனா நோய் தொற்று பரவிய ஆண்டுகளில் யாரும் எதிர்பாராத வகையில் அபரிதமான லாபத்தையும் வளர்ச்சியையும் பைஜூஸ் கண்டது.

பைஜூஸ் நிறுவனம் அந்நியச் செலாவணி விதிமுறைகளை மீறி செயல்படுவதாக குற்றச் சாட்டுக்கள் எழுந்ததைத் தொடர்ந்து, பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரனின் வீடு உட்பட பைஜூஸுக்குத் தொடர்புடைய பல இடங்களில் கடந்த ஏப்ரல் மாதம் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரையிலான காலத்தில் சுமார் 28,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான அந்நிய முதலீடுகளை அந்த நிறுவனம் பெற்றிருப்பது தெரியவந்தது.

இது மட்டுமல்லாமல், அந்நிய நேரடி முதலீடு என்ற பெயரில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 9,754 கோடி ரூபாயை அனுப்பி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்நிய முதலீடுகள் தொடர்பாக முறையான ஆவணங்களைக் காட்டாமல் 9,362 கோடி ரூபாய்க்கு மேலாக அந்நியச் செலாவணி மோசடியிலும் பைஜூஸ் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

அமலாக்கத் துறை நடவடிக்கையை தொடர்ந்து பைஜூஸ், தனது வருமான வரி கணக்குகளை உரிய நேரத்தில் தாக்கல் செய்யாமல் இருந்தது. மேலும் நிறுவனம் வாங்கியிருந்த கடன்களுக்கான வட்டித் தொகையையும் செலுத்தாமல் இருந்தது. அமெரிக்கா, நெதர் லாந்து போன்ற நாடுகளிலிருந்து பைஜுஸில் முதலீடு செய்திருந்த அந்நிய முதலீட்டாளர்களும் பைஜூஸ் மீது குற்றம் சுமத்தி பல்வேறு வழக்குகள் பதிவு செய்தன.

பற்பல நிதி சிக்கல்களில் சிக்கி விழி பிதுங்கி இருந்த பைஜூஸ், 2023ஆம் ஆண்டு BCCI உடனான தனது ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டாம் என்று முடிவு செய்தது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிட் ஸ்பான்சர்களான பைஜூஸின் இந்த முடிவை ஏற்றுக்கொண்டது BCCI .

2023ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், பைஜூஸ் நிறுவனத்துக்கு எதிராக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை (NCLT) இந்திய கிரிக்கெட் வாரியம் அணுகியது.

தங்களுக்கு பைஜூஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய நிலுவையைத் தொகையான 158 கோடி ரூபாயை மீட்டுத் தரச்சொல்லி அந்நிறுவனத்துக்கு எதிராக திவால் BCCI மனு தாக்கல் செய்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த வழக்கின் முதல் விசாரணையில் பைஜூஸ் நிறுவனத்துக்கு NCLT நோட்டீஸ் அனுப்பியது.

பைஜுஸின் தற்போதைய நிர்வாகத்திற்கு எதிராக திவால் நடவடிக்கைகளை தொடங்க பிசிசிஐயின் மனுவை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டது. பைஜூஸ் கடன் பாக்கி வைத்துள்ளது மற்றும் கடனை செலுத்துவதில் தவறி உள்ளது என்று தெளிவாக தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

மேலும் பைஜூஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவை இடைநீக்கம் செய்த தீர்ப்பாயம் , பைஜுஸை மேற்பார்வையிட ஒரு இடைக்கால தலைவரை நியமித்துள்ளளது.

இந்த தீர்ப்பை எதிர்த்து பைஜூஸ் நிறுவனம் நீதிமன்றத்தை நாடலாம். நீதிமன்றத்தில் பைஜூஸுக்கு ஆதரவாக தீர்ப்பு வரலாம் என்றாலும் , பைஜூஸுக்கு இது பெரிய பின்னடைவு என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய பைஜூஸ், செலவினங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மொத்தமாக ஊழியர்களைப் பணியிலிருந்து நீக்கியது. இதன் தொடர்ச்சியாக, வாடகை கூட செலுத்த முடியாமல் பெங்களூருவில் உள்ள தனது பிரம்மாண்ட அலுவலகத்தை காலி செய்தது.

இதற்கிடையே, பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரன் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்க வகையில், அமலாக்கத் துறை அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது.

பைஜூஸ் நிறுவனத்தில் ரவீந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மொத்தமாக 26.3 சதவீத பங்குகள் உள்ளன. நிர்வாகக் குழுவில் உள்ள பிற பங்குதாரர்களிடம் சுமார் 32 சதவீத பங்குகள் உள்ளன.

இந்நிலையில், பைஜூஸ் நிர்வாக குழுவும் ரவீந்திரனுக்கு எதிராக திரும்பியது. ரவீந்திரனை தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருக்க நீக்கவும், அவரின் குடும்ப உறுப்பினர்களை நிர்வாக குழுவில் இருந்து விலக்கவும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. நீதிமன்றம் ஏறியும், இந்த நிர்வாகக் குழு கூட்டத்தை ரவீந்திரனால் தடுக்க முடியவில்லை.

கேரள மாநிலம் கண்ணூரில் சராசரி ஆசிரியர் குடும்பத்தில் பிறந்து சாதாரண டியூஷன் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய ரவீந்திரன் 22 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய நிறுவனமாக பைஜூஸை உயர்த்தியது சாதாரண விஷயமல்ல. ஒரு சாதனை தான்.

தனது மனைவி திவ்யா கோகுல்நாத் உடன் சேர்ந்து ரவீந்திரன் பைஜூஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். பள்ளி மாணவர்களுக்கு கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் போன்ற பாடங்களில் ஆன்லைனில் டியூஷன் வழங்கும் நிறுவனமாக பைஜூஸ் மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியது.

அதீத வளர்ச்சியைக் கண்ட பைஜூஸ் அதே வேகத்தில் சறுக்கியதற்கு காரணம் அதீத ஆசையும் நிர்வாக குளறுபடிகளும் தாம் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

கொரொனா காலத்துக்குப் பின்னர் ஆன் லைனில் கல்வி கற்க மாணவர்கள் வராததால் பைஜூஸ் நஷ்டத்தை சந்தித்தது. முன்யோசனை இன்றி பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களை ஒன்றன் பின் ஒன்றாக பல கோடிகளை செலவழித்து வாங்கியது பைஜூஸின் நஷ்டத்தை மேலும் அதிகரித்தது.

தனது சொந்த செலவுகளையும் கட்டுக்கடங்கால் அதிகரித்தும் , பைஜுஸை நடத்த திறமையான தலைமைச்செயல் அதிகாரியை நீண்ட காலமாக நியமிக்காமல் இருந்ததும் பைஜூஸின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.

Tags: The story of the bankrupt Baijus collapsed due to excessive desire!
Share
Tweet
SendShare
Previous Post

ஆடி பிரதோஷம்… ஏராளமானோர் சாமி தரிசனம்!

Next Post

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை 54,860 ரூபாய்க்கு விற்பனை!

Related News

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி!

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் – முதலமைச்சர் விஜய்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies