பிரதமர் மோடியின் ஆட்சியில் பெண்களுக்காக எண்ணற்ற திட்டங்கள் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன்
Jul 1, 2025, 02:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியின் ஆட்சியில் பெண்களுக்காக எண்ணற்ற திட்டங்கள் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன்

Web Desk by Web Desk
Sep 5, 2024, 11:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் ஆட்சியின்போது பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டை விட பிரதமர் மோடியின் ஆட்சியில் பெண்களுக்காக பல கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அதிகாரம் , அரசியல் என எல்லாவற்றிலும் உயர்ந்து வரும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற மகளிருக்கான கருத்தரங்கம் தனியார் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அடிமட்ட உழைப்பாளிகளுக்காக பிரதமர் மோடி திட்டங்களை தீட்டி வருகிறார்.
உலக நாடுகளில் முன்னேற்றத்தை நோக்கி நகர்த்துக் கொண்டிருக்கக்கூடிய நாடாக இந்தியா விளங்கி வருகிறது. 2047 இல் இந்தியா மைல்கல் சாதனையை படைக்க உள்ளது.

அடுத்த தலைமுறையினரின் முன்னேற்றத்தை நோக்கி இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது. அதிலும் முக்கியமாக பெண்களின் வளர்ச்சியிலும் பெண்களின் முன்னேற்றத்திலும் மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது.

இந்தியாவின் ஜி 20 மாநாட்டில் உலகின் முக்கிய 20 நாடுகள் கலந்து கொண்டன.
இந்தியாவில்  டிஜிட்டல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் டிஜிட்டல் மயம் பெரிய அளவில் உறுதுணையாக இருந்துள்ளது.

மத்திய அரசை பெண்களுக்கு எல்லா வகையிலும் உதவிகளை செய்து வருகிறது. கிராமப்புறம், நகர்ப்புறம், படித்தவர், படிக்காதவர் என எந்த பாகுபாடும் இன்றி மத்திய அரசு பெண்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.

நாம், நமது மகன்கள், நமது பேரன்கள் என நமது அடுத்த தலைமுறையினர் அனைவரும் வளர்ச்சியடைந்த சிறப்பான இந்தியாவை 2047-இல் காண்பார்கள்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் தமிழகத்தில் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டது.
தொட்டில் குழந்தை திட்டம் போன்ற பல சிறப்பான திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தவர், பெண்களுக்கு எதிரான பல தடைகளை நீக்கி பெண்கள் முன்னேற சிறப்பாக செயல்பட்டவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என தெரிவித்தார்.

தற்போது இந்தியாவில் 100 க்கும் மேற்பட்ட பெண் நீதிபதிகள் இந்தியா முழுவதும் நீதியரசர்களாக உள்ளார்கள். இந்தியாவில் முக்கிய துறைகளில் பெண்கள் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார்கள். 2013 இல் 5.87 சதவீதமாக இருந்த பெண் காவலர்கள் எண்ணிக்கை 2022 இல் 11.75 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பெண்களுக்கு தேவையான திட்டங்களை ஆராய்ந்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு எல்லா இடங்களிலும் எல்லா உரிமையையும் வழங்க மத்திய அரசு தொடர்ந்து போராடி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பெண்கள் கல்வியிலும் முன்னேறியுள்ளார்கள்.

பிரதமராக மோடி பதவி ஏற்ற 10 ஆண்டுகளில் பெண்களின் முன்னேற்றத்திற்கு பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தியுள்ளார். இந்தியாவில் உள்ள 53 கோடி வங்கி கணக்குகளில் 55 சதவீதம் பெண்களின் வங்கி கணக்குகளாக இருக்கிறது என தெரிவித்தார்

கடந்த 10 ஆண்டுகளில் பெண் தொழில்முனைவோரின் எண்ணிக்கை சரளமாக உயர்ந்துள்ளது.பெண்களின் முன்னேற்றதால் இந்தியாவும் பல இடங்களில் முன்னேறியுள்ளது.10 ஆண்டுகளில் 311 தொழில் நகரங்கள் பெண்களுக்காகவே இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது.

மோடி அரசு பதவி ஏற்ற பின் பெண்களை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்கவில்லை. பெண்கள் முதலாளிகளாக இருப்பதால் மட்டும் இந்தியாவில் பெண்கள் முன்னேறவில்லை, சிறிய கிராமத்தில் பல புது புது செயல்பாடுகளில் பெண்கள் ஈடுபட்டுள்ளதாலும் இந்தியாவில் பெண்கள் முன்னேறி உள்ளார்கள்.

இந்தியாவில் ஒவ்வொரு பெண்களும் சக்தி வாய்ந்த பெண்களாக உள்ளார்கள். காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு ஒதுக்கிய பட்ஜெட்டை விட பிரதமர் மோடியின் ஆட்சியில் பெண்களுக்கு பட்ஜெட்டில் பல கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 2024 மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்காக 3.10 லட்சம் கோடி என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Tags: Chennaidigital indiamodi governmentnirmalla seetharaman
ShareTweetSendShare
Previous Post

விஜய் நடித்த கோட் திரைப்படம் ரிலீஸ் – ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்!

Next Post

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி செயல்பட்டு வருகிறது – நடிகை குஷ்பு விளக்கம்!

Related News

பிரம்மோஸ் Vs K6 ஏவுகணை : இந்தியாவின் போர் வாளும்… பாதுகாப்புக் கவசமும்…!

இந்தியாவுடன் நட்பு பாராட்டும் இஸ்ரேல் – ஈரான்!

பறிபோகும் பொதுச்செயலாளர் பதவி : ஓரங்கட்டப்படும் துரைமுருகன்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

முதலமைச்சர் தொகுதியில் துயரம் : 40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி!

ரபேலை விட கூடுதல் வசதி : விமானப்படையில் அதிக அளவில் சேர்க்கப்படும் தேஜாஸ் MK1A!

Load More

அண்மைச் செய்திகள்

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் – எல்.முருகன் திட்டவட்டம்!

பறக்கும் துப்பாக்கி – அசத்தும் இந்தியா!

கூட்டணிக்குள் குழப்பம் – திக்குமுக்காடும் திமுக!

தனித்தீவாக மாறிய அவலம் : அடிப்படை வசதி இன்றி தவியாய் தவிக்கும் மக்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 9 கேள்விகள் : நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் தொழில்துறை தடுமாறுகிறது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

டாஸ்மாக் கடை வழக்கில் தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி!

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் ரீல்ஸ் பார்த்து நேரத்தைக் கழித்த உறுப்பினர்கள்!

50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி : எல்.முருகன் பெருமிதம்!

ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமின் – உச்சநீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies