ஹிந்தியை திணித்தது பிரதமர் மோடியா? அல்லது காங்கிரஸ் கட்சியா? என மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அந்நிய மண்ணில் தாய் நாட்டை தாழ்த்தி பேசுவதில் ராகுல்காந்தி மகிழ்ச்சி காண்கிறார் என தெரிவித்துள்ளார்.
ஹிந்தியை திணித்தது பிரதமர் மோடியா? அல்லது காங்கிரஸ் கட்சியா? என கேள்வி எழுப்பிய அண்ணாமலை,
இந்திராகாந்தி மற்றும் ராஜிவ்காந்தி ஆட்சியில் தான் ஹிந்தி மொழி கற்றலை கட்டாயமாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜக கொண்டு வந்த தேசிய கல்விக்கொள்கை தாய்மொழி வழி கல்வியை ஊக்குவிக்கிறது என தெரிவித்துள்ள அண்ணாமலை, 60 ஆண்டுகால ஆட்சியில் பிராந்திய மொழிகளை ஊக்குவிக்க காங்கிரஸ் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் தமிழ் மொழியின் பெருமைகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தவர் பிரதமர் மோடி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.