இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஈரான் உரிய விலை கொடுத்தே ஆக வேண்டும் - பெஞ்சமின் நெதன்யாகு ஆவேசம்!
Oct 9, 2025, 02:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஈரான் உரிய விலை கொடுத்தே ஆக வேண்டும் – பெஞ்சமின் நெதன்யாகு ஆவேசம்!

Web Desk by Web Desk
Oct 2, 2024, 10:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி ஈரான் மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாகவும், இதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும் எனவும் அந்நாட்டின் பிரதமர் நெதன்யாகு சூளுரை விடுத்துள்ளார்.

பாலஸ்தீனத்தின் காசா நகரை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஓராண்டாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஈரானின் ஆதரவு பெற்ற லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினரும், ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இது தவிர சிரியாவின் எல்லையோர பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஈரான் ஆதரவு ஆயுத குழுக்களும் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், இந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரை இஸ்ரேல் குண்டு வீசி தாக்கி கொன்ற நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. 400க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்கியதில், டெல் அவிவ் நகரில் 30 பேர் பலியான நிலையில், பலர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் தாக்குதலை தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இஸ்ரேல் அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி ஈரான் மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாகவும், இதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும் எனவும் சூளுரைத்துள்ளார்.

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் தோல்வியடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான நமது உறுதியையும், எதிரிகளுக்குப் பதிலடி கொடுப்பதற்கான நமது உறுதியையும் ஈரானின் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேலில் பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில், இஸ்ரேலில் வசிக்கும் இந்தியா்கள் விழிப்புடனும், பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுமாறும் அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களிலேயே தங்கியிருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதுடன் இஸ்ரேல் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் இந்திய தூதரகம் கூறியுள்ளது.

Tags: Iran has made a huge mistakemissile attack on IsraelPrime Minister Netanyahu
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தின் கல்வி, தொழில் புரட்சிக்கு வித்திட்டவர் கர்மவீரர் காமராஜர் அண்ணாமலை புகழாரம்!

Next Post

பாம்பன் செங்குத்து தூக்குப் பாலம் சோதனை வெற்றி – பட்டாசு வெடித்து கொண்டாடிய ஊழியர்கள்!

Related News

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

கோவில்பட்டிக்கு சென்ற வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அதிமுக, பாஜகவினர்!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

விஜய் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு : நயினார் நாகேந்திரன் பேட்டி!

திருவண்ணாமலை : மாநில அளவிலான கைப்பந்து போட்டி – 38 அணிகள் பங்கேற்பு!

பாம் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சீனா : திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் சூழ்ந்து காட்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies