தமிழகத்தில் மதுக்கடைகளை திறந்த திமுக அரசு அதனை மூட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்!
Aug 15, 2026, 07:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் மதுக்கடைகளை திறந்த திமுக அரசு அதனை மூட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Oct 4, 2024, 11:57 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜிஎஸ்டி, நீட் தேர்வுக்கு எல்லாம் மாநில உரிமை பேசும் திமுக அரசு, பூரண மதுவிலக்கை அமல்படுத்த மத்திய அரசை கைகாட்டுவது ஏன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

ம.பொ.சிவஞானத்தின் 29 வது நினைவு நாளையொட்டி சென்னை தி.நகரில் உள்ள உருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது : பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி பகிர்வை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை சரியானது‌தான்.

மதுக்கடைகளை முதலில் திறந்தது யார்‌.?தமிழக அரசு தானே‌‌. மாநில உரிமைகள் பேசும் திமுக, பூரண மதுவிலக்கை அமல்படுத்த சொன்னால் மட்டும் ஏன் மத்திய அரசை கைக்காட்டுகிறீர்கள்?

குஜராத் மாநில அரசு 50,000 கோடிக்கு பால் விற்பனை செய்யும்போது , தமிழகம் 54,000 கோடிக்கு மது விற்பனை செய்கிறது. சாதிவாரி இட ஒதுக்கீடு கொடுக்க முடியும் என்றால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உங்களுக்கு உரிமை இல்லையா? மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் வந்து விடும் என்று சொல்வதற்கு இவ்வளவு கட்டமைப்பு, காவல்துறை அதிகாரம் தேவையா?

நமக்கு நாமே நடைபயணத்தின் போது தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த காந்தி ஜெயந்திக்கு டாஸ்மாக்கை மூடுவோம் என்று கூறினார்‌.அவர் கூறி எத்தனை காந்தி ஜெயந்தி கடந்து விட்டது.

அமைச்சரவை மாற்றத்தை நான் பெரிதளவில் ஏற்றுக் கொள்ளவில்லை, தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில் பட்டியலினத்தை சார்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளனர்.. அமைச்சர் ராஜ கண்ணப்பனை மூன்று முறை துறை மாற்றம் செய்துள்ளனர்.ஒரு துறையின் மீது முழுமையாக எப்படி கவனம் செலுத்த முடியும்‌. கருணாநிதியின் பேரன்,ஸ்டாலின் மகன் என்ற தகுதியை தாண்டி துணை முதலமைச்சராக உதயநிதிக்கு என்ன தகுதி உள்ளது” என சீமான் கேள்வி எழுப்பினார்.

 

Tags: tamilnaduDMKNaam Tamilar katchialcohol prohibitionseeman pressmeet
Share
Tweet
SendShare
Previous Post

தவெக முதல் மாநாடு – விக்கிரவாண்டியில் நடைபெற்ற பந்தகால் நடும் நிகழ்ச்சி!

Next Post

திருப்பூர் குமரன் தியாகங்களை எண்ணி போற்றி வணங்குவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Related News

நக்சல் மனநிலை கொண்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

80-வது சுதந்திர தின விழா : மூவர்ண கொடியேற்றிய மாவட்ட ஆட்சியர்கள்!

வந்தே மாதரம் பாடலை பாதியில் நிறுத்தச்சொன்ன சோனியா காந்தி – பாஜக கண்டனம்!

கிருஷ்ணசாமி உள்ளிடோருக்கு முதல்வரின் நல் ஆளுமை விருது – விஜய் வழங்கி கௌரவித்தார்!

உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற முதல் பெண் ருக்மிணி லட்சுமிபதி – சிறப்பு தொகுப்பு!

பஜனை பாடல்கள் மூலம் விடுதலை வேள்வியை மூட்டிய பங்கஜத்தம்மாள் : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

80-வது சுதந்திர தினம் கோலாகலம் – கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!

சாதனை ஏணியில் சரித்திரம் படைக்கும் இந்திய பொருளாதாரம் – சிறப்பு தொகுப்பு!

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் ‘வந்தே மாதரம்’ முழங்குவது வரலாற்று சிறப்புமிக்க தருணம் – பிரதமர் மோடி உரை!

80-வது சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம் – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

திருப்பரங்குன்றம் மலையில் அளவீடு பணிகளை ஏன் முடிக்கவில்லை? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி!

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கி…. – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை!

சுதந்திர தின கொண்டாட்டம் – சென்னை கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் முதலமைச்சர் விஜய்!

நாட்டின் 80-வது சுதந்திர தினம் கோலாகலம் – டெல்லி செங்கோட்டையில் 13-வது முறையாக தேசிய கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

1000 அடி தேசியக் கொடியுடன் நடந்த நிகழ்ச்சி; மாணவர்கள் வைத்த முக்கிய கோரிக்கை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies