விஜயதசமியை முன்னிட்டு கோயில்களில் வித்யாரம்பம் - அரிசியில் எழுதி கல்வியை தொடங்கிய மழலைகள்!
Aug 24, 2025, 08:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஜயதசமியை முன்னிட்டு கோயில்களில் வித்யாரம்பம் – அரிசியில் எழுதி கல்வியை தொடங்கிய மழலைகள்!

Web Desk by Web Desk
Oct 12, 2024, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விஜயதசமியை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

விஜயதசமி நாளில் குழந்தைகள் கல்வி பயில தொடங்கினால் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை. அந்த வகையில் விஜயதசமியை முன்னிட்டு சேலம் – பெங்களூரு சாலையில் உள்ள ஐயப்பா ஆசிரமத்தில் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் பெயரை அரிசியில் எழுத வைத்தும், நெல் மணிகளால் குழந்தைகளின் நாவில் எழுதினர்.  அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களிலும், பள்ளிகளிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் பாரதிபுரத்தில் அமைந்துள்ள ஶ்ரீவனமாலிஸ்வரா சரஸ்வதி கோயிலில் விஜயதசமி சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டது. அப்போது தங்கத்திலான ஆணியை கொண்டு குழந்தைகளின் நாவில் எழுதப்பட்டது.

இதையடுத்து அரிசியில் குழந்தைகளின் பெயர்களை எழுத வைத்து ஏடு தொடங்கும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

தூத்துக்குடியில் உள்ள கலைமகள் ஆலயத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ்.ஏ.வி. மேல்நிலை பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரிசியில் எழுத வைத்தனர்.

நவராத்திரி விழாவின் நிறைவு நாளான விஜயதசமியை ஒட்டி தஞ்சை மாவட்டம், கும்பகோணம் உள்ள மழலையர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. முன்னதாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நவதானியங்களில் தமிழ் எழுத்துக்களை எழுத வைத்தனர். இதில் அனைத்து மதத்தினரும் பங்கேற்று தங்கள் குழந்தைகளுடன் கல்வி தொடக்க நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான மழலையர் பள்ளியில் புதிதாக சேர்ந்த குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி நிகழ்ச்சி நடைபெற்றது. விஜயதசமியை ஒட்டி தருமபுர ஆதின மழலையர் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.மேளதாள இசையுடன் வந்த குழந்தைகளுக்கு ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நாக்கில் மயில் இறகு கொண்டு கல்வியை தொடங்கி வைத்தார். மேலும் நெல்மணிகளில் தமிழ் எழுத்துக்களை எழுத வைத்து குழந்தைகளுக்கு அவர் ஆசிகளை வழங்கினார்.

Tags: Vidyarambam programVijayadashami
ShareTweetSendShare
Previous Post

‘வேட்டையன்’ திரைப்பட ஓ.டி.டி உரிமம் – அமேசான் பிரைம் வாங்கியது!

Next Post

‘வேட்டையன்’ திரைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட இருவர் கைது!

Related News

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies