விஜயதசமியை முன்னிட்டு கோயில்களில் வித்யாரம்பம் - அரிசியில் எழுதி கல்வியை தொடங்கிய மழலைகள்!
Jan 18, 2026, 06:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஜயதசமியை முன்னிட்டு கோயில்களில் வித்யாரம்பம் – அரிசியில் எழுதி கல்வியை தொடங்கிய மழலைகள்!

Murugesan M by Murugesan M
Oct 12, 2024, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விஜயதசமியை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

விஜயதசமி நாளில் குழந்தைகள் கல்வி பயில தொடங்கினால் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை. அந்த வகையில் விஜயதசமியை முன்னிட்டு சேலம் – பெங்களூரு சாலையில் உள்ள ஐயப்பா ஆசிரமத்தில் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் பெயரை அரிசியில் எழுத வைத்தும், நெல் மணிகளால் குழந்தைகளின் நாவில் எழுதினர்.  அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களிலும், பள்ளிகளிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் பாரதிபுரத்தில் அமைந்துள்ள ஶ்ரீவனமாலிஸ்வரா சரஸ்வதி கோயிலில் விஜயதசமி சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டது. அப்போது தங்கத்திலான ஆணியை கொண்டு குழந்தைகளின் நாவில் எழுதப்பட்டது.

இதையடுத்து அரிசியில் குழந்தைகளின் பெயர்களை எழுத வைத்து ஏடு தொடங்கும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

தூத்துக்குடியில் உள்ள கலைமகள் ஆலயத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ்.ஏ.வி. மேல்நிலை பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரிசியில் எழுத வைத்தனர்.

நவராத்திரி விழாவின் நிறைவு நாளான விஜயதசமியை ஒட்டி தஞ்சை மாவட்டம், கும்பகோணம் உள்ள மழலையர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. முன்னதாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நவதானியங்களில் தமிழ் எழுத்துக்களை எழுத வைத்தனர். இதில் அனைத்து மதத்தினரும் பங்கேற்று தங்கள் குழந்தைகளுடன் கல்வி தொடக்க நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான மழலையர் பள்ளியில் புதிதாக சேர்ந்த குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி நிகழ்ச்சி நடைபெற்றது. விஜயதசமியை ஒட்டி தருமபுர ஆதின மழலையர் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.மேளதாள இசையுடன் வந்த குழந்தைகளுக்கு ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நாக்கில் மயில் இறகு கொண்டு கல்வியை தொடங்கி வைத்தார். மேலும் நெல்மணிகளில் தமிழ் எழுத்துக்களை எழுத வைத்து குழந்தைகளுக்கு அவர் ஆசிகளை வழங்கினார்.

Tags: VijayadashamiVidyarambam program
ShareTweetSendShare
Previous Post

‘வேட்டையன்’ திரைப்பட ஓ.டி.டி உரிமம் – அமேசான் பிரைம் வாங்கியது!

Next Post

‘வேட்டையன்’ திரைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட இருவர் கைது!

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies