விஜயதசமியை முன்னிட்டு கோயில்களில் வித்யாரம்பம் - அரிசியில் எழுதி கல்வியை தொடங்கிய மழலைகள்!
Sep 17, 2026, 04:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஜயதசமியை முன்னிட்டு கோயில்களில் வித்யாரம்பம் – அரிசியில் எழுதி கல்வியை தொடங்கிய மழலைகள்!

Murugesan M by Murugesan M
Oct 12, 2024, 02:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விஜயதசமியை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

விஜயதசமி நாளில் குழந்தைகள் கல்வி பயில தொடங்கினால் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை. அந்த வகையில் விஜயதசமியை முன்னிட்டு சேலம் – பெங்களூரு சாலையில் உள்ள ஐயப்பா ஆசிரமத்தில் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் பெயரை அரிசியில் எழுத வைத்தும், நெல் மணிகளால் குழந்தைகளின் நாவில் எழுதினர்.  அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களிலும், பள்ளிகளிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் பாரதிபுரத்தில் அமைந்துள்ள ஶ்ரீவனமாலிஸ்வரா சரஸ்வதி கோயிலில் விஜயதசமி சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டது. அப்போது தங்கத்திலான ஆணியை கொண்டு குழந்தைகளின் நாவில் எழுதப்பட்டது.

இதையடுத்து அரிசியில் குழந்தைகளின் பெயர்களை எழுத வைத்து ஏடு தொடங்கும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

தூத்துக்குடியில் உள்ள கலைமகள் ஆலயத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ்.ஏ.வி. மேல்நிலை பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரிசியில் எழுத வைத்தனர்.

நவராத்திரி விழாவின் நிறைவு நாளான விஜயதசமியை ஒட்டி தஞ்சை மாவட்டம், கும்பகோணம் உள்ள மழலையர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. முன்னதாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நவதானியங்களில் தமிழ் எழுத்துக்களை எழுத வைத்தனர். இதில் அனைத்து மதத்தினரும் பங்கேற்று தங்கள் குழந்தைகளுடன் கல்வி தொடக்க நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான மழலையர் பள்ளியில் புதிதாக சேர்ந்த குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி நிகழ்ச்சி நடைபெற்றது. விஜயதசமியை ஒட்டி தருமபுர ஆதின மழலையர் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.மேளதாள இசையுடன் வந்த குழந்தைகளுக்கு ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நாக்கில் மயில் இறகு கொண்டு கல்வியை தொடங்கி வைத்தார். மேலும் நெல்மணிகளில் தமிழ் எழுத்துக்களை எழுத வைத்து குழந்தைகளுக்கு அவர் ஆசிகளை வழங்கினார்.

Tags: VijayadashamiVidyarambam program
Share
Tweet
SendShare
Previous Post

‘வேட்டையன்’ திரைப்பட ஓ.டி.டி உரிமம் – அமேசான் பிரைம் வாங்கியது!

Next Post

‘வேட்டையன்’ திரைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட இருவர் கைது!

Related News

பொறியாளர் தின விழா – தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் இளம் பொறியாளர்களுக்கு விருது!

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்; காரணம் இது தான் …

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies