வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி - தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!
Nov 11, 2025, 04:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

Web Desk by Web Desk
Oct 21, 2024, 04:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

திருச்சி மாநகர் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் அப்பகுதியில் சென்ற வாகனங்கள் நீரில் தத்தளித்தபடி சென்றன. மேலும் சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களை சீரமைக்காததே மழைநீர் தேங்க காரணமென அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

தஞ்சை மாவட்டம் மானாங்கோரை, மாத்தூர், பசுபதி கோவில், அய்யம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.இதனால், சாலையோர கடை வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைந்தனர்.

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகளில் பெய்த மழையால், குறைதீர்க்கும் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள் மழையில் நனைந்து அவதியடைந்தனர்.

இதேபோல் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. மேலும் வரதராஜபுரம் பகுதியில் உள்ள புளியமரத்து ஓடையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

நாகை நகர் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் சுற்று வட்டாரப் பகுதியில் காலை முதலே கனமழை வெளுத்து வாங்கியது. தோப்புத்துறை, தாணிகோட்டகம், நெய்விளக்கு, கரியாப்பட்டினம், ஆயக்காரன்புலம், புஷ்பவனம் ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

 

Tags: weather updatetanjorelow pressurerain warningmetrological centertrichy rainchennai raintamilnadu rainheavy rainrain alert
ShareTweetSendShare
Previous Post

மெரினா அருகே போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தம்பதி கைது!

Next Post

பாபநாசம் அகஸ்தியர் அருவியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் – சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்!

Related News

சேகர் பாபுவுக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது – அண்ணாமலை விமர்சனம்!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி : திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு!

டெல்லி கார் வெடிப்பு : சிசிடிவியில் பதிவான முக்கிய தடயங்கள் என்ன?

சதுரங்க வேட்டை பாணியில் சுருட்டல் : வீடுகளை காட்டி மோசடி – சிக்கிய ஜென்டில் மேன்!

THAR கார் வைத்திருப்பவர்கள் பைத்தியக்காரர்கள் – ஹரியானா டிஜிபி கருத்தால் இணையத்தில் தீ பறக்கும் வாதம்!

கர்நாடகா : ஆர்எஸ்எஸ்-ல் இணைவதற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அக்டோபர் மாதத்தில் மட்டும் 6 மடங்கு அதிகரிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியை வரவேற்றார் பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே!

அவதூறு வழக்கில் திமுக எம்.பி. டி. ஆர். பாலு கட்டாயம் குறுக்கு விசாரணையைச் சந்தித்துதான் ஆக வேண்டும் – நீதிமன்றம்

சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் ஆஜர்!

மதுரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்!

சீண்டினால் சிதறடிக்கப்படுவீர்கள் : வாலாட்டும் யூனுஸிற்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

சேலம் அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச 12 பேரை அகதிகள் முகாமில் அடைத்த போலீசார்!

பிஎஃப்ஐ பினாமிகள் பெயரில் அறக்கட்டளைகளை தொடங்கி வெளிநாடுகளில் இருந்து நிதி வசூல் – அமலாக்கத்துறை விசாரணை!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 4 பேர் கைது!

கார் வெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் – ராஜ்நாத் சிங்

டெல்லியில் கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் உயிரிழந்த அரசுப் பேருந்து ஓட்டுநர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies