வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி - தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!
Jun 15, 2026, 02:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

Murugesan M by Murugesan M
Oct 21, 2024, 04:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

திருச்சி மாநகர் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் அப்பகுதியில் சென்ற வாகனங்கள் நீரில் தத்தளித்தபடி சென்றன. மேலும் சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களை சீரமைக்காததே மழைநீர் தேங்க காரணமென அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

தஞ்சை மாவட்டம் மானாங்கோரை, மாத்தூர், பசுபதி கோவில், அய்யம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.இதனால், சாலையோர கடை வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைந்தனர்.

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகளில் பெய்த மழையால், குறைதீர்க்கும் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள் மழையில் நனைந்து அவதியடைந்தனர்.

இதேபோல் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. மேலும் வரதராஜபுரம் பகுதியில் உள்ள புளியமரத்து ஓடையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

நாகை நகர் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் சுற்று வட்டாரப் பகுதியில் காலை முதலே கனமழை வெளுத்து வாங்கியது. தோப்புத்துறை, தாணிகோட்டகம், நெய்விளக்கு, கரியாப்பட்டினம், ஆயக்காரன்புலம், புஷ்பவனம் ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

 

Tags: weather updatetanjorelow pressurerain warningmetrological centertrichy rainchennai raintamilnadu rainheavy rainrain alert
ShareTweetSendShare
Previous Post

மெரினா அருகே போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தம்பதி கைது!

Next Post

பாபநாசம் அகஸ்தியர் அருவியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் – சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies