பழங்குடி சமூகங்கள் குறித்து முந்தைய அரசுகள் அக்கறை காட்டவில்லை - பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Nov 18, 2025, 05:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழங்குடி சமூகங்கள் குறித்து முந்தைய அரசுகள் அக்கறை காட்டவில்லை – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Nov 15, 2024, 04:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மிகவும் பின்தங்கிய பழங்குடி சமூகங்கள் குறித்து முந்தைய அரசுகள் அக்கறை காட்டவில்லை என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

பீகார் மாநிலம் ஜமுய் நகருக்கு பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கொண்டாடப்பட்ட பழங்குடியினரின் பெருமித தின நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவரை பழங்குடியின மக்கள் மேள தாளங்கள் முழங்க உற்சாகத்துடன் வரவேற்றனர். அப்போது பழங்குடியினரின் இசை வாத்தியத்தை வாங்கிய பிரதமர் மோடி தானும் இசைத்து மகிழ்ந்தார்.

இதனைத் தொடர்ந்து பிர்சா முண்டாவின் மார்பளவு திருவுருவச் சிலைக்கு, பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பிர்சா முண்டாவுக்கான சிறப்பு தபால் தலையையும், அவரது உருவப்படம் பொறித்த 150 ரூபாய் நாணயத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார். பின்னர் பீகார் மாநிலத்திற்காக சுமார் 6 ஆயிரத்து 640 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இதனையடுத்து பேசிய பிரதமர் மோடி, சகோதர, சகோதரிகளுக்கு பழங்குடியினர் பெருமை தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். கலாசாரமாக இருந்தாலும், சமூக நீதியாக இருந்தாலும் இன்றைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் தரம் வேறு எனவும் அவர் கூறினார்.

திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவராக்கும் வாய்ப்பு கிடைத்ததை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக கருதுவதாகவும், அவரே நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் எனவும் பிரதமர் மோடி கூறினார். பிரதமரின் ஜன்மன் யோஜனா திட்டத்தின் கீழ் இன்று பல பணிகள் தொடங்கப்பட்டதன் பெருமையும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையே சாரும் எனவும் அவர் தெரிவித்தார்.

மிகவும் பின்தங்கிய பழங்குடி சமூகங்கள் பற்றி முந்தைய அரசுகள் அக்கறை காட்டவில்லை எனவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். மேலும், அவர்கள் வாழ்வில் ஏற்படும் சிரமங்களைக் குறைக்கவே 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பிரதம மந்திரி ஜன்மன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டதாகவும் பெருமை தெரிவித்தார்.

Tags: Birsa Munda's 150th birth anniversaryCongressBiharprime minister modimost backward tribal communities.Jamui
ShareTweetSendShare
Previous Post

அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு தடை கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம்

Next Post

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் – தேசிய மக்கள் சக்தி கட்சி கூட்டணி அமோக வெற்றி!

Related News

டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலின் அதிர்ச்சி பின்னணி : சிக்கிய முக்கிய குற்றவாளியிடம் NIA தீவிர விசாரணை!

கட்டாய மதமாற்றம் செய்ய தனி ‘நெட்வொர்க்’ – இந்திய யாத்ரீகர்களை குறிவைக்கும் பாகிஸ்தான்!

X-CHAT என்ற புதிய MESSAGING செயலியை அறிமுகம் செய்த எலான் மஸ்க்!

டெல்லி தாக்குதல் விசாரணையில் திடீர் திருப்பம் – தாக்குதலுக்கு “சாத்தானின் தாய்” பயன்படுத்தப்பட்டதா?

மென் பொறியாளரிடம் “டிஜிட்டல் அரஸ்ட்” மோசடி : 6 மாத காலத்தில் ரூ.32 கோடி சுருட்டிய கும்பல்!

கட்சியில் இருந்து விலகிய லாலு பிரசாத் மகள் – வீதிக்கு வந்த குடும்ப பிரச்னை!

Load More

அண்மைச் செய்திகள்

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

மரண தண்டனை – ஷேக் ஹசீனா கண்டனம்!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு!

மதுரை : 10 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் புகார்!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – அமீர் ரஷீத்தை விசாரிக்க NIA-வுக்கு அனுமதி!

ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை!

ஜப்பான் : சுற்றுலா பயணிகளை கவர்ந்த மவுண்ட் ஃபுஜியின் இலையுதிர் கால அழகு!

நெல்லை : இலவச வீடு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் போராட்டம்!

தென் கொரியா : பல உருவங்களை காட்சிப்படுத்தி மக்களை வெகுவாக கவர்ந்த ட்ரோன் ஷோ!

ராமநாதபுரம் : கடல் கொந்தளிப்பு – மண் அரிப்பு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies