பழங்குடி சமூகங்கள் குறித்து முந்தைய அரசுகள் அக்கறை காட்டவில்லை - பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Sep 5, 2026, 05:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழங்குடி சமூகங்கள் குறித்து முந்தைய அரசுகள் அக்கறை காட்டவில்லை – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Nov 15, 2024, 04:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மிகவும் பின்தங்கிய பழங்குடி சமூகங்கள் குறித்து முந்தைய அரசுகள் அக்கறை காட்டவில்லை என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

பீகார் மாநிலம் ஜமுய் நகருக்கு பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கொண்டாடப்பட்ட பழங்குடியினரின் பெருமித தின நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவரை பழங்குடியின மக்கள் மேள தாளங்கள் முழங்க உற்சாகத்துடன் வரவேற்றனர். அப்போது பழங்குடியினரின் இசை வாத்தியத்தை வாங்கிய பிரதமர் மோடி தானும் இசைத்து மகிழ்ந்தார்.

இதனைத் தொடர்ந்து பிர்சா முண்டாவின் மார்பளவு திருவுருவச் சிலைக்கு, பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பிர்சா முண்டாவுக்கான சிறப்பு தபால் தலையையும், அவரது உருவப்படம் பொறித்த 150 ரூபாய் நாணயத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார். பின்னர் பீகார் மாநிலத்திற்காக சுமார் 6 ஆயிரத்து 640 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இதனையடுத்து பேசிய பிரதமர் மோடி, சகோதர, சகோதரிகளுக்கு பழங்குடியினர் பெருமை தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். கலாசாரமாக இருந்தாலும், சமூக நீதியாக இருந்தாலும் இன்றைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் தரம் வேறு எனவும் அவர் கூறினார்.

திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவராக்கும் வாய்ப்பு கிடைத்ததை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக கருதுவதாகவும், அவரே நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் எனவும் பிரதமர் மோடி கூறினார். பிரதமரின் ஜன்மன் யோஜனா திட்டத்தின் கீழ் இன்று பல பணிகள் தொடங்கப்பட்டதன் பெருமையும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையே சாரும் எனவும் அவர் தெரிவித்தார்.

மிகவும் பின்தங்கிய பழங்குடி சமூகங்கள் பற்றி முந்தைய அரசுகள் அக்கறை காட்டவில்லை எனவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். மேலும், அவர்கள் வாழ்வில் ஏற்படும் சிரமங்களைக் குறைக்கவே 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பிரதம மந்திரி ஜன்மன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டதாகவும் பெருமை தெரிவித்தார்.

Tags: most backward tribal communities.JamuiBirsa Munda's 150th birth anniversaryCongressBiharprime minister modi
Share
Tweet
SendShare
Previous Post

அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு தடை கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம்

Next Post

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் – தேசிய மக்கள் சக்தி கட்சி கூட்டணி அமோக வெற்றி!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies