பழங்குடி சமூகங்கள் குறித்து முந்தைய அரசுகள் அக்கறை காட்டவில்லை - பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Jul 20, 2026, 08:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழங்குடி சமூகங்கள் குறித்து முந்தைய அரசுகள் அக்கறை காட்டவில்லை – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Nov 15, 2024, 04:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மிகவும் பின்தங்கிய பழங்குடி சமூகங்கள் குறித்து முந்தைய அரசுகள் அக்கறை காட்டவில்லை என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

பீகார் மாநிலம் ஜமுய் நகருக்கு பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கொண்டாடப்பட்ட பழங்குடியினரின் பெருமித தின நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவரை பழங்குடியின மக்கள் மேள தாளங்கள் முழங்க உற்சாகத்துடன் வரவேற்றனர். அப்போது பழங்குடியினரின் இசை வாத்தியத்தை வாங்கிய பிரதமர் மோடி தானும் இசைத்து மகிழ்ந்தார்.

இதனைத் தொடர்ந்து பிர்சா முண்டாவின் மார்பளவு திருவுருவச் சிலைக்கு, பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பிர்சா முண்டாவுக்கான சிறப்பு தபால் தலையையும், அவரது உருவப்படம் பொறித்த 150 ரூபாய் நாணயத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார். பின்னர் பீகார் மாநிலத்திற்காக சுமார் 6 ஆயிரத்து 640 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இதனையடுத்து பேசிய பிரதமர் மோடி, சகோதர, சகோதரிகளுக்கு பழங்குடியினர் பெருமை தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். கலாசாரமாக இருந்தாலும், சமூக நீதியாக இருந்தாலும் இன்றைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் தரம் வேறு எனவும் அவர் கூறினார்.

திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவராக்கும் வாய்ப்பு கிடைத்ததை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக கருதுவதாகவும், அவரே நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் எனவும் பிரதமர் மோடி கூறினார். பிரதமரின் ஜன்மன் யோஜனா திட்டத்தின் கீழ் இன்று பல பணிகள் தொடங்கப்பட்டதன் பெருமையும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையே சாரும் எனவும் அவர் தெரிவித்தார்.

மிகவும் பின்தங்கிய பழங்குடி சமூகங்கள் பற்றி முந்தைய அரசுகள் அக்கறை காட்டவில்லை எனவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். மேலும், அவர்கள் வாழ்வில் ஏற்படும் சிரமங்களைக் குறைக்கவே 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பிரதம மந்திரி ஜன்மன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டதாகவும் பெருமை தெரிவித்தார்.

Tags: Birsa Munda's 150th birth anniversaryCongressBiharprime minister modimost backward tribal communities.Jamui
ShareTweetSendShare
Previous Post

அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு தடை கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம்

Next Post

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் – தேசிய மக்கள் சக்தி கட்சி கூட்டணி அமோக வெற்றி!

Related News

பழனி கோயில் நில மோசடி வழக்கு – அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ் வீட்டுக்கு சீல்!

வடலூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் – எழுத்தரை சஸ்பெண்ட் செய்த அமைச்சர்!

ஊழல் குறித்து முன்னாள் அமைச்சர் மூர்த்தி பேசுவது நகைச்சுவையாக உள்ளது – அமைச்சர் ராஜ்மோகன்

உலகக்கோப்பை கால்பந்து – அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ஸ்பெயின்!

ஜப்தி செய்யப்பட்ட சொத்துக்களை உரிமையாளர்களுக்கு ஏலம்விடக் கூடாது;ரிசர்வ் வங்கி

நாகலாந்து கனமழை; 8 பேர் உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

பாலஸ்தீனர்களுக்காக 3 முத்திரை திட்டங்களை அறிவித்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற அனைத்து கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் – அமைச்சர் கிரண் ரிஜிஜூ

மாணவர்கள் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர்

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துகட்சி கூட்டம் – அவையை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை!

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் – சாம்பியன் பட்டம் வென்றார் சிந்து!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசு மேல்முறையீட்டுக்கு செல்வதை ஏற்றுக்கொள்ள இயலாது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

குதிரை பேர விவகாரம் – கரூர் நிதி நிறுவனத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்!

ஸ்டாலின் வருகையில் மாற்றம் – ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்ற திமுகவினர்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கன மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

இந்தியாவிடமிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யும் ரஷ்யா : எண்ணெய் சுத்திகரிப்பு திறனில் உலகின் 3-வது பெரிய நாடாக உருவெடுத்த பாரதம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies