100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது இந்தியா வல்லரசாக இருக்கும் - மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி!
Feb 13, 2026, 12:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது இந்தியா வல்லரசாக இருக்கும் – மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி!

Murugesan M by Murugesan M
Nov 17, 2024, 02:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகின் ஐந்தாவது பெரிய நாடாக பொருளாதாரத்தில் இந்தியா வளர்ந்து வருவதாகவும், வல்லமை மிக்க நாடாக இந்தியாவை பிரதமர் மோடி வளர்த்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் எல்.முருகன்  தெரிவித்துள்ளார்.

சென்னை மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 33ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார். விழாவில், நடிகர் அர்ஜுன் மற்றும் திரைப்பட இயக்குநர் பி.வாசு ஆகியோருக்கு கவுரவ முனைவர் பட்டம், விஞ்ஞானி சீனிவாச மூர்த்திக்கு கவுரவ அறிவியல் முனைவர் பட்டத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் வழங்கினார்.

இதனை தொடர்ந்து கவுரவ முனைவர் பட்டம் பெற்ற இயக்குநர் பி. வாசு, சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று நாடு முழுவதும் பெருமையுடன் இருக்கக்கூடிய மத்திய அமைச்சர் எல்.முருகன் கையில் இருந்து விருது வாங்கியது பெருமையாக உள்ளதாக கூறினார். எம்ஜிஆர், சிவாஜி என அனைவருக்கும் ஒப்பனை செய்த தன் தந்தையால்தான், தான் இந்த இடத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பெருமை மிகுந்த எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திடம் இருந்து முனைவர் பட்டம் பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் அர்ஜுன் தெரிவித்தார். திரை உலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதாகவும், திரைத்துறை நிஜ வாழ்க்கையில் அதிக பாடங்களை தனக்கு கற்பித்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், தோல்விக்கு அஞ்ச வேண்டாம் என்றும், ஒவ்வொரு தோல்வியும் பெரிய வெற்றிக்கான முதற்படி எனவும் நடிகர் அர்ஜூன் அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், 2047இல் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும் என்கிற டாக்டர் அப்துல் கலாம் கனவை நிறைவேற்ற பாடுபடுவதாக கூறினார். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளை கடந்து நூறாவது சுதந்திர தினத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது இந்தியா வல்லரசாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இறுதியாக, டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் படித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி மத்திய அமைச்சர் எல். முருகன் கவுரவித்தார்.

Tags: mgr university convocation ceremonyActor ArjunIndiaprime minister modiMinister L. Murugan speechDr. M.G.R. university chennai
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் ஒப்பந்தம் முடிந்து செயல்படும் டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை – அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் – எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

எக்ஸ்பிரஸ் வேகத்தில் வளர்ச்சி திட்டம் – முப்பரிமாணவ மாடலில் புவனேஷ்வர் ரயில் நிலையம்

சூலூர் அருகே 6 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கே வராத குடிநீர் தொட்டி-அரசு தாகம் தீர்க்குமா? -சிறப்பு தொகுப்பு

பருப்பு வகைகளுக்கு வரி குறைப்பில்லை…இந்தியா – அமெரிக்கா டீல் சத்தமே இல்லாமல் திருத்திய வெள்ளை மாளிகை

முதல் படத்தின் சம்பளத்தில் பள்ளிக்கூடம் கட்டும் மோனலிசா!

கேரளாவிலும் திராவிட மாடல் என அண்ணாமலை கடும் விமர்சனம்

நிலக்கரி திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு சமர்ப்பிக்கவில்லை – தமிழச்சி தங்கபாண்டியனுக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பதில்

Load More

அண்மைச் செய்திகள்

ப்ரொமோஷனில் பங்கேற்காத பிஜு மேனன் மீது வழக்கு தொடர முடிவு!

மாநிலங்களவையில் கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து காரசார விவாதம்!

மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்? – திமுகவுக்கு கேள்வி எழுப்பிய மாணிக்கம் தாகூர்

அதிமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் – நயினார் நாகேந்திரன்

காங். பெண் எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி குடியரசு தலைவரிடம் ஆன்லைனில் மனு!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் மேகமலை அருவியில் குளிக்க அனுமதி!

காலி நாற்காலிகளுக்கு இடையே உரையாற்றிய திமுக பேச்சாளர்!

2000 கி.மீ. தூரம் நடந்து கங்கை நீர் சுமந்து வந்து ராமேஸ்வரத்தில் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை நிறைவு செய்த பக்தர்கள்

5 டாஸ்மாக் பார்களில் 24 மணி நேரமும் மது விற்பனை – சேலத்தில் அதிர்ச்சி!

அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த நயினார் நாகேந்திரன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies