100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது இந்தியா வல்லரசாக இருக்கும் - மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி!
Jul 6, 2025, 07:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது இந்தியா வல்லரசாக இருக்கும் – மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி!

Web Desk by Web Desk
Nov 17, 2024, 02:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகின் ஐந்தாவது பெரிய நாடாக பொருளாதாரத்தில் இந்தியா வளர்ந்து வருவதாகவும், வல்லமை மிக்க நாடாக இந்தியாவை பிரதமர் மோடி வளர்த்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் எல்.முருகன்  தெரிவித்துள்ளார்.

சென்னை மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 33ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார். விழாவில், நடிகர் அர்ஜுன் மற்றும் திரைப்பட இயக்குநர் பி.வாசு ஆகியோருக்கு கவுரவ முனைவர் பட்டம், விஞ்ஞானி சீனிவாச மூர்த்திக்கு கவுரவ அறிவியல் முனைவர் பட்டத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் வழங்கினார்.

இதனை தொடர்ந்து கவுரவ முனைவர் பட்டம் பெற்ற இயக்குநர் பி. வாசு, சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று நாடு முழுவதும் பெருமையுடன் இருக்கக்கூடிய மத்திய அமைச்சர் எல்.முருகன் கையில் இருந்து விருது வாங்கியது பெருமையாக உள்ளதாக கூறினார். எம்ஜிஆர், சிவாஜி என அனைவருக்கும் ஒப்பனை செய்த தன் தந்தையால்தான், தான் இந்த இடத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பெருமை மிகுந்த எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திடம் இருந்து முனைவர் பட்டம் பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் அர்ஜுன் தெரிவித்தார். திரை உலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதாகவும், திரைத்துறை நிஜ வாழ்க்கையில் அதிக பாடங்களை தனக்கு கற்பித்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், தோல்விக்கு அஞ்ச வேண்டாம் என்றும், ஒவ்வொரு தோல்வியும் பெரிய வெற்றிக்கான முதற்படி எனவும் நடிகர் அர்ஜூன் அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், 2047இல் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும் என்கிற டாக்டர் அப்துல் கலாம் கனவை நிறைவேற்ற பாடுபடுவதாக கூறினார். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளை கடந்து நூறாவது சுதந்திர தினத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது இந்தியா வல்லரசாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இறுதியாக, டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் படித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி மத்திய அமைச்சர் எல். முருகன் கவுரவித்தார்.

Tags: Actor ArjunIndiaprime minister modiMinister L. Murugan speechDr. M.G.R. university chennaimgr university convocation ceremony
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் ஒப்பந்தம் முடிந்து செயல்படும் டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை – அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் – எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன்!

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies