100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது இந்தியா வல்லரசாக இருக்கும் - மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி!
Jun 12, 2026, 01:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது இந்தியா வல்லரசாக இருக்கும் – மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி!

Murugesan M by Murugesan M
Nov 17, 2024, 02:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகின் ஐந்தாவது பெரிய நாடாக பொருளாதாரத்தில் இந்தியா வளர்ந்து வருவதாகவும், வல்லமை மிக்க நாடாக இந்தியாவை பிரதமர் மோடி வளர்த்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் எல்.முருகன்  தெரிவித்துள்ளார்.

சென்னை மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 33ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார். விழாவில், நடிகர் அர்ஜுன் மற்றும் திரைப்பட இயக்குநர் பி.வாசு ஆகியோருக்கு கவுரவ முனைவர் பட்டம், விஞ்ஞானி சீனிவாச மூர்த்திக்கு கவுரவ அறிவியல் முனைவர் பட்டத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் வழங்கினார்.

இதனை தொடர்ந்து கவுரவ முனைவர் பட்டம் பெற்ற இயக்குநர் பி. வாசு, சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று நாடு முழுவதும் பெருமையுடன் இருக்கக்கூடிய மத்திய அமைச்சர் எல்.முருகன் கையில் இருந்து விருது வாங்கியது பெருமையாக உள்ளதாக கூறினார். எம்ஜிஆர், சிவாஜி என அனைவருக்கும் ஒப்பனை செய்த தன் தந்தையால்தான், தான் இந்த இடத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பெருமை மிகுந்த எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திடம் இருந்து முனைவர் பட்டம் பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் அர்ஜுன் தெரிவித்தார். திரை உலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதாகவும், திரைத்துறை நிஜ வாழ்க்கையில் அதிக பாடங்களை தனக்கு கற்பித்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், தோல்விக்கு அஞ்ச வேண்டாம் என்றும், ஒவ்வொரு தோல்வியும் பெரிய வெற்றிக்கான முதற்படி எனவும் நடிகர் அர்ஜூன் அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், 2047இல் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும் என்கிற டாக்டர் அப்துல் கலாம் கனவை நிறைவேற்ற பாடுபடுவதாக கூறினார். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளை கடந்து நூறாவது சுதந்திர தினத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது இந்தியா வல்லரசாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இறுதியாக, டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் படித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி மத்திய அமைச்சர் எல். முருகன் கவுரவித்தார்.

Tags: mgr university convocation ceremonyActor ArjunIndiaprime minister modiMinister L. Murugan speechDr. M.G.R. university chennai
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் ஒப்பந்தம் முடிந்து செயல்படும் டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை – அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் – எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படாத மேட்டூர் அணை – விவசாயிகள் வேதனை!

சென்னையில் சரவணபவன் ஹோட்டல் ஊழியர்கள் போராட்டம் – 6 மாதமாக ஊதியம் தரவில்லை என குற்றச்சாட்டு!

டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் – அன்புமணி

இன்றைய தங்கம் விலை!

மத்திய நீர்வளத்துறை அமைச்சரை இன்று சந்திக்கிறார் டி.கே.சிவகுமார்!

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

மாநிலங்களவை உறுப்பினர் பதவி தேர்தல் – பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு!

சென்னை ராமாபுரத்தில் மின்தடை – பொதுமக்கள் சாலை மறியல்!

இளைஞர்களின் எண்ணிக்கையே இந்தியாவிற்கு கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு – நரேந்திர மோடி

அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஈரானுக்கு எதிராக திட்டமிடப்பட்ட தாக்குதலை நிறுத்துமாறு ட்ரம்ப் உத்தரவு!

கோலாகலமாக தொடங்கியது FIFA உலகக்கோப்பை திருவிழா – முதல் ஆட்டத்தில் மெக்சிகோ வெற்றி!

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் – நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் கோரிக்கை!

வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு; நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

12 ஆண்டுகள்-12 முக்கிய முடிவுகள் : இந்தியாவை விஸ்வ குரு பிரதமர் மோடி – சிறப்பு கட்டுரை!

புதிய கருத்துக் கணிப்பில் அதிர்ச்சி தகவல் – அமெரிக்கர்களிடம் செல்வாக்கு இழந்த ட்ரம்ப் – சிறப்பு தொகுப்பு!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – மீண்டும் சிபிஐ விசாரணை தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies