100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது இந்தியா வல்லரசாக இருக்கும் - மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி!
Sep 6, 2026, 01:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது இந்தியா வல்லரசாக இருக்கும் – மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி!

Murugesan M by Murugesan M
Nov 17, 2024, 02:51 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகின் ஐந்தாவது பெரிய நாடாக பொருளாதாரத்தில் இந்தியா வளர்ந்து வருவதாகவும், வல்லமை மிக்க நாடாக இந்தியாவை பிரதமர் மோடி வளர்த்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் எல்.முருகன்  தெரிவித்துள்ளார்.

சென்னை மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 33ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார். விழாவில், நடிகர் அர்ஜுன் மற்றும் திரைப்பட இயக்குநர் பி.வாசு ஆகியோருக்கு கவுரவ முனைவர் பட்டம், விஞ்ஞானி சீனிவாச மூர்த்திக்கு கவுரவ அறிவியல் முனைவர் பட்டத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் வழங்கினார்.

இதனை தொடர்ந்து கவுரவ முனைவர் பட்டம் பெற்ற இயக்குநர் பி. வாசு, சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று நாடு முழுவதும் பெருமையுடன் இருக்கக்கூடிய மத்திய அமைச்சர் எல்.முருகன் கையில் இருந்து விருது வாங்கியது பெருமையாக உள்ளதாக கூறினார். எம்ஜிஆர், சிவாஜி என அனைவருக்கும் ஒப்பனை செய்த தன் தந்தையால்தான், தான் இந்த இடத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பெருமை மிகுந்த எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திடம் இருந்து முனைவர் பட்டம் பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் அர்ஜுன் தெரிவித்தார். திரை உலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதாகவும், திரைத்துறை நிஜ வாழ்க்கையில் அதிக பாடங்களை தனக்கு கற்பித்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், தோல்விக்கு அஞ்ச வேண்டாம் என்றும், ஒவ்வொரு தோல்வியும் பெரிய வெற்றிக்கான முதற்படி எனவும் நடிகர் அர்ஜூன் அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், 2047இல் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும் என்கிற டாக்டர் அப்துல் கலாம் கனவை நிறைவேற்ற பாடுபடுவதாக கூறினார். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளை கடந்து நூறாவது சுதந்திர தினத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது இந்தியா வல்லரசாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இறுதியாக, டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் படித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி மத்திய அமைச்சர் எல். முருகன் கவுரவித்தார்.

Tags: mgr university convocation ceremonyActor ArjunIndiaprime minister modiMinister L. Murugan speechDr. M.G.R. university chennai
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் ஒப்பந்தம் முடிந்து செயல்படும் டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை – அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் – எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies