கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் விசாரணையை சிபிஐ மீண்டும் தொடங்கி உள்ளது.
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி தவெக பிரசார கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் காரணமாக இடைப்பட்ட காலத்தில் விசாரணை நடைபெறவில்லை.
இந்த நிலையில் சிபிஐ தனது விசாரணையை மீண்டும் தொடங்கி உள்ளது. அதன்படி சம்பவத்தன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் உட்பட 10 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பிய நிலையில், ஒருசிலர் மட்டும் கரூர் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
















