சுனாமி 20-ஆம் ஆண்டு நினைவு தினம் - தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அனுசரிப்பு!
Jan 18, 2026, 05:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுனாமி 20-ஆம் ஆண்டு நினைவு தினம் – தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அனுசரிப்பு!

Murugesan M by Murugesan M
Dec 26, 2024, 02:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுனாமி ஆழிப்பேரலையின் 20 -ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையில் சிக்கி, 610 பேர் பலியாகினர். சுனாமி தாக்கியதன் 20ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கடலூரில் உள்ள சுனாமி நினைவுத்தூணுக்கு, மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக, ஏராளமானோர் ஊர்வலமாக சென்று கடற்கரையில் அஞ்சலி செலுத்தினர். கடற்கரை மணலில் மெழுகுவர்த்தி ஏற்றி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். சுனாமி ஆழிப்பேரலையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மீனவர்கள் யாரும் இன்று மீன்பிடி கடலுக்கு செல்லவில்லை. திருப்பாதிரிப்புலியூர், மஞ்சக்குப்பம், முதுநகர், கிஞ்சம்பேட்டை மீன் மார்க்கெட்டுகள் அடைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் சுனாமி பேரலையின் இருபதாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. சுனாமியால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். மேலும், கடல் மற்றும் மீனவர்கள் பாதுகாக்க வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு வைரவன் குப்பம் கடற்கரையில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு 20 வது ஆண்டாக அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது, ஏாளமான பொது மக்கள் மற்றும் மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். மேலும், கடல் அன்னைக்கு மலர் தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர். அத்துடன், பேரிடர்காலங்களில் இருந்து தங்களை பாதுகாக்கவேண்டும் என்று பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உயிரிழந்தவர்களுக்கு  அவர்களது உறவினர்கள் திதி கொடுத்தும், கடலில் பால் ஊற்றியும் மரியாதை செய்தனர். நினைவு ஸ்தூபி மற்றும் இறந்தவர்கள் நினைவிடத்தில் பொது மக்கள் மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, மௌன ஊர்வலம் நடைபெற்றது.

இதேபோல், பூம்புகார், சந்திரபாடி , திருமுல்லைவாசல், பழையார் மற்றும் வானகிரி உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மயிலாடுதுறை எம்.பி சுதா., பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன், அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

 

 

Tags: kanyakumariCuddaloreMelamanakudiTsunami 20th anniversarylaying wreaths
ShareTweetSendShare
Previous Post

தமிழக பெண்கள் நினைத்தால் திராவிட மாடல் அரசு தூக்கி எறியப்படும் – தமிழிசை சவுந்தரராஜன்

Next Post

அண்ணா பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு அதிமுகவினர் சாலை மறியல் – ஜெயக்குமார் உள்ளிட்டோர் கைது!

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies