பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் - மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி!
Apr 5, 2026, 09:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி!

Murugesan M by Murugesan M
Dec 29, 2024, 12:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டின் இறுதி மன் கி பாத் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது இல்லத்தில் பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களோடு இணைந்து கேட்டார்.

பின்னர்  செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம்  வன்மையாக கண்டிக்கத்தக்கது.  . பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்று  வருகிறது..  திமுக அரசு குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்கக் கூடாது. முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்..

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இதற்காக பெரிய சபதத்தை எடுத்து அறுபடை வீடுகளுக்கு செல்வதாக அறிவித்திருக்கிறார்..அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்.

குற்றவாளி யாராக இருந்தாலும் அவர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். முறையான விசாரணை நடத்தி குற்றவாளியை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரே நாள் விசாரணையில், ஒருவர் தான் குற்றவாளி என இல்லாமல் முழுமையாக நீதி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட வேண்டும். சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்..

FIR வெளியானது அவமானப்படக் கூடிய விஷயம்.. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என்கிற பேச்சே இல்லை. எங்கு சென்றாலும் கஞ்சா புழக்கம் உள்ளது.  நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது கொடுத்ததே  பிரதமர் மோடி தான்.அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக நியாயம் கேட்டு திருமாவளவன் போராட்டம் நடத்தினால் நன்றாக இருக்கும்.

அந்த குற்றவாளி  பல குற்றங்கள் செய்து இருக்கிறார். அவர் திமுக நிர்வாகி என்று சொல்கிறார்கள் அது பற்றி விசாரிக்க வேண்டும். அந்த குற்றவாளி என்னென்ன பதவிகளில் இருந்துள்ளார் யாருடன் எல்லாம் புகைப்படம் எடுத்துள்ளார் என்று பாஜக மாநில தலைவர் ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். அதனை திமுகவினர் ஒப்புக்கொள்ள வேண்டும்.

மற்ற வழக்குகள் போல இல்லாமல் சிறப்பு வழக்காக விசாரிக்க வேண்டும்.  இல்லையென்றால் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்றைய மனதில் குரல் நிகழ்ச்சியில் Creative economy பற்றி பிரதமர் மிக விளக்கமாக பேசினார். சினிமா, gaming, மீடியா துறைகள் எந்த அளவுக்கு இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு, வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் துறையாக உள்ளது என பிரதமர் கூறியுள்ளார்.

மக்கள் பங்களிப்புடன் மிகப்பெரிய மாற்றத்தை சுற்றுச்சூழல் மூலமாக உருவாக்க வேண்டும் என்றும்,   மலேரியா ஒழிப்பு முன்னேற்பாடு, பொதுமக்கள் செய்யும் தலை சிறந்த பணி போன்ற பல விஷயங்களை மனதின் குரல் மூலம் பிரதமர் எடுத்துக் சொல்லியுள்ளதாகவும் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

 

Tags: thirumavalavanAnna University campusstudent sexual assaultPM ModiL MuruganannamalaiDMKAnna Universitytamilnadu governmentchennai police
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியுடன் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சந்திப்பு!

Next Post

மெல்போர்ன் டெஸ்ட் : ஆஸ்திரேலியா 333 ரன்கள் முன்னிலை!

Related News

ஊடுருவல்காரர்களை வெளியேற்ற பாஜக-வுக்கு வாக்களியுங்கள் – பிரதமர் மோடி!

மீண்டும் எடப்பாடியார் ஆட்சி அமைய வேண்டும்! – முன்னாள் அமைச்சர் தங்கமணி

சிறுபான்மை மக்களுக்கு எதிரானவர் காங்கிரஸ் வேட்பாளர் – பாஜக வேட்பாளர் விஜய தரணி குற்றச்சாட்டு!

சட்டமன்ற தேர்தல்: தமிழகத்திற்கு படையெடுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள்!

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டது- மத்திய அமைச்சர் எல்.முருகன்!

நெருக்கடி நிலையிலும் பெட்ரோல் வினியோகம் – மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

தென்மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகள் குறைக்கப்படாது – பிரதமர் மோடி உறுதி!

இனியும் மொழியை வைத்து திமுக அரசியல் செய்ய முடியாது – தமிழிசை உறுதி!

அரசியல் தோல்விகளை மறைக்க இந்தி திணிப்பு என நாடகம் ஆடுவதா? – தர்மேந்திர பிரதான் கேள்வி!

மக்களுடன் தரையில் அமர்ந்து வாக்கு சேகரித்த கன்னியாகுமரி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம்!

அதிமுக அழுத்தம் காரணமாக மகளிர் உரிமைத்தொகையை திமுக கொடுத்தது – இபிஎஸ்

அரசு கஜானாவை ஏடிஎம் இயந்திரம் போல் பயன்படுத்தும் ஸ்டாலின் குடும்பம் – பியூஷ் கோயல்

 புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் – பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு!

மீனவர்களை மீட்டதைக்கூட கொச்சைப்படுத்தி அரசியலாக்குகின்றனர் – நயினார் நாகேந்திரன்

ஈரானில் சிக்கி தவித்த 327 மீனவர்கள் சென்னை வந்தனர் – பாஜக தலைவர்கள் வரவேற்பு!

அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் – பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies