அச்சுறுத்தும் பாக்டீரியா : எச்சரிக்கும் மருத்துவர்கள் - சிறப்பு தொகுப்பு!
Jan 14, 2026, 06:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அச்சுறுத்தும் பாக்டீரியா : எச்சரிக்கும் மருத்துவர்கள் – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Jan 4, 2025, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் தற்போது ஸ்கரப் டைபஸ் எனும் பாக்டீரியா தொற்று பரவி வரும் நிலையில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் ஸ்கரப் நோயின் அறிகுறிகள் குறித்தும், அதிலிருந்து தற்காத்து கொள்ள வேண்டிய வழிகள் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் தற்போது பார்க்கலாம்.

ஓரியன்டியா சுட்சுகாமுஷி என்ற ஒட்டுண்ணியால் பரவும் ஸ்கரப் டைபஸ் எனும் வைரஸ் காய்ச்சல்  இந்தியாவில் முதன்முறையாக உத்திரப்பிரதேசத்தில் தான் கண்டறியப்பட்டது.

2021 ஆம் ஆண்டு பரவிய மர்மக் காய்ச்சல் தொடர்பான சோதனையில் ஸ்கரப் டைபஸ் காய்ச்சல் என உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், உடல்வலி, தலைவலி போன்றவை ஏற்படும் எனவும், உடலின் பல்வேறு இடங்களில் கருப்புக் கொப்பளங்கள் போல உருவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வேலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு. ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் சிலர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்கரப் டைபஸ் என்பது பூச்சிக்கடியால் ஏற்படும் நோய் என்பதால் விவசாயத்தில் ஈடுபடுவோர் அதிகமாக இந்நோய்க்கு பாதிக்கப்படக் கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளது.

எனவே விவசாயம், புதர் நிறைந்த பகுதிகளில் இருப்பவர்கள், காடுகளில் வேலை செய்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.  ஒருவருக்கு தொடர்ந்து 5 நாட்களுக்கு மேலாக காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும்,  ஸ்கரப் டைபஸ் நோய்த்தொற்றுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய் தொற்று உறுதி செய்யப்பட்டால், டாக்ஸிசிலின், அசித்ரோமைசின், ரிஃபாம்பிசின் உள்ளிட்ட மருந்துகளை நோயாளிகளின் உடல்நிலை மற்றும் வயதுக்கு ஏற்ற வகையில் வழங்க வேண்டும் எனவும்,  48 மணி முதல் 72 மணிக்குள்ளாக உடல்நிலை சீரடையவில்லை என்றால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags: Scrub TyphusPublic Health Departmentsymptoms of scab diseaseviral feverOrientia tsutsugamushiTamil NaduIndiauttar pradesh
ShareTweetSendShare
Previous Post

திமுக மீது தொடரும் அதிருப்தி : கூட்டணியை விட்டு வெளியேறும் கட்சிகள்? – சிறப்பு கட்டுரை!

Next Post

அமைச்சர் துரைமுருகன் இல்லத்தின் கதவை கடப்பாரையால் உடைத்து அமலாக்கத்துறை சோதனை : 2-வது நாளாக தொடரும் ஆய்வு!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies