மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய பிரதமர் : அமித்ஷா புகழாரம்!
Oct 15, 2025, 06:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய பிரதமர் : அமித்ஷா புகழாரம்!

Web Desk by Web Desk
Jan 16, 2025, 12:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடியின் முயற்சிகள் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தியது மட்டுமல்லாமல், வடக்கு குஜராத்தில் உள்ள மக்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன  என்று மத்திய உள்துறை அமித்ஷா தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் மான்சாவில் சுமார் ரூ. 241 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர்  பூபேந்திர படேல் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய  அமித்ஷா, 

குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்தபோது, மாநிலத்தின் தண்ணீர் பற்றாக்குறை சவால்களை எதிர்கொள்ள மேற்கொண்ட முயற்சிகளை எடுத்துரைத்தார். குஜராத்தில் நிலத்தடி நீர் ஒரு காலத்தில் 1,200 அடி ஆழத்தில் மட்டுமே கிடைத்தது, ஆனால், நர்மதா திட்டத்தை நிறைவு செய்வதற்கு முன்னுரிமை அளித்ததன் மூலம் கட்ச் மற்றும் சவுராஷ்டிரா உட்பட குஜராத் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது.

முதலமைச்சராக பணியாற்றிய நரேந்திர மோடியின் முயற்சிகளால் இது சாத்தியமானது என்று குறிப்பிட்டார். நர்மதா திட்டத்தைஅனைத்து தடைகளையும் தாண்டி வெற்றிகரமாக அமல்படுத்தியதில் மோடி வெற்றி பெற்றதாக தெரிவித்தார்.

நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, நர்மதா நதியின் நீர் மாநிலத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் கிடைத்தது என்று கூறினார். பரூச்சிலிருந்து காவ்டா வரை கால்வாய் அமைப்பதை அவர் உறுதி செய்தார்.

குஜராத் முழுவதும் 9,000-க்கும் மேற்பட்ட குளங்களை நிரப்புவது, மழைநீரைச் சேமிப்பது, சவுராஷ்டிராவில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது போன்ற முன்முயற்சிகளை அவர் பாராட்டினார்.

நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த காலத்தில், கடனாவிலிருந்து தீசாவுக்கு நீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக முயற்சிகளை முன்னெடுத்தார் என்று குறிப்பிட்டார்.

நர்மதா நதி நீரை சுமார் 9,000 குளங்களில் நிரப்புவதற்கு மோடி எவ்வாறு உதவினார் என்பதையும், ஆண்டு முழுவதும் அதன் நீர் ஓட்டத்தை பராமரிக்க சபர்மதி ஆற்றின் குறுக்கே 14 அணைகளைக் கட்டியதையும் அவர் எடுத்துரைத்தார்.

பிரதமர் மோடியின் முயற்சிகள் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தியது மட்டுமல்லாமல், வடக்கு குஜராத்தில் உள்ள மக்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன என்று கூறினார்.

Tags: gujaratprime minister modiamithshaground water level
ShareTweetSendShare
Previous Post

பொங்கல் பண்டிகை – திருமயம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம்!

Next Post

பிரச்சாரத்தில் AI ஐ பொறுப்பாகப் பயன்படுத்த வேண்டும் : கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்!

Related News

தீபாவளி பண்டிகை – டெல்லியில் பசுமை பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை தொடக்கம்!

“இட்லி கடை” திரைப்படம் நடிகர் தனுஷை ஓர் இயக்குநராக உயர்த்தியுள்ளது – அண்ணாமலை பாராட்டு!

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ₹15,000 கோடி வருகிறதா, இல்லையா? – நயினார் நாகேந்திரன்

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

மாங்காடு அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பியோட்டம்!

கர்நாடகா: டிராக்டர் மீது அதிவேக ஸ்கூட்டர் மோதி விபத்து – வீடியோ வைரல்!

வேலூர் : சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின!

15% ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்!

ராணிப்பேட்டை : தொடர்ந்து பெய்யும் கனமழை – முழு கொள்ளளவை எட்டிய 144 ஏரிகள்!

4-வது விமானம் தாங்கி கப்பலை கட்டி வரும் சீனா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies