அரசியல் தலையீடு, டோக்கன் குளறுபடி : அலங்கோலமாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - சிறப்பு தொகுப்பு!
Jul 24, 2025, 02:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசியல் தலையீடு, டோக்கன் குளறுபடி : அலங்கோலமாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Jan 16, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசியல் தலையீடுகளாலும், டோக்கன் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிகளாலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டு அலங்கோலமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. உலக அளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் தனித்தன்மையை பாதுகாக்க வேண்டும் என காளையர்களும், காளைகளின் உரிமையாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றாலும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி மட்டுமே உலக அளவில் புகழ்பெற்றதாக விளங்குகிறது.

தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி, டோக்கன் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிகளால் களையிழந்து காணப்பட்டது. முன்னுரிமை அடிப்படையில் அனுமதிக்க வேண்டிய உள்ளூர் காளைகள் புறக்கணிக்கப்பட்டிருப்பது காளை உரிமையாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளியூர்களில் இருந்து வந்திருக்கும் அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்களின் காளைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் டோக்கன் வழங்கப்பட்டதால் உள்ளூர் காளைகளுக்கு இறுதி நேரத்தில் களமிறங்குவதற்கான வாய்ப்பு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது.

வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு தங்களின் காளைகளை தயார்படுத்தி மிகுந்த எதிர்பார்ப்போடு வரும் காளைகளின் உரிமையாளர்களுக்கு ஜல்லிக்கட்டு கமிட்டியின் கட்டுப்பாடு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் பாரபட்சம் பார்க்காமல் அனைத்து காளைகளுக்கும் களம் காண அனுமதி வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஒரு சில ஆண்டுகள் மட்டுமே ஆன்லைனில் டோக்கன் பெறும் நடைமுறையை கொண்டு வந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதாக காளை உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வெளியூர்களை சேர்ந்த காளைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பதாகவும், உள்ளூர் காளைகளுக்கு அனுமதி வழங்காமல் புறக்கணிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டு போட்டியை தொடர் போராட்டத்தின் மூலம் மீட்டெடுத்தவர்களுக்கு அதனை பார்க்க கூட அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநில மக்களும் விரும்பி வந்து பார்க்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை முறையாக செய்யாத காரணத்தினால் அதனை காணவந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

வீரத்தின் அடையாளமாக திகழ்ந்த ஜல்லிக்கட்டு போட்டி கடந்த சில ஆண்டுகளாக அரசியல் தலையீடுகளால் அதன் தனித்தன்மையை இழந்து வருவதாக காளைகளின் உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அகில உலகமே போற்றி பாராட்டும் வகையில் நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி, விழாக் கமிட்டியின் அலட்சியமான ஏற்பாடுகளால் நடப்பாண்டில் அலங்கோலமாக நிறைவடைந்திருக்கிறது. அடுத்த ஆண்டாவது அரசியல் தலையீடுகள் இன்றி ஜல்லிகட்டு போட்டியை நடத்த முன்வரவேண்டும் என மதுரை மாநகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: minister moorthyudayanithi stalinAlanganallurbullfightersJallikattu bullsMaduraiThachankurichiTamil Nadualannallure jallikattujallikattutoken issuePongal festivalminister ptr thiyagarajanAvaniyapuramPalamedu
ShareTweetSendShare
Previous Post

சயீப் அலிகானுக்கு கத்திக்குத்து : பின்னணி என்ன? – முழு விவரம்!

Next Post

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டி – சீறிப்பாய்ந்த காளைகள்!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies