அரசியல் தலையீடு, டோக்கன் குளறுபடி : அலங்கோலமாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - சிறப்பு தொகுப்பு!
Jul 19, 2026, 09:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசியல் தலையீடு, டோக்கன் குளறுபடி : அலங்கோலமாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – சிறப்பு தொகுப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 16, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசியல் தலையீடுகளாலும், டோக்கன் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிகளாலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டு அலங்கோலமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. உலக அளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் தனித்தன்மையை பாதுகாக்க வேண்டும் என காளையர்களும், காளைகளின் உரிமையாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றாலும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி மட்டுமே உலக அளவில் புகழ்பெற்றதாக விளங்குகிறது.

தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி, டோக்கன் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிகளால் களையிழந்து காணப்பட்டது. முன்னுரிமை அடிப்படையில் அனுமதிக்க வேண்டிய உள்ளூர் காளைகள் புறக்கணிக்கப்பட்டிருப்பது காளை உரிமையாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளியூர்களில் இருந்து வந்திருக்கும் அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்களின் காளைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் டோக்கன் வழங்கப்பட்டதால் உள்ளூர் காளைகளுக்கு இறுதி நேரத்தில் களமிறங்குவதற்கான வாய்ப்பு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது.

வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு தங்களின் காளைகளை தயார்படுத்தி மிகுந்த எதிர்பார்ப்போடு வரும் காளைகளின் உரிமையாளர்களுக்கு ஜல்லிக்கட்டு கமிட்டியின் கட்டுப்பாடு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் பாரபட்சம் பார்க்காமல் அனைத்து காளைகளுக்கும் களம் காண அனுமதி வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஒரு சில ஆண்டுகள் மட்டுமே ஆன்லைனில் டோக்கன் பெறும் நடைமுறையை கொண்டு வந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதாக காளை உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வெளியூர்களை சேர்ந்த காளைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பதாகவும், உள்ளூர் காளைகளுக்கு அனுமதி வழங்காமல் புறக்கணிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டு போட்டியை தொடர் போராட்டத்தின் மூலம் மீட்டெடுத்தவர்களுக்கு அதனை பார்க்க கூட அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநில மக்களும் விரும்பி வந்து பார்க்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை முறையாக செய்யாத காரணத்தினால் அதனை காணவந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

வீரத்தின் அடையாளமாக திகழ்ந்த ஜல்லிக்கட்டு போட்டி கடந்த சில ஆண்டுகளாக அரசியல் தலையீடுகளால் அதன் தனித்தன்மையை இழந்து வருவதாக காளைகளின் உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அகில உலகமே போற்றி பாராட்டும் வகையில் நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி, விழாக் கமிட்டியின் அலட்சியமான ஏற்பாடுகளால் நடப்பாண்டில் அலங்கோலமாக நிறைவடைந்திருக்கிறது. அடுத்த ஆண்டாவது அரசியல் தலையீடுகள் இன்றி ஜல்லிகட்டு போட்டியை நடத்த முன்வரவேண்டும் என மதுரை மாநகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: minister moorthyudayanithi stalinAlanganallurbullfightersJallikattu bullsMaduraiThachankurichiTamil Nadualannallure jallikattujallikattutoken issuePongal festivalminister ptr thiyagarajanAvaniyapuramPalamedu
ShareTweetSendShare
Previous Post

சயீப் அலிகானுக்கு கத்திக்குத்து : பின்னணி என்ன? – முழு விவரம்!

Next Post

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டி – சீறிப்பாய்ந்த காளைகள்!

Related News

குன்றத்தூர் அருகே ரவுடி சுட்டுப் பிடிப்பு – காவலரை தாக்கிவிட்டு தப்பியோடியதால் நடவடிக்கை!

அர்ஜெண்டினா அணியின் பிதாமகன் : யார் இந்த மெஸ்ஸி ? – சிறப்பு கட்டுரை!

தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய விவகாரம் – மேலும் இருவர் கைது!

யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளுக்கு தனியார் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தக் கூடாது – வனத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

விருதுநகர் மாவட்ட வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் – நிர்மலா சீதாராமன்

கரூர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த இபிஎஸ்; இடைத் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை

Load More

அண்மைச் செய்திகள்

2024-ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு; 3 விருதுகளை வென்ற அமரன்

புவிசார் அரசியலில் திருப்பம் : தனித்து விடப்பட்ட அமெரிக்கா : இந்தியா தலைமையில் உருவாகும் புதிய வலுவான கூட்டணிகள் – சிறப்பு தொகுப்பு!

பலுாச் விடுதலைப்படை தற்கொலைப்படை தாக்குதல் – 45 பாகிஸ்தான் ராணுவத்தினர் பலி – சிறப்பு தொகுப்பு!

நீட் தேர்வு முடிவு – முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள் இடம் பிடித்தனர்!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம் 1 – பிரதமர் மோடி வாழ்த்து!

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது விக்ரம்-1 இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

வடகிழக்கு எல்லையில் எதிரிகளுக்கு செக் : மிசோராமில் புதிய ராணுவ தளத்தை அமைக்கும் இந்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

விக்ரம் – 1 ராக்கெட் பயணம் – ஏரோஸ்பேஸ் குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies