ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
Aug 10, 2025, 04:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Jan 29, 2025, 01:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் செல்வாக்கான கட்சிகள் கொட்டகை அமைத்து வக்காளர்களை தங்க வைப்பதை தடுக்கக்கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அந்த தொகுதியில் செல்வாக்கான கட்சிகள் கொட்டை அமைத்து வாக்காளர்களை தங்கவைப்பதை தடுக்கக்கோரி, மறுமலர்ச்சி மக்கள் கட்சியைச் சேர்ந்த கே.பி.எம்.ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

தனது மனுவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலின்போது ஆளும் கட்சி கூட்டணி வேட்பாளரை வெற்றிபெறச் செய்யவும், பிற கட்சி வேட்பாளர்கள் வாக்காளர்களை அணுகுவதை தடுக்கவும், வார்டு வாரியாக கொட்டகைகள் அமைத்து அதில் வாக்காளர்கள் தங்க வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கொட்டகைகளில் தங்கவைக்கப்பட்ட வாக்காளர்களுக்கு உணவு, வாக்குக்கு பணம் உள்ளிட்டவை வழங்கப்பட்டதாகவும், அதன் காரணமாகவே, தான் தேர்தலில் தோல்வியடைந்ததாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கொட்டகை அமைக்கும் நடைமுறை தொடருமோ என்ற அச்சத்தால் அவற்றை தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளதாகவும்,

அந்த மனுவில் தொகுதிக்கு வரும் வெளியாட்களுக்கும், வெளியூர் செல்லும் தொகுதி வாக்காளர்களுக்கும் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும், தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க ஆன்லைன் வசதியை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகவும் கே.பி.எம்.ராஜா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஜனவரி 8-ம் தேதி அளித்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் தரப்பில் இதுவரை பதிலளிக்கவில்லை என்பதால், தனது மனுவை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடவேண்டும் எனவும் மனுவில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, வாக்காளர்கள் ஏன் கொட்டகைக்கு செல்ல வேண்டும் என கேள்வி எழுப்பியதுடன், தேர்தல்களில் யார்தான் சலுகைகள் வழங்கவில்லை என்ற கருத்தையும் முன்வைத்தனர்.

மேலும், இந்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Tags: Madras High Court ordersElection commissionErode East constituency by electionஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்Madras High Court orders the Election Commission
ShareTweetSendShare
Previous Post

மைனர் பெண் கருக்கலைப்பு : சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Next Post

சென்னை விமான நிலையத்தில் ரூ. 23 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல்!

Related News

உசிலம்பட்டி அருகே பாஜக பிரமுகரின் காருக்கு தீ வைத்த மர்ம நபர் – சிசிடிவி காட்சி வெளியானது!

துணை முதல்வர் திறந்து வைத்த கரூர் புதிய பேருந்து நிலையம் – குளம் போல் நீர் தேங்கியதால் பயணிகள் அவதி!

சேலத்தில் அரசுப்பேருந்து மோதியதில் பெண் படுகாயம்!

அலங்காநல்லூர் அருகே செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி!

சென்னையில் நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக மாநில நிர்வாகிகளுக்கான பயிலரங்கம் – எல்.முருகன், அண்ணாமலை பங்கேற்பு!

வடமதுரை சௌந்தரராஜ பெருமாள் கோயில் ஆடித் தேரோட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை பாகிஸ்தானை மண்டியிட செய்தது – பிரதமர் மோடி

நடிகர் தனுசுடன் காதலா? – பிரபல நடிகை மறுப்பு!

ஜம்மு-காஷ்மீரில் 10-வது நாளாக தொடரும் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை!

உலகின் பெரிய சக்தியாக இந்தியா மாறுவதை யாராலும் தடுக்க முடியாது – ராஜ்நாத்சிங்

கடந்த 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம் – தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

எந்த வாக்காளரும் முன்னறிவிப்பின்றி நீக்கப்பட மாட்டார்கள் – உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

பெங்களூருவில் வந்தே பாரத் மற்றும் மெட்ரோ ரயில் சேவை – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

இந்திய விமானங்களுக்கு வான்வெளி மூடல் – பாகிஸ்தானுக்கு இரு மாதங்களில் 1,240 கோடி இழப்பு!

பண்டிகை காலங்களில் ஒரே ரயிலில் பயணம் செய்து திரும்பும் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் 20 % தள்ளுபடி – ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட பாஜகவினர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies