E- PASS முறையால் வேதனை - வாழ்வாதாரம் பறிப்பு - கண்ணீரில் வணிகர்கள்!
Jul 1, 2025, 08:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

E- PASS முறையால் வேதனை – வாழ்வாதாரம் பறிப்பு – கண்ணீரில் வணிகர்கள்!

Web Desk by Web Desk
Mar 24, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டத்தில் இ பாஸ் நடைமுறைப்படுத்தும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்து மீண்டும் பழைய நடைமுறையே தொடர்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வணிகர்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.  நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இ பாஸ் நடைமுறை குறித்தும், அதனால் வணிகர்கள் சந்திக்கும் பாதிப்பு குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இயற்கை எழில் மிகுந்த நீலகிரி மாவட்டம் தமிழகத்தின் தவிர்க்கச் சுற்றுலாத் தளமாகவும் பொதுமக்கள் விரும்பும் தளமாகவும் விளங்கி வருகிறது. கோடைக் காலம் வந்து விட்டால் தமிழகம் மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் ஊட்டியை நோக்கிப் படையெடுத்து வருவது வழக்கமாக இருக்கிறது.

கோடை வெயிலைச் சமாளிக்க நீலகிரிக்கு ஒரே நேரத்தில் படையெடுக்கும் பொதுமக்களால் கடும் போக்குவரத்து நெரிசலோடு, நீலகிரியின் பசுமையான சுற்றுச்சூழலும் பாதிப்படைவதாகப் புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இ – பாஸ் நடைமுறைக்கு உத்தரவிட்டதோடு, வார நாட்களில் நாள்தோறும் ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் சுற்றுலா வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியது.

நீலகிரி மாவட்டத்தில் பெரிய அளவிலான தொழிற்சாலைகளோ, ஐடி நிறுவனங்களோ இல்லாத நிலையில் சுற்றுலாத்துறையை மட்டுமே நம்பியிருக்கும் தங்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக வணிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்

சுற்றுலா வாகனங்களுக்கு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளால் தங்களின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் என  சுற்றுலாத்துறையை மட்டுமே நம்பியிருக்கும் வணிகர்கள், சாலையோர வியாபாரிகள், காட்டேஜ் உரிமையாளர்கள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் கூறுகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலை மற்றும் மலைத் தோட்ட காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வரும் நிலையில், சுற்றுலாப்பயணிகளின் வருகை குறையும் பட்சத்தில் மேலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகச் சாலையோர வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சாலையோர வியாபாரிகள், வணிகர்கள், காட்டேஜ் உரிமையாளர்கள் எனச் சுற்றுலாத் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும்  தங்களின்  வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்து இ பாஸ் நடைமுறையை ரத்து செய்து மீண்டும் பழைய நடைமுறையே தொடர்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு நீலகிரி மாவட்டத்தின் ஒட்டுமொத்த வணிகர் சங்கமும்  கோரிக்கை விடுத்துள்ளது.

Tags: Nilgiris E-PASS system causes suffering - livelihoods are being taken away - traders in tears!ootyநீலகிரி
ShareTweetSendShare
Previous Post

திமுக அமைச்சர்கள் மீது பாஜக சார்பில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் : ஹெச்.ராஜா

Next Post

தமிழகத்தின் அத்திப்பட்டி வெள்ளை கவி கிராமம் : அடிப்படை வசதிகளுக்கு தவமாய் தவமிருக்கும் மக்கள்!

Related News

இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

விசாரணை என்ற பெயரில் காவலாளி அஜித்குமார் மீது போலீசார் சரமாரி தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

அஜித்குமார் அடித்து கொலை : உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கிறது – வழக்கறிஞர் மாரீஸ்குமார்

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

எதிரிகளின் பதுங்கு குழிகளை தாக்கி அழிக்கும் பங்கர் பஸ்டர் ரக ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா!

பொன்னேரி : வரதட்சணை கொடுமை – திருமணமான 4வது நாளிலேயே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

அஜித் படுகொலை : காவல்துறையினர் மீது பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? : அண்ணாமலை கேள்வி!

இங்கிலாந்தில் வாட்டி வதைக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதி!

உத்தரபிரதேசம் : ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் வழிபாடு!

டி20 பேட்டிங் தரவரிசை – ஸ்மிருதி மந்தனா 3 -வது இடத்திற்கு முன்னேற்றம்!

ஹிமாச்சல பிரதேசம் : கனமழையால் பியாஸ் நதியில் வெள்ளப்பெருக்கு!

இந்தியா, இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies