ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கதுவா மாவட்டம் ஜாக்ஹொல் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில், 7 போலீசார் படுகாயமடைந்தனர்.
போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் பயங்கரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த மோதலின்போது போலீசார் 3 பேர் வீரமரணமடைந்தனர். என்கவுண்ட்டர் நடைபெற்ற பகுதியில் பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.‘