உதகையில் கோடை சீசனை குறிவைத்து கொள்ளை லாபம் - சிறப்பு தொகுப்பு!
Aug 24, 2025, 09:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உதகையில் கோடை சீசனை குறிவைத்து கொள்ளை லாபம் – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Apr 2, 2025, 06:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உதகையில் கோடை சீசன் தொடங்கியிருக்கும் நிலையில், சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகளின் கட்டணமும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வரும் உதகையில் முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டிருக்கும் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இயற்கை எழில் நிறைந்திருக்கும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கமாக இருக்கிறது. கோடைக் காலத்திலும் குளிர்ச்சியான சூழலை அனுபவிக்கத் தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் நீலகிரியை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் சுற்றுப்பயணிகளின் வருகையைப் பயன்படுத்தி அங்குள்ள தங்கும் விடுதிகள், ஹோட்டல் அறைகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியோடு முதல் சீசன், இரண்டாம் சீசன், மூன்றாம் சீசன் என மூன்று வகையான கட்டண உயர்வு நடைமுறையில் இருக்கும் நிலையில், தற்போது அந்த நடைமுறைக்கு எதிராக உதகையில் உள்ள பெரும்பாலான காட்டேஜ்கள் வாடகை கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்தியிருப்பது சுற்றுலாப்பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த மாதம் 600 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை வசூலிக்கப்பட்ட தங்கும் விடுதிகளுக்கான கட்டணம்  எந்தவித முன்னறிவிப்புமின்றி தற்போது பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஏற்கனவே உதகையில் அமலில் இருக்கும் இ பாஸ் நடைமுறையால் சிறு, குறு வியாபாரிகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில், தற்போது உயர்த்தப்பட்டிருக்கும் விடுதிகள் கட்டணத்தால் சுற்றுலாப்பயணிகள் எந்த வித பொருட்களையும் வாங்காமல் சென்றுவிடுவதும் அவர்களுக்குக் கூடுதல் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள லாட்ஜ்கள், ஹோட்டல்கள் மற்றும் காட்டேஜ்களில் ஆய்வு மேற்கொண்டு அங்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை முறைப்படுத்தினால் மட்டுமே உதகைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை உயர்வதோடு, சுற்றுலாத் தொழிலையே நம்பியிருக்கும் வணிகர்களின் வாழ்வாதாரமும் சிறக்கும்.

Tags: கோடை சீசன்உதகையில் கோடை சீசன்ootyUthakai: Looting profits targeting the summer season!
ShareTweetSendShare
Previous Post

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Next Post

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் – பாஜக எம்பிக்களுக்கு கொறடா உத்தரவு!

Related News

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ரணில் விக்ரமசிங்கே கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை – சசிதரூர் கண்டனம்!

ராகுல் காந்தி காலிஸ்தான்களுடன் இணைந்து செயல்படுகிறார் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies