தள்ளாத வயதிலும் தளராத உழைப்பு : முன்மாதிரியாகத் திகழும் 90 வயது தம்பதி!
Aug 2, 2025, 05:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தள்ளாத வயதிலும் தளராத உழைப்பு : முன்மாதிரியாகத் திகழும் 90 வயது தம்பதி!

Web Desk by Web Desk
Apr 7, 2025, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

90 வயது நிரம்பிய நிலையிலும் தன்னம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு உழைத்துக் கொண்டிருக்கும் வரதராஜுலு – ஆதிலட்சுமி கடின உழைப்பு மற்றும் விடா முயற்சிக்கு அடையாளமாகத் திகழ்கின்றனர். சேலம் லீ பஜாரில் கடை நடத்திவரும் தம்பதி குறித்தும் அவர் கடையில் விற்பனை செய்யப்படும் பஜ்ஜி, போண்டா குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சேலம் லீ பஜார் பகுதியைச் சேர்ந்த 90 வயது நிரம்பிய தம்பதியர் தான் இந்த வரதராஜுலுவும் ஆதிலட்சுமியும். 50 ஆண்டுகளுக்கு முன்பு இதே லீ பஜார் பகுதியில் வடை, பஜ்ஜி, போண்டா கடையைத் தொடங்கிய போது இருந்த ஆர்வமும் உழைப்பும் தற்போது தொடர்கிறது.

சேலம் மாவட்டத்தில் வர்த்தக மையமான லீ பஜார், செவ்வாய்ப்பேட்டை, சத்திரம் பகுதிகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான மூட்டை தூக்கும் தொழிலாளர்கள், லாரி ஓட்டுநர்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் தான் இந்த தம்பதி வைத்திருக்கும் கடையின் பிரதான வாடிக்கையாளர்கள்.

தரமான மாவு மற்றும் எண்ணெய்யின் மூலம் தயாரித்து விற்பனை செய்யப்படும் இந்த வடை, போண்டாவுக்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு. விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்த போதிலும், அதன் தரத்தையோ, அளவையோ சிறிதளவும் குறைக்காததே பொதுமக்கள் இந்த தம்பதியினரின் கடையைத் தேடி வந்து வாங்கிச் செல்லும் சூழலையும் உருவாக்கியது. 25 பைசாவில் தொடங்கிய வடை, போண்டா, பஜ்ஜி தற்போது ஒரு ரூபாயாக உயர்ந்திருந்தாலும் அதற்கான வரவேற்பு தற்போது வரை குறையவில்லை.

வரதராஜுலு – ஆதிலட்சுமி தம்பதியினரின் இரு மகன்களும் அவரவர் புதிய தொழிலைத் தொடங்கி அதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இருப்பினும் மகன்களை நம்பி இருக்கக் கூடாது என்பதற்காக 90 வயது கடந்த நிலையிலும் அயராமல் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்முகத்துடன் வரவேற்பதையும், தன்மையுடன் பேசுவதையுமே அடையாளமாகக் கொண்டிருக்கும் இந்த தம்பதியினரால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 90 வயது நிரம்பிய நிலையிலும் சுயமாக உழைத்து வாழும் இந்த வரதராஜுலு – ஆதிலட்சுமி தம்பதியினர் தன்னம்பிக்கை உணர்வுக்கும் விடா முயற்சிக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்து வருகின்றனர்.

Tags: சேலம்Unwavering hard work despite advancing age: A 90-year-old couple who set an example!முன்மாதிரியாகத் திகழும் 90 வயது தம்பதி
ShareTweetSendShare
Previous Post

முதல் செங்குத்து தூக்குப் பாலம் : நிறைவேறுகிறது கோடான கோடி மக்களின் கனவு!

Next Post

பேரிடர் ராஜதந்திரம் : புவி சார் அரசியலில் – இந்தியா அபார ஆட்டம்!

Related News

மிரட்சியில் இந்தியாவின் எதிரிகள் : கடற்படைக்கு வலுசேர்க்கும் Project-18 போர் கப்பல்!

பலூச் விடுதலை ராணுவம் எச்சரிக்கை : ட்ரம்பை தவறாக வழிநடத்தும் அசிம் முனீர்!

இந்தியாவுக்கு வந்த GE404 இன்ஜின் : தேஜஸ் MK1A-க்கான கூடுதல் திறன் பெற்ற தேஜஸ்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 1 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பிரமிடுகளை விட பழமையானதா? : 6000 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு!

ரஷ்யா, ஜப்பானை சுனாமி தாக்கும் : பாபா வாங்கா அன்று கணித்தது – இன்று பலித்தது!

Load More

அண்மைச் செய்திகள்

சூப்பர் ஹீரோவாக மாறிய இந்திய தொழிலாளர்கள் : சிங்கப்பூர் அதிபர் பாராட்டு – ரூ.47 லட்சம் பரிசு அறிவிப்பு!

அரசியல் கொள்ளைக்கு கோயிலும் தப்பவில்லை : அண்ணாமலை

அதிகாரிகளின் மெகா மோசடி : உணவகத்திற்கு சாதகமாக – மாற்றப்பட்ட பாலத்தின் வரைபடம்!

காவல் அதிகாரிக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் கைது செய்யப்பட்ட ரவுடிகள் – அதிர்ச்சி வீடியோ!

திமுகவின் விளம்பரத்திற்கு முற்றுப்புள்ளி : நயினார் நாகேந்திரன்

முதலமைச்சரின் பெயரை பயன்படுத்த தடை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் ஆணவ படுகொலைகள் நடைபெறுவது வேதனை அளிக்கிறது : ஆதி திராவிடர் பழங்குடியினர் மாநில ஆணைய தலைவர்!

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே பேருந்து திடீரென நின்றதில் சாலையில் வீசப்பட்ட கை குழுந்தை!

பீகாரின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

குஜராத் : மருத்துவ உபகரணங்கள் மிகுந்த பலனளிப்பதாக மக்கள் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies