மயிலாடுதுறை அருகே வடமாநில தொழிலாளர்கள் பெங்காலி பாடல்களை பாடியபடி குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டனர்.
கோனேரிராஜபுரம் பகுதியில் மகாதேவன் என்பவர் 40 ஏக்கரில் குறுவை நடவு செய்ய மேற்குவங்கத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்களை பணியமர்த்தியுள்ளார். ஏக்கர் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாய் சம்பளத்தில் 8 பெண்கள் உட்பட 21 தொழிலாளர்கள் நடவு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், களைப்பு தெரியாமல் இருக்க அவர்கள் பெங்காலி பாடல்களை பாடியபடி நடவு பணியில் ஈடுபட்டனர்.